Arugan 的个人资料அருகன்照片日志列表更多 ![]() | 帮助 |
அருகன்புதிய தலைமுறை ஒன்றியத்தின் தத்துவ முற்போக்கு எழுத்தாளரும், வெளியீட்டு பணிமனையும் Scrittore Tamil - Tamil writter - Italy
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
அனுமதியுள்ளோருக்கு
http://it.youtube.com/watch?v=ncxwBNIISiI
அருகனின் ஆக்கங்கள்
கல்வி
பிற தளங்களில் இருந்து
இத்தாலியில் இருந்து
இணைய பதிவுகள்
இத்தாலியில் இருந்து
|
11月20日 புதிய தலைமைக்கு… தைபிறந்தால் வழிபிறக்கும்… !!!
புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எப்போது பார்த்தாலும் கிழக்கின் பக்கமே தனது ஒழியை வீசுகின்றாரே வடக்கின் பக்கமோ அல்லது ஏனைய பக்கமோ அவரின் பார்வை குருடாக இருக்கின்றதோ!!! தேசிய நல்லிணக்க அமைச்சராக இருந்து, கிழக்கின் நல்லிணக்க அமைச்சராகப்பணியாற்றுகின்றாரோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. அமைச்சின் பதவியைவிட விசேடமாக எந்தத் தமிழனுக்கும் கிடைக்காத பெரும் சந்தர்ப்பம் அவருக்குக்கிடைத்துள்ளது. புலிகள் அமைப்பிலும் மிகப்பெரிய பொறுப்பு, இலங்கை அரசியல் கட்சியிலும் மிகப்பெரிய பொறுப்பு… பழைய புலி பதுங்குவது… மீண்டும் பாய்வதற்கோ? அல்லது, தன்னைப் பக்குவப்படுத்துவதற்கோ!!! பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதே வேளையில் மகிந்தவின் அசைவுகளும் சும்மாயில்லை… ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தனது அடிகளை எடுத்துவைப்பதற்குள் அடுத்த தேர்தல் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்துவிட்டது, கானல் நீராகும் என்றிருந்த தேர்தலே கண்ணுக்கெட்டியது என்றால், நிலையில்லாத பதவி எத்தனைதூரம் நிலைக்கப்போகின்றது என்ற வினாவும் எழாமலில்லை… புலத்தில் புலிகளின் அசைவுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருனாவை உதார்சீனப்படுத்துவதாகவும் அவரைப் பெருமைப்படுத்துவதில் இருந்தும் விலகியே வந்தவர்கள் தற்போது, என்ன செய்வதென்று அறியாது திண்டாடுகின்றார்கள். நோர்வே தேர்தல் அவ்வளவுக்கு வெற்றியளிக்கவில்லை என்பதனைக்கூட மூடி மறைக்கப்பார்க்கின்றனர். அதாவது, வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை ஆதரித்த வாக்குகள் தற்போது நடைபெற்ற தேர்தலில் வந்து விளவில்லை என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனினும், நோர்வே தனது போக்கை ஒருபுறம் செலுத்துவதாகவும் உருத்திர குமார் சார்ந்தோர் இன்னொருபுறம் நகர்த்துவதுபோன்றும் காணப்படுகின்றது. எது எப்படியாயினும். கருணாவின் போக்கில் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகள் தாமும் கால்பதிக்க முனைகின்றமை தாம் தமிழர்கள் பிரதிநிதியாகாவிட்டாலும், கருணாவை அந்த இடத்தில் வைக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டுவது தெரிகின்றது.
அவ்வாறு கருணாவால் காட்டப்படுகின்ற விடயங்களும் புலத்தில் ஒழுங்காக வந்து சேர்வதில் புலிகளின் ஆதரவாளர்கள் தடுத்துசுவர்கட்டியிருக்கின்றார்கள். பல வருடங்களாக தலைக்கணமின்றி தமிழர்கள் செயற்பட வேண்டும் என்பதனை அடித்துரைத்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காககத்தான் போனது. எனினும் இப்போது, செவிடாக இருந்தாலும் பராவாயில்லை குருடர்கள் போல் பேச்சுக்களை நடத்திப்பார்ப்போம் என்று கங்கணம் கட்டுகின்றனர். அப்போதே தந்தை செல்வா சென்ன வார்த்தை இன்றும் நிலைத்து நிற்கின்றது. தமிழர்களை இனி கடவுளாலும் காக்க முடியாது… மிக்க மகிழ்ச்சி நோர்வே நாடுகடந்த அரசவை…
அருகனின் திட்டத்திற்கு தமிழர் பேரவை கொடுத்த பெயர் “நாடு கடந்த தமிழீழ அரசு”???"மலரும் மா தமிழீழம்!,?" சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலிசக் குடியரசாக… (2006 - நாவலில் இருந்து) “அடிதடி 13” ஈழப்போராட்டமும் இலங்கையின் பதட்டமும் இலங்கையின் வரலாறு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் ஏராளம் சான்றுகள் ஏலவே கிடக்கின்றன, இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது வரலாற்றில் மாற்றப்படாமல் இருப்பதற்கு நாம் முயலவேண்டும் இதற்கான படிகளில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஆறு தசாப்தமாக, (1948ல் இருந்து) அண்ணளவாக ஒரு தலைமுறையாக, இலங்கை அரசிடம் இருந்து அந்நாட்டு மக்களில் “சட்டத்துக்கு உட்பட்ட” சமத்துவம் வழங்கப்படாமைக்கான காரணக்குரலாக ஒலித்ததன் விம்பம், இன்று உலகத்துக்கு அம்மக்களின் வதனத்தையே காட்டியுள்ளது. இதன் பிரதிபலிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு உலகத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாகனது. இப்பிரதிநிதிகள், இலங்கை அரசுடன் தமிழர்களுக்கான சமவுரிமை கோரி ஆயுதம் ஏந்த நேரிட்டுள்ளது. இதற்குத் தக்கபதிலோ அல்லது வழங்கப்படாத உரிமைகளைக் கொடுக்கவோ மறுக்கும் சிங்கள ஆதிக்கத்துக்குள் பிடிபட்டிருக்கும் அரசானது, இவ்வமைப்பைப் பயங்கரவாதக்கும்பல் என்றும் சிறுவர் துஷ்பிரயோகிகள் என்றும் உலகிற்கு அறிமுகஞ்செய்ய எத்தணித்தது. அதுவே, தமிழர்கள் பக்கமான பார்வையினை உலகத்தின் கண்களுக்குத் திருப்பிய பெரிய விளம்பரமாகும். கிட்டத்தட்ட ஒருமுழுத் தலைமுறையினையே ஆட்கொண்டுவிட்டது இப்போராட்டம். அடுத்த தலைமுறைக்கும் இப்போராட்ட நோய் தொடருமாயின், இன்னும் ஏராளம் தமிழர்களின் உயிரைக்குடித்து, உலகத்தமிழர் தொகையில் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு தமிழீழ மக்கள் சனத்தொகையில், தற்போது சாதாரணமாகவே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, முன்பு போல் அதிகமான குழந்தைகளைப் பெறும் நிலமைகள் குறைந்து போய்விட்டது. இரு பிள்ளைகளுக்குமேல் பெறும் காலகட்டம் மாற்றமடைந்துள்ளது. அதற்கு குடும்பச்சூழல், பொருளாதாரம், வயதுமுதிர்ந்த திருமணம் போன்ற பலகாரணிகள் காரணமாகிறது. தமிழீழ எல்லையின் அளவோடு ஒப்பிடும் போது இப்போராட்டகால நீடிப்பும், இழக்கப்பட்ட மக்கள் தொகையும், சேதமான பொருட்களும், ஈடுசெய்ய முடியாத மன உழைச்சலும் பன்மடங்கு அதிகம் என்றே சொல்லவேண்டும். இந்த வேளையில் இப்போராட்டத்திற்காக அதாவது, தமிழீழக் கொள்கைக்கென ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் என்று தமது உயிரினை அர்ப்பணித்தது மட்டுமல்லாமல், தமது தனிப்பட்ட ஆசைகள், எதிர்பார்ப்புக்கள், எதிர்காலங்கள் என்பவற்றை மண்ணுக்குள் புதைத்த ஈழமாதாவின் புதல்வர்களை கண்ணீரோடு நினைவுகூருகிறேன். எல்லா வளமும் நிறைந்த எமது ஈழத்தில், போர்மட்டுமே நிரந்தரம் போல் குறிப்பாக கடந்த முப்பது வருடமாக கார்மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. இன்றைய பொழுதில் தமிழர்கள் எல்லாரும் சரி, தமிழ்மற்றும் தமிழ் சார்ந்த அமைப்புக்களுஞ்சரி புதியதொரு வரலாற்றுக்கட்டத்தில் அமுக்கப்பட்டுள்ளோம் என்பதனை வாழ்க்கையின் பாதை காட்டிச்செல்கிறது. 1917ம் ஆண்டுகளில் சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் சிங்களவருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். அதன் பிரதிபலிப்பே, இன்றைய இலங்கைச் சட்டவமைப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. ஆணால் தமிழர்களின் துர்ரதிஷ்டம் இலங்கை, சிங்களவரின் பிடிக்குள்ளும், ஆரம்பத்தமிழர்கள் பதவிகளின் மற்றும் பட்டங்களின் பிடிக்குள்ளும் மட்டும் சிக்குண்டமை. அப்போதிருந்தே, தமிழர்களுக்கும், சிங்களவருக்கும் என்ற பிரிவு காட்டப்பட்டிருந்தால் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளைப்போல் காணப்பட்டிருக்கும். மாறாக முன்னுள்ளவரின் எண்ணம் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதில் இருந்தமையால் சிறுபான்மையாக இருந்த மக்களின் உரிமைகளை பிற்காலத்தில் சிங்களவர்கள் மறுத்து ஒதுக்குவார்கள் என்று நினைக்கவில்லை. எனினும் ஆரம்பச்சட்டம், தமிழ் அரசியல் கட்சிகூட அரசாங்கத்தை அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்ததையிட்டுச் சாதுர்யமாகச் சட்டத்தை, சிங்களவர் மாற்றியமைக்கும் போதுகூட தமிழர்கள் அமைதிகாட்டியதன் காரணமே இன்றைய இச் சூழ்நிலை. ஏற்கனவே கரும்புலிகளின் இரும்பொலிகள் என்ற ஆக்கத்தினுடன் பகிர்ந்து கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன் “மொழி ரீதியிலும், இனரீதியிலும் சிங்களவர் காட்டிய வேற்றுமைகள், இன்றைய கரும்புலிகளைத் தோற்றுவிக்கச் செய்தது. மூன்று பெரும் பிரிவுகளாக ஆரம்பகாலத்தில் இருந்த இலங்கையின் ஆளும் அரசுரிமை பெரும் பகுதி தமிழருக்கே உரியதும், தமிழர்களே ஆண்டு வந்ததும் மறைக்கப்பட்ட உண்மைகள். பிரித்தானியரின் மீழுகையின் போதாவது, இரு அரசுகளாக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். அப்பேற்பட்ட பாதிப்பை ஏற்படுத்திய பிரித்தானியா இப்போது கூட இதில் சிரத்தை காட்டாமல் இருப்பது சினத்திற்குரியதே. இப்போது இருக்கும் தமிழ் அரசியல்க் கட்சிகளும் த.ஈ.வி.பு இலங்கை அரசின், அரசியல்லாட்டத்தை தற்போதைய அரசாங்கத்துடன் இணந்து செய்யாவிடின் இலங்கையின் நிலை அதோகதிதான்! மட்டுமல்லாமல், தமிழர்களின் சுதந்திரம் தமிழர்களாலே நசுக்கப்பட்டுத் திண்டாடும் என்பதும் நிஜம். தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு முக்கிய ஆலோசனை ஒன்றை சொல்லமுனைகின்றேன், இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தொகையினை சற்றுக் கவனிக்கவேண்டும். இது அரசிற்கும், இலங்கை அரசியல் கட்சிகளுக்கும்தான். அதாவது, ஒவ்வொரு முறை நடைபெறும் வாக்கெடுப்புக்களில் புலம் பெயர்ந்தவர்களை கைவிடுவதால் ஏராளம் வாக்குககளை இழந்து விடுகிறார்கள். இதனால் இங்குள்ள தமிழர்களை இலங்கை அரசும், தமிழீழ விடுதலை புலிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் எம்பிக்களும், தமிழ் மந்திரிகளும் கைவிட்டுவிடுகின்றனர். மாறாக இங்குள்ளவர்களுக்கும் எப்போது வாக்கெடுப்பு நடைபெறுகிறதோ அப்போது இங்குள்ளவர்களுக்கும் பூரண உரிமைகள் கிடைக்க வாய்ப்புண்டு. “தமிழீழம்” என்றொரு சுயநிர்ணயப்பிரகண்டணம் செய்யப்படுமாயின், ஆகக்குறைந்த 10 வருடங்கள் தேவை தமிழீழத்தை அரசியல், பொருளாதார, நிதி, அபிவிருத்திக் சட்டக்கட்டமைப்புக்குள் கொண்டுவருவது என்பது சாதாரண மக்களால் உணரமுடியாததொன்று. இப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்திலும் திறம்பட இருக்கிறார்கள், அவர்கள் இப்போதிருந்தே தனிஆட்சிதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளும் சொல்லுவார்களேயானால் அது அவர்களுடைய அரசியல் சதுரங்கத்தைக் குறைத்து விடும். இவை பலமான அத்திவாரம் மட்டுமே. இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் எந்த அரசியல் அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்கவில்லை, எந்த ஆவணங்களும் உலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இல்லை, தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்த உறுப்பினரும் தமிழீழ கடவுச் சீட்டுடன் உலகத்தை வலம் வருவதில்லை, எந்த அரசியல் அதிகாரிகளுக்குமாக ஓய்வூதியப் பணம் ஒதுக்கவில்லை, தம்மைச் சூழவுள்ளவர்களுக்கும், தமக்கும் பாதுகாப்பைத் தேடியுள்ளார்களே யொழிய வேறில்லை. இதுவல்ல அரசாங்கம்!. இதுவே இலங்கை அரசியல் வாதிகளின் வெற்றிப்பிடிகள். இதில் தமிழ் அரசியல் வாதிகளின் குளிர்காயல். அரசிற்கு நிதி மட்டும் போதாது ஆட்சிநடாத்துவதற்கு உலக அங்கிகாரம் வெளியுலகப்போக்கு, உலகரீதியிலான அரசியல் மற்றங்களும் பிரச்சனைக்கான தீர்வுகளும், நாடுகளின் நல்லுறவுகள், சிங்கள அரசுடன் ஒத்துப்போதல், ஆவண இயந்திரங்கள் போன்று பல்வேறு விடையங்கள் அவசியம். முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் மூலம் தமிழீழத்தை, இலங்கை அரசு போல் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு... முட்டையை உடைத்துக்கொண்டு காலத்திற்கு ஏற்ப பறக்க வேண்டாமா? “அடிதடி 14” நாம் என்ன செய்ய வேண்டும்இலங்கை அரசிடம் இருந்து, தமிழர்களுக்குக் கிடைக்காத உரிமைகளிற் சிலவற்றை உலகு அறியும் வகையில், இங்கு விபரிக்க முனைகிறேன். இப்போதெல்லாம் வாசிப்புத்திறன் குறைந்து கொண்டே போசிறது. எனினும் வாசிப்புத்தன்மையுடையோர் இன்னும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்த போதிலும் இலங்கையின் இணையத்தள நுளைவாயிலைத் திறக்கும் போது அங்கோ மும்மொழிப் பிரயோகம் இருக்கும் என்று என்னி, தமிழுக்கு தக்க நிலையினை அரசு கொடுக்கிறது என்று எண்ணிக் கொண்டு அப்பக்கத்தினைத் திறந்தேன்... தலைப்புக்களைத்தவிர மற்றையதெல்லாம் ஆங்கிலத்திலும் பெரும்பாலும் சிங்களத்திலுமே காணப்பட்டது. மூக்குடைந்து கீழே விழுந்தது போல் இருந்தது. மனதைச் சமாதானப்படுத்திப் பார்த்து தமிழ் அமைப்புக்களின் இணையத்தைத் திறந்து பார்த்தேன் தலையே உடைந்து விழுந்தது. காரணம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்தும் காணப்பட்டன. எல்லா மொழிக்காரரும் தமது மொழியினை மேன்படுத்த முற்படுகின்றனர் ஆனால் தமக்குள் அது பற்றி பறைசாற்றுவதில்லை உதாரணம் மொறோக்கோ இனத்தவர், ஆனால் தமிழர்களோ தமக்குள் தமது மொழியைப் பற்றி பலமாகப் பறைசாற்றுவர் பிறநாட்டவரிடத்திலுஞ்சரி பிற மொழிக்காரரிடத்திலும் ஒதுங்கிச் செல்கின்றனர். இணயத்தளத்தைப்பற்றியே மேலும் முறையிட விரும்புகிறேன். அதாவது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் பல்வேறு பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்கள் எதனைப் பார்ப்பதென்றே புரியவில்லை யாருடைய தகவல் உண்மை என்று உணர முடிவதில்லை. சிறிது காலத்தின் பின்னர் தொடங்கப்படுகின்ற இணையத்தளங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது படிப்படியாகக் குறைந்து பின்நிலைக்குச் சென்று விடுகிறது. ஒளி,ஒலி பரப்புக்களும் அவ்வாறே அமைகின்றன இவையெல்லாம் எமது ஆளுமைப்பின்னடைவையே காட்டுகிறது. இதற்கும் ஆழுமைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்க வேண்டாம் நிறையவே இருக்கிறது ஆழமாகவே கிடக்கிறது. அதாவது இலாப நோக்கத்தை முதலில் நிறுத்தி மக்களின் நன்மையினைக் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு அரசு அமைக்கப்பட வேண்டுமோ அவ்வாறே அரச சேவைகளும் அமைக்கப்பட வேண்டும். அதாவது, இவையனைத்தும் முதலில் ஒரு கட்டமைப்பிற்குள் வரவேண்டும் அதனுள் எத்தனை பிரிவுகள் வேண்டுமென்றாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அது தொடர்புச் சாதனமாக இருந்தாலுஞ்சரி, இணையத்தளமாக இருந்தாலுஞ்சரி, அமைப்பாக இருந்தாலுஞ்சரி, ஏன் அரசாக இருந்தாலுஞ்சரி. இதில் யாரிடம் மக்கள் தொடர்பு மற்றும் சேவைஎண்ணம் மேலும் மக்கள் நலம் புதைந்து கிடக்கிறதோ அவற்றைத் தேடி அதிகாரப் பலமுள்ளோர், ஆயுதப்பலமுள்ளோர், பணபலமுள்ளோர் மட்டுமல்லாது ஆட்சிப்பலமுள்ளோர் கூட கைகோத்துக்கொண்டால் தப்பென்ன இருக்கிநது. இதில் மானப்பிரச்சினைக்கு இடமில்லை தந்திரத்திற்குத்தான் இடம். இவைபோன்று விடையங்களையும் அரச பீடத்தில் அமர்வோர் முதலில் சீர்செய்தால் தான் ஆட்சி மக்களைச் சென்றடையக்கூடியதாக இருக்கும் இல்லா விட்டால் மக்களுக்குச் சேரவேண்டியவை அனைத்தும் ஒருசில அதிகாரிகளிடம் புதைக்கப்பட்டுவிடுமல்லவா? ஈழத்தின் பாதை திறக்கிறது…
விடுதலைப்போராட்டம் என்றால் அதற்காகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடைய செயற்பாட்டை பயங்கரவாத செயல் என்னும் பட்டியலில் இருந்து களையவேண்டும்.அது உலக அளவில் இடம்பெறவேண்டும். முக்கியம் அமேரிக்காவின் பார்வை கூர்மையாக ஈழத்தை தொடவேண்டும். பயங்கரவாதம் என்றால் எப்போதுமே தீர்க்க முடியாத அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கநேரிடும் அதாவது இலங்கை அரசிடம் மட்டுமல்ல போராட்டத்தில் ஈடுபடுகின்ற பலம் பொருந்திய அமைப்பிடமும் தான். எங்களுடைய மக்களின் எண்ணத்தில், தமிழீழ வி.பு. மிகப்பலம் பொருந்தியவர்கள் என்ற எண்ணம் பதிந்துள்ளது, அவர்களால் தற்போதே ஈழம் ஆளப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்ற கருத்தும் பலமாகவே இருக்கிறது. ஆனால் ஒருவிடையத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தமிழீழ வி.பு. ஆட்சிஎன்பது தமிழர்களிடம் இருந்து பெறப்படும் தொகையில் இருந்தும் பல்வேறு இலாபகரமான தொழிற்பாட்டில் இருந்தும் பல்வேறு சேவை அமைப்புக்களிடம் இருந்தும் தமது தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். எனினும், ஒரு அரசு பெற்றுக்கொள்ளும் வரிவீதம் இவர்களுடைய வரிவீதத்தை தனிமைப்படுத்திக்காட்டுகிறது.
இத்தாலியின் சட்டங்கள் இத்தாலிமொழியில் வெளியிடுவதுபோல் அவர்கள் மொழியிலும் வெளியிடப்படுகிறது. இதற்கு அவர்களுடைய மக்கள் தொகை ஒருகாரணமாக இருந்தாலும் முயற்சியும் தம்மைப் பெருமைப்படுத்தும் தன்மையுமே முன்னிற்கிறது. மாறாக எம்மவர் மத்தியில் இச்செயற்பாடு மாறுபட்டுக்காணப்படுகிறது. தமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதில் பெருமைப் படுகின்றார்களேயொழிய தமிழ் மொழி தெரியாது என்பதில் சிறுமைப் படுவதில்லை. மொழி மட்டுமே எம்மை பிரித்துக்காட்டக்கூடியது. எமது போராட்டத்தின் வெற்றி தமிழின் விரிவு படுத்தலிலே பெரிதும் தங்கியுள்ளது. இந்த முயற்சியினை எழுத்து முறைமூலம் மட்டும் நான் வினாவவில்லை, செயற்பாட்டு மூலம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனினும், … அதன்பலனை அனுபவிப்போர் தமக்குள்ளே அது பற்றி பகிர்ந்து கொள்வதனைத் தவிர்த்துக் கொள்கின்றனர். த.வி.பு. தமது செயற்பாட்டில் ஒருசில உலகளவிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் உலகம் தனது பார்வையினை அவர்கள் பக்கம் திருப்பவேண்டும் அதற்கு இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தத்தேவையில்லை. என்ன செய்யவேண்டும் என்பதனை அடுத்த வரிகள் தெளிவுபடுத்தும். இதோ ஒரு சிறு கதை ஆரம்ப காலத்தில் ஆழும் அரசிடம் இருந்த கிடைக்காத உரிமைகளை உடைத்தெறிவதற்காக தலைமுறை தலைமுறையாக தம்மை அடைவுவைத்தனர். இப்போது ஆரம்பத்தில் இருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டது. தம்மால் உருவாக்கிய அமைப்பிடம் இருந்து தம்மை விடுவிக்கத் தடயந்தேடினர், அவ்வமைப்பு பலத்திலும் பணத்திலும் பதவியிலும் பட்டத்திலும் மிதந்து கொண்டிருந்தது. மக்களோ அகதிகளாயினர் அநாதைகளாயினர் ஆதரவற்றனர்… பணபலத்தைக் கொண்டு இவ்வமைப்பு தம்மைத் திடப்படுத்தத் தொடங்கி மிகப்பெரிய வல்லரசிடம் இருந்து உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தீவொன்றை விலைகொடுத்து வாங்கினர் இப்போது முன்னைய போராட்ட மக்கள் இன்னும் அவ்வமைப்பினை நம்பிக் கொண்டிருக்கின்றனர் அப்பாவிகள் வெளியுலகநடப்புத் தெரியாமல் அவ்வமைப்பினை பூஜிக்கின்றனர். முன்னைய காலத்தில் விஜயன் எவ்வாறு இலங்கையில் தன்னுடைய தோழர்கள் 700 பேருடன் வந்தடைந்தானோ அவ்வாறு இவ்வமைப்பும் 5000பேருடன் இத்தீவில் குடிபுகுந்தனர். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை, அவர்களுக்கென்று ஒருதேசம், அவர்களுக்கென்று ஒரு சட்டம், அவர்களுக்கென்று ஒரு சரித்திரம். ஏமாந்த மக்களுக்குத் தெரியும் போது இப்படித் தூபங்காட்டினர்,“ அங்கிருந்துதான் எமது படையினைத் தயாரித்து உங்களுக்கு விடுதலை அளிக்கப்போகிறோம்”
தமக்காகப் போராடிய விரர்களை அப்பாவி மக்கள் இன்னும் பூஜிக்கிறார்கள்… இது வெறும் கற்பனையல்ல பலமுள்ள அரசுகள் காலத்தை இப்படியும் மாற்றக்கூடும். (உதாரணம் கிட்லர் வரலாறு…) இது இப்படிஇருக்க “சே” என்றொரு மனிததெய்வம் நினைவிற்கு வருகிறது… அதன் விம்பம் இன்றுவரை “பிடெல் காஸ்றோவை” உலக கட்டுமாணத்திற்கு மாறாக நிரந்தர முதலமைச்சராக்கியது. இப்போது அவருடைய சகோதரர்… இங்கு ஐ.நா. சபையின் விம்பத்தைப் பிரதிபலிக்க முனைகிறேன். இலங்கை அரசு தொடர்புடைய தமிழர்கள், இனி அக்கறையுடன் செயற்படவேண்டும். அரசால் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் தமிழிலும் இருக்க வேண்டும். இல்லாவிடில் அதற்கான பொறுப்பு அரசுடையதல்ல, அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்களுடையதே! இதுதொடர்பாக மேலும் பலவிடையங்கள் தொடர்கின்றன… மேலும் "மலருமா தமிழீழம்" நாவலின் மற்றைய “அடிதடி”கள் இதன்மூலம் வெளிப்படும். காத்திருங்கள் - இந்த ஆக்கம் போர் அதிகரிக்கும் முன்னே இதனைச்சார்ந்த அமைப்புக்களுக்கு அரசியல் விமர்சக நாவலாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இப்போதும் தான்தோன்றித் தனமாக எனது எழுத்துக்களின் விம்பங்களை செயற்படுத்த எத்தணிக்கின்றார்கள் ஆனால் தாமாக மேற்கொண்டதாக செயற்பட முயற்சிக்கின்றார்கள் இதன் அடுத்த கட்டம் என்ன வென்று அவர்களுக்குத் தெரியுமா???-(26/06/2009),(19/11/2009) “நாடு கடந்த தமிழீழ அரசு”??? - AruganUNGAன் திட்டத்திற்கு தமிழர் பேரவை கொடுத்த பெயர் “நாடு கடந்த தமிழீழ அரசு”???"மலரும் மா தமிழீழம்!,?" சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலிசக் குடியரசாக… (2006 - நாவலில் இருந்து) “அடிதடி 13” ஈழப்போராட்டமும் இலங்கையின் பதட்டமும் இலங்கையின் வரலாறு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் ஏராளம் சான்றுகள் ஏலவே கிடக்கின்றன, இப்போது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது வரலாற்றில் மாற்றப்படாமல் இருப்பதற்கு நாம் முயலவேண்டும் இதற்கான படிகளில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஆறு தசாப்தமாக, (1948ல் இருந்து) அண்ணளவாக ஒரு தலைமுறையாக, இலங்கை அரசிடம் இருந்து அந்நாட்டு மக்களில் “சட்டத்துக்கு உட்பட்ட” சமத்துவம் வழங்கப்படாமைக்கான காரணக்குரலாக ஒலித்ததன் விம்பம், இன்று உலகத்துக்கு அம்மக்களின் வதனத்தையே காட்டியுள்ளது. இதன் பிரதிபலிப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் அமைப்பு உலகத்தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாகனது. இப்பிரதிநிதிகள், இலங்கை அரசுடன் தமிழர்களுக்கான சமவுரிமை கோரி ஆயுதம் ஏந்த நேரிட்டுள்ளது. இதற்குத் தக்கபதிலோ அல்லது வழங்கப்படாத உரிமைகளைக் கொடுக்கவோ மறுக்கும் சிங்கள ஆதிக்கத்துக்குள் பிடிபட்டிருக்கும் அரசானது, இவ்வமைப்பைப் பயங்கரவாதக்கும்பல் என்றும் சிறுவர் துஷ்பிரயோகிகள் என்றும் உலகிற்கு அறிமுகஞ்செய்ய எத்தணித்தது. அதுவே, தமிழர்கள் பக்கமான பார்வையினை உலகத்தின் கண்களுக்குத் திருப்பிய பெரிய விளம்பரமாகும். கிட்டத்தட்ட ஒருமுழுத் தலைமுறையினையே ஆட்கொண்டுவிட்டது இப்போராட்டம். அடுத்த தலைமுறைக்கும் இப்போராட்ட நோய் தொடருமாயின், இன்னும் ஏராளம் தமிழர்களின் உயிரைக்குடித்து, உலகத்தமிழர் தொகையில் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு தமிழீழ மக்கள் சனத்தொகையில், தற்போது சாதாரணமாகவே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, முன்பு போல் அதிகமான குழந்தைகளைப் பெறும் நிலமைகள் குறைந்து போய்விட்டது. இரு பிள்ளைகளுக்குமேல் பெறும் காலகட்டம் மாற்றமடைந்துள்ளது. அதற்கு குடும்பச்சூழல், பொருளாதாரம், வயதுமுதிர்ந்த திருமணம் போன்ற பலகாரணிகள் காரணமாகிறது. தமிழீழ எல்லையின் அளவோடு ஒப்பிடும் போது இப்போராட்டகால நீடிப்பும், இழக்கப்பட்ட மக்கள் தொகையும், சேதமான பொருட்களும், ஈடுசெய்ய முடியாத மன உழைச்சலும் பன்மடங்கு அதிகம் என்றே சொல்லவேண்டும். இந்த வேளையில் இப்போராட்டத்திற்காக அதாவது, தமிழீழக் கொள்கைக்கென ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் என்று தமது உயிரினை அர்ப்பணித்தது மட்டுமல்லாமல், தமது தனிப்பட்ட ஆசைகள், எதிர்பார்ப்புக்கள், எதிர்காலங்கள் என்பவற்றை மண்ணுக்குள் புதைத்த ஈழமாதாவின் புதல்வர்களை கண்ணீரோடு நினைவுகூருகிறேன். எல்லா வளமும் நிறைந்த எமது ஈழத்தில், போர்மட்டுமே நிரந்தரம் போல் குறிப்பாக கடந்த முப்பது வருடமாக கார்மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. இன்றைய பொழுதில் தமிழர்கள் எல்லாரும் சரி, தமிழ்மற்றும் தமிழ் சார்ந்த அமைப்புக்களுஞ்சரி புதியதொரு வரலாற்றுக்கட்டத்தில் அமுக்கப்பட்டுள்ளோம் என்பதனை வாழ்க்கையின் பாதை காட்டிச்செல்கிறது. 1917ம் ஆண்டுகளில் சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் சிங்களவருடன் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். அதன் பிரதிபலிப்பே, இன்றைய இலங்கைச் சட்டவமைப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. ஆணால் தமிழர்களின் துர்ரதிஷ்டம் இலங்கை, சிங்களவரின் பிடிக்குள்ளும், ஆரம்பத்தமிழர்கள் பதவிகளின் மற்றும் பட்டங்களின் பிடிக்குள்ளும் மட்டும் சிக்குண்டமை. அப்போதிருந்தே, தமிழர்களுக்கும், சிங்களவருக்கும் என்ற பிரிவு காட்டப்பட்டிருந்தால் இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளைப்போல் காணப்பட்டிருக்கும். மாறாக முன்னுள்ளவரின் எண்ணம் ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதில் இருந்தமையால் சிறுபான்மையாக இருந்த மக்களின் உரிமைகளை பிற்காலத்தில் சிங்களவர்கள் மறுத்து ஒதுக்குவார்கள் என்று நினைக்கவில்லை. எனினும் ஆரம்பச்சட்டம், தமிழ் அரசியல் கட்சிகூட அரசாங்கத்தை அமைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்ததையிட்டுச் சாதுர்யமாகச் சட்டத்தை, சிங்களவர் மாற்றியமைக்கும் போதுகூட தமிழர்கள் அமைதிகாட்டியதன் காரணமே இன்றைய இச் சூழ்நிலை. ஏற்கனவே கரும்புலிகளின் இரும்பொலிகள் என்ற ஆக்கத்தினுடன் பகிர்ந்து கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன் “மொழி ரீதியிலும், இனரீதியிலும் சிங்களவர் காட்டிய வேற்றுமைகள், இன்றைய கரும்புலிகளைத் தோற்றுவிக்கச் செய்தது. மூன்று பெரும் பிரிவுகளாக ஆரம்பகாலத்தில் இருந்த இலங்கையின் ஆளும் அரசுரிமை பெரும் பகுதி தமிழருக்கே உரியதும், தமிழர்களே ஆண்டு வந்ததும் மறைக்கப்பட்ட உண்மைகள். பிரித்தானியரின் மீழுகையின் போதாவது, இரு அரசுகளாக்கப்பட்டிருந்தால் அது வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். அப்பேற்பட்ட பாதிப்பை ஏற்படுத்திய பிரித்தானியா இப்போது கூட இதில் சிரத்தை காட்டாமல் இருப்பது சினத்திற்குரியதே. இப்போது இருக்கும் தமிழ் அரசியல்க் கட்சிகளும் த.ஈ.வி.பு இலங்கை அரசின், அரசியல்லாட்டத்தை தற்போதைய அரசாங்கத்துடன் இணந்து செய்யாவிடின் இலங்கையின் நிலை அதோகதிதான்! மட்டுமல்லாமல், தமிழர்களின் சுதந்திரம் தமிழர்களாலே நசுக்கப்பட்டுத் திண்டாடும் என்பதும் நிஜம். தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு முக்கிய ஆலோசனை ஒன்றை சொல்லமுனைகின்றேன், இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தொகையினை சற்றுக் கவனிக்கவேண்டும். இது அரசிற்கும், இலங்கை அரசியல் கட்சிகளுக்கும்தான். அதாவது, ஒவ்வொரு முறை நடைபெறும் வாக்கெடுப்புக்களில் புலம் பெயர்ந்தவர்களை கைவிடுவதால் ஏராளம் வாக்குககளை இழந்து விடுகிறார்கள். இதனால் இங்குள்ள தமிழர்களை இலங்கை அரசும், தமிழீழ விடுதலை புலிகளும், தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் எம்பிக்களும், தமிழ் மந்திரிகளும் கைவிட்டுவிடுகின்றனர். மாறாக இங்குள்ளவர்களுக்கும் எப்போது வாக்கெடுப்பு நடைபெறுகிறதோ அப்போது இங்குள்ளவர்களுக்கும் பூரண உரிமைகள் கிடைக்க வாய்ப்புண்டு. “தமிழீழம்” என்றொரு சுயநிர்ணயப்பிரகண்டணம் செய்யப்படுமாயின், ஆகக்குறைந்த 10 வருடங்கள் தேவை தமிழீழத்தை அரசியல், பொருளாதார, நிதி, அபிவிருத்திக் சட்டக்கட்டமைப்புக்குள் கொண்டுவருவது என்பது சாதாரண மக்களால் உணரமுடியாததொன்று. இப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்திலும் திறம்பட இருக்கிறார்கள், அவர்கள் இப்போதிருந்தே தனிஆட்சிதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் தவிர தமிழீழ விடுதலைப் புலிகளும் சொல்லுவார்களேயானால் அது அவர்களுடைய அரசியல் சதுரங்கத்தைக் குறைத்து விடும். இவை பலமான அத்திவாரம் மட்டுமே. இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் எந்த அரசியல் அதிகாரிகளுக்கும் ஊதியம் வழங்கவில்லை, எந்த ஆவணங்களும் உலக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இல்லை, தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்த உறுப்பினரும் தமிழீழ கடவுச் சீட்டுடன் உலகத்தை வலம் வருவதில்லை, எந்த அரசியல் அதிகாரிகளுக்குமாக ஓய்வூதியப் பணம் ஒதுக்கவில்லை, தம்மைச் சூழவுள்ளவர்களுக்கும், தமக்கும் பாதுகாப்பைத் தேடியுள்ளார்களே யொழிய வேறில்லை. இதுவல்ல அரசாங்கம்!. இதுவே இலங்கை அரசியல் வாதிகளின் வெற்றிப்பிடிகள். இதில் தமிழ் அரசியல் வாதிகளின் குளிர்காயல். அரசிற்கு நிதி மட்டும் போதாது ஆட்சிநடாத்துவதற்கு உலக அங்கிகாரம் வெளியுலகப்போக்கு, உலகரீதியிலான அரசியல் மற்றங்களும் பிரச்சனைக்கான தீர்வுகளும், நாடுகளின் நல்லுறவுகள், சிங்கள அரசுடன் ஒத்துப்போதல், ஆவண இயந்திரங்கள் போன்று பல்வேறு விடையங்கள் அவசியம். முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளை உலக அரசுகள் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் மூலம் தமிழீழத்தை, இலங்கை அரசு போல் அங்கிகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு... முட்டையை உடைத்துக்கொண்டு காலத்திற்கு ஏற்ப பறக்க வேண்டாமா? “அடிதடி 14” நாம் என்ன செய்ய வேண்டும்இலங்கை அரசிடம் இருந்து, தமிழர்களுக்குக் கிடைக்காத உரிமைகளிற் சிலவற்றை உலகு அறியும் வகையில், இங்கு விபரிக்க முனைகிறேன். இப்போதெல்லாம் வாசிப்புத்திறன் குறைந்து கொண்டே போசிறது. எனினும் வாசிப்புத்தன்மையுடையோர் இன்னும் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்த போதிலும் இலங்கையின் இணையத்தள நுளைவாயிலைத் திறக்கும் போது அங்கோ மும்மொழிப் பிரயோகம் இருக்கும் என்று என்னி, தமிழுக்கு தக்க நிலையினை அரசு கொடுக்கிறது என்று எண்ணிக் கொண்டு அப்பக்கத்தினைத் திறந்தேன்... தலைப்புக்களைத்தவிர மற்றையதெல்லாம் ஆங்கிலத்திலும் பெரும்பாலும் சிங்களத்திலுமே காணப்பட்டது. மூக்குடைந்து கீழே விழுந்தது போல் இருந்தது. மனதைச் சமாதானப்படுத்திப் பார்த்து தமிழ் அமைப்புக்களின் இணையத்தைத் திறந்து பார்த்தேன் தலையே உடைந்து விழுந்தது. காரணம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே அனைத்தும் காணப்பட்டன. எல்லா மொழிக்காரரும் தமது மொழியினை மேன்படுத்த முற்படுகின்றனர் ஆனால் தமக்குள் அது பற்றி பறைசாற்றுவதில்லை உதாரணம் மொறோக்கோ இனத்தவர், ஆனால் தமிழர்களோ தமக்குள் தமது மொழியைப் பற்றி பலமாகப் பறைசாற்றுவர் பிறநாட்டவரிடத்திலுஞ்சரி பிற மொழிக்காரரிடத்திலும் ஒதுங்கிச் செல்கின்றனர். இணயத்தளத்தைப்பற்றியே மேலும் முறையிட விரும்புகிறேன். அதாவது ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்கள் பல்வேறு பட்ட இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளார்கள் எதனைப் பார்ப்பதென்றே புரியவில்லை யாருடைய தகவல் உண்மை என்று உணர முடிவதில்லை. சிறிது காலத்தின் பின்னர் தொடங்கப்படுகின்ற இணையத்தளங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது படிப்படியாகக் குறைந்து பின்நிலைக்குச் சென்று விடுகிறது. ஒளி,ஒலி பரப்புக்களும் அவ்வாறே அமைகின்றன இவையெல்லாம் எமது ஆளுமைப்பின்னடைவையே காட்டுகிறது. இதற்கும் ஆழுமைக்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்க வேண்டாம் நிறையவே இருக்கிறது ஆழமாகவே கிடக்கிறது. அதாவது இலாப நோக்கத்தை முதலில் நிறுத்தி மக்களின் நன்மையினைக் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு அரசு அமைக்கப்பட வேண்டுமோ அவ்வாறே அரச சேவைகளும் அமைக்கப்பட வேண்டும். அதாவது, இவையனைத்தும் முதலில் ஒரு கட்டமைப்பிற்குள் வரவேண்டும் அதனுள் எத்தனை பிரிவுகள் வேண்டுமென்றாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அது தொடர்புச் சாதனமாக இருந்தாலுஞ்சரி, இணையத்தளமாக இருந்தாலுஞ்சரி, அமைப்பாக இருந்தாலுஞ்சரி, ஏன் அரசாக இருந்தாலுஞ்சரி. இதில் யாரிடம் மக்கள் தொடர்பு மற்றும் சேவைஎண்ணம் மேலும் மக்கள் நலம் புதைந்து கிடக்கிறதோ அவற்றைத் தேடி அதிகாரப் பலமுள்ளோர், ஆயுதப்பலமுள்ளோர், பணபலமுள்ளோர் மட்டுமல்லாது ஆட்சிப்பலமுள்ளோர் கூட கைகோத்துக்கொண்டால் தப்பென்ன இருக்கிநது. இதில் மானப்பிரச்சினைக்கு இடமில்லை தந்திரத்திற்குத்தான் இடம். இவைபோன்று விடையங்களையும் அரச பீடத்தில் அமர்வோர் முதலில் சீர்செய்தால் தான் ஆட்சி மக்களைச் சென்றடையக்கூடியதாக இருக்கும் இல்லா விட்டால் மக்களுக்குச் சேரவேண்டியவை அனைத்தும் ஒருசில அதிகாரிகளிடம் புதைக்கப்பட்டுவிடுமல்லவா? ஈழத்தின் பாதை திறக்கிறது…
விடுதலைப்போராட்டம் என்றால் அதற்காகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடைய செயற்பாட்டை பயங்கரவாத செயல் என்னும் பட்டியலில் இருந்து களையவேண்டும்.அது உலக அளவில் இடம்பெறவேண்டும். முக்கியம் அமேரிக்காவின் பார்வை கூர்மையாக ஈழத்தை தொடவேண்டும். பயங்கரவாதம் என்றால் எப்போதுமே தீர்க்க முடியாத அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கநேரிடும் அதாவது இலங்கை அரசிடம் மட்டுமல்ல போராட்டத்தில் ஈடுபடுகின்ற பலம் பொருந்திய அமைப்பிடமும் தான். எங்களுடைய மக்களின் எண்ணத்தில், தமிழீழ வி.பு. மிகப்பலம் பொருந்தியவர்கள் என்ற எண்ணம் பதிந்துள்ளது, அவர்களால் தற்போதே ஈழம் ஆளப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்ற கருத்தும் பலமாகவே இருக்கிறது. ஆனால் ஒருவிடையத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தமிழீழ வி.பு. ஆட்சிஎன்பது தமிழர்களிடம் இருந்து பெறப்படும் தொகையில் இருந்தும் பல்வேறு இலாபகரமான தொழிற்பாட்டில் இருந்தும் பல்வேறு சேவை அமைப்புக்களிடம் இருந்தும் தமது தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். எனினும், ஒரு அரசு பெற்றுக்கொள்ளும் வரிவீதம் இவர்களுடைய வரிவீதத்தை தனிமைப்படுத்திக்காட்டுகிறது.
இத்தாலியின் சட்டங்கள் இத்தாலிமொழியில் வெளியிடுவதுபோல் அவர்கள் மொழியிலும் வெளியிடப்படுகிறது. இதற்கு அவர்களுடைய மக்கள் தொகை ஒருகாரணமாக இருந்தாலும் முயற்சியும் தம்மைப் பெருமைப்படுத்தும் தன்மையுமே முன்னிற்கிறது. மாறாக எம்மவர் மத்தியில் இச்செயற்பாடு மாறுபட்டுக்காணப்படுகிறது. தமக்கு ஆங்கிலம் தெரியும் என்பதில் பெருமைப் படுகின்றார்களேயொழிய தமிழ் மொழி தெரியாது என்பதில் சிறுமைப் படுவதில்லை. மொழி மட்டுமே எம்மை பிரித்துக்காட்டக்கூடியது. எமது போராட்டத்தின் வெற்றி தமிழின் விரிவு படுத்தலிலே பெரிதும் தங்கியுள்ளது. இந்த முயற்சியினை எழுத்து முறைமூலம் மட்டும் நான் வினாவவில்லை, செயற்பாட்டு மூலம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனினும், … அதன்பலனை அனுபவிப்போர் தமக்குள்ளே அது பற்றி பகிர்ந்து கொள்வதனைத் தவிர்த்துக் கொள்கின்றனர். த.வி.பு. தமது செயற்பாட்டில் ஒருசில உலகளவிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் உலகம் தனது பார்வையினை அவர்கள் பக்கம் திருப்பவேண்டும் அதற்கு இலங்கையில் நடக்கும் போராட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தத்தேவையில்லை. என்ன செய்யவேண்டும் என்பதனை அடுத்த வரிகள் தெளிவுபடுத்தும். இதோ ஒரு சிறு கதை ஆரம்ப காலத்தில் ஆழும் அரசிடம் இருந்த கிடைக்காத உரிமைகளை உடைத்தெறிவதற்காக தலைமுறை தலைமுறையாக தம்மை அடைவுவைத்தனர். இப்போது ஆரம்பத்தில் இருந்த உரிமைகளும் பறிக்கப்பட்டது. தம்மால் உருவாக்கிய அமைப்பிடம் இருந்து தம்மை விடுவிக்கத் தடயந்தேடினர், அவ்வமைப்பு பலத்திலும் பணத்திலும் பதவியிலும் பட்டத்திலும் மிதந்து கொண்டிருந்தது. மக்களோ அகதிகளாயினர் அநாதைகளாயினர் ஆதரவற்றனர்… பணபலத்தைக் கொண்டு இவ்வமைப்பு தம்மைத் திடப்படுத்தத் தொடங்கி மிகப்பெரிய வல்லரசிடம் இருந்து உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தீவொன்றை விலைகொடுத்து வாங்கினர் இப்போது முன்னைய போராட்ட மக்கள் இன்னும் அவ்வமைப்பினை நம்பிக் கொண்டிருக்கின்றனர் அப்பாவிகள் வெளியுலகநடப்புத் தெரியாமல் அவ்வமைப்பினை பூஜிக்கின்றனர். முன்னைய காலத்தில் விஜயன் எவ்வாறு இலங்கையில் தன்னுடைய தோழர்கள் 700 பேருடன் வந்தடைந்தானோ அவ்வாறு இவ்வமைப்பும் 5000பேருடன் இத்தீவில் குடிபுகுந்தனர். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை, அவர்களுக்கென்று ஒருதேசம், அவர்களுக்கென்று ஒரு சட்டம், அவர்களுக்கென்று ஒரு சரித்திரம். ஏமாந்த மக்களுக்குத் தெரியும் போது இப்படித் தூபங்காட்டினர்,“ அங்கிருந்துதான் எமது படையினைத் தயாரித்து உங்களுக்கு விடுதலை அளிக்கப்போகிறோம்”
தமக்காகப் போராடிய விரர்களை அப்பாவி மக்கள் இன்னும் பூஜிக்கிறார்கள்… இது வெறும் கற்பனையல்ல பலமுள்ள அரசுகள் காலத்தை இப்படியும் மாற்றக்கூடும். (உதாரணம் கிட்லர் வரலாறு…) இது இப்படிஇருக்க “சே” என்றொரு மனிததெய்வம் நினைவிற்கு வருகிறது… அதன் விம்பம் இன்றுவரை “பிடெல் காஸ்றோவை” உலக கட்டுமாணத்திற்கு மாறாக நிரந்தர முதலமைச்சராக்கியது. இப்போது அவருடைய சகோதரர்… இங்கு ஐ.நா. சபையின் விம்பத்தைப் பிரதிபலிக்க முனைகிறேன். இலங்கை அரசு தொடர்புடைய தமிழர்கள், இனி அக்கறையுடன் செயற்படவேண்டும். அரசால் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் தமிழிலும் இருக்க வேண்டும். இல்லாவிடில் அதற்கான பொறுப்பு அரசுடையதல்ல, அரசில் அங்கம் வகிக்கும் தமிழர்களுடையதே! இதுதொடர்பாக மேலும் பலவிடையங்கள் தொடர்கின்றன… மேலும் "மலருமா தமிழீழம்" நாவலின் மற்றைய “அடிதடி”கள் இதன்மூலம் வெளிப்படும். காத்திருங்கள் - இந்த ஆக்கம் போர் அதிகரிக்கும் முன்னே இதனைச்சார்ந்த அமைப்புக்களுக்கு அரசியல் விமர்சக நாவலாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இப்போதும் தான்தோன்றித் தனமாக எனது எழுத்துக்களின் விம்பங்களை செயற்படுத்த எத்தணிக்கின்றார்கள் ஆனால் தாமாக மேற்கொண்டதாக செயற்பட முயற்சிக்கின்றார்கள் இதன் அடுத்த கட்டம் என்ன வென்று அவர்களுக்குத் தெரியுமா???-(26/06/2009),(19/11/2009) ஈழத்தமிழர்களின் துரோகி என்ற பெயர் யாருக்குப் பொருந்தும்…ஈழத்தமிழர்களின் துரோகி என்ற பெயர் யாருக்குப் பொருந்தும்… முன்னாள் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போக்கிற்கு எதிராக இருந்த அனைவரையும் துரோகிகள் என்று வசைபாடிய புலிகளின் ஆதரவாளர்களும், புலிகளின் உறுப்பினர்களும் இன்று எவ்வாறு தமது பாதைகளை திருப்பியுள்ளார்கள் என்பதகை கண்காணிக்கவேண்டும். தமிழ் மக்கள் நலன்கருதி தமிழர் ஆதரவாளர்களால் எடுக்கப்பட்ட அனைத்தையும் கண்டித்தும், தண்டித்தும், மக்கள் மத்தியில் எதிர்ப்பையும்தூண்டிவந்த பிரபாவின் ஆதரவாளர்கள் இப்போது, இருதலைக்கொள்ளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தேசத்தின்குரல்சிலகாலம் சிறைக்குள்சிக்கிய குரலாக இருந்தது ஏன்??? ஒபெராய்தேவன் தேகத்தைவிட்டு உயிர்பிரிந்ததுஏன்??? மாத்தையாஉறவினராக இருந்தும் தலைகவுண்டது ஏன்??? கருணாவின் பிரிவின்போது புலிகளின் ஆதரவாளர்களால் அவர் துரோகியாகக்கருதப்பட்டதன் காரணம்ஏன்??? புலிகள் தவிர்ந்த மற்றைய அமைப்புக்களை மக்களிடம் மாற்றுக்கருத்துள்ளவர்கள் என்று பிணக்குகளை உருவாக்கியது ஏன்??? எத்தனையோ திறனுள்ள போராளிகள் இருந்தும் அவர்களின் பெயர் புலிகள் அமைப்பில் வெளிவராததற்குக்காரணம் ஏன்??? இப்போது மேற்கேட்ட கேள்வியைக்கேட்டுப்பார்ப்போம் … இதிலிருந்து என்ன விளங்கிக்கொள்ள முடிகின்றது? பிரபாகரனுக்கு அடுத்தாற்போல் யாரும் இன்றுவரை பிரபாகரனால் நிர்ணயிக்கப்படவில்லை. அது தனது பிள்ளையுட்பட… அண்மையில் ஒரு புகைப்படத்தை வைத்துப் பூச்சாண்டி காட்டி வருகின்றனர் சிலர். இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கும் ஊடகங்கள் தண்டிக்கப்படவேண்டும். அப்போதுதான் உண்மைகள் துணிச்சலாக வெளிவரும். இன்றுவரை இலங்கை அரசால் சொல்லில் அடங்காத முன்னெடுப்புகள் தமிழர்களுக்கு நிகழ்ந்த போதிலும் புலிகளுக்கு ஆதரவான தளங்கள் அவற்றை வெளியிடாமல், மக்கள் மத்தியில் கிழற்சியைத்தூண்டும் தகவல்களையே வெளியிடுகின்றன. உதாரணமாக, இலங்கைஇராணுவத்தால் நடாத்தப்பட்ட இறுதிக்கட்டப்போரில் இலங்கைஇராணுவம் கணரக ஆயுதங்களைப்பாவித்தது என்றால் புலிகள் என்ன புல்லாபுடுங்கிக்கொண்டிருந்தார்கள். இதற்கு முன்னர் புலிகளுக்கு ஆதரவான தளங்களில் புலிகளிடம் இருக்கும் ஆயுதங்கள் இலங்கை அரசிடமே இல்லை என்று மார்தட்டி வெளியிட்ட செய்திகளுக்கும் இப்போது இறுதிப்போரின்போது வாளவிருப்பதற்கும் மாறுபட்ட கருத்துக்காணப்படுகின்றதே!!! இப்போர் ஆரம்பிக்கும் முன்னரே புலிகளிடம் இருந்து பிரிந்த கருனா அவர்கள் புலிகளிடம் நச்சுவாயுஆயுதங்கள் இருந்ததாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் புலத்தில் இருந்து பார்க்கும் போது இலங்கை இராணுவம் தமிழர்களைத்தாகஇகியது அடித்தது வெட்டியது, கொத்தியது, என்று தொடர்ந்து செல்கின்ற போதிலும் விடுதலைப்புலிகளின் போக்குகள் பற்றிய தகவல்களை ஆரம்பத்தில் இருந்தே மறைத்துவந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுபோலவே தமிழர்களால் தமிழர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவும் உதவியும் செய்துவந்த புலிகளைச்சாராத அங்கத்தவர்களின் செயற்பாட்டையும் மறைத்தேவந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது, புலத்தில் இருந்து கூச்சல்போடும் புலிகளின் ஆதரவாளர்கள் எப்போதுமே இலங்கை அரசை குறைசொல்லிக்கொண்டே இருக்கின்றனர். இந்த வேளையில் கருணா துரோகத்திற்குத்துணைபோனானு ஏனென்றால் இலங்கை அரசுடன் சேர்ந்துவிட்டார் என்று கதைகட்டி மக்கள்மனத்தைக் குழப்பப்பார்த்தவர்கள்… இன்று இலங்கை அரசு சரணடைந்த புலிகளை அரச உத்தியோகத்தில் வடக்கிலும் கிழக்கிலும் இணைத்து அரசாங்கத்தை நடாத்தி வருவதோடு, அதனை மேலும் அதிகரிக்கவும் திட்டம் போட்டுள்ளதே அதனால் புலிகள் துரோகியாகவில்லையா? இலங்கை அரசிடம் பிடிபட்ட கே.பி யும் மேலும் பிடிபட்ட பல புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் ஒழித்துவைத்திருந்த முக்கிய தடத்தின் இடத்தை புலநாய்வுத்துறைக்குத்தெரியப்படுத்தியது துரோகமில்லையா? பிரபாகரன் இலங்கை அரசுடன்பேச்சு நடாத்தும் போது அது நல்லிணக்கம் கருணா மக்களுக்காக நல்லிணக்க அமைச்சரானால் அது துரோகம்!!! இது என்ன நியாயம்… தமிழ்ச்செல்வன் இலங்கையின் விசேட கடவுச்சீட்டில் உலகத்தை வலம்வரலாம் அது அரசியல் கருணா அசராங்கத்தில் நேரடியாக தலையிட்டால் அது தேசத்துரோகமாம். இப்போது இனப்பிரச்சனையை தீர்க்க உலகத்தில் போராடிய மக்களுடன் கூச்சல்போட்ட தமிழ் எம்பிமார்கள் அரசிற்கு ஆதரவளித்தால் அது அரசியலாம் அதையே கருணா செய்தால் அது துரோகமாம். துமிழ் மக்களை ஏமாத்த தமிழ்க்கட்சிகள் திட்டம்போட்டுவருகின்றார்கள். அதாவது, தமிழர்களை அழித்த கட்சிக்கு ஆதரவு வழங்க எத்தணிக்கினம் தமிழனான அமைச்சர் கருணாவிற்கு ஆதரவு வழங்கமாட்டினமாம். அது அவர்களுடைய தன்மானப்பிரச்சனையாம். ஆனால் அக்கட்சியின் உபதலைவர் என்ற ரீதியிலஇ அவருடைய கட்டளைகளைக்கேட்டே ஆகவேண்டும் என்பதனை கொஞ்சங்கூட வெளியில சொல்லமாட்டோம்… என்று சிவருக்குள்ளே இருட்டில் சித்திரம் கீறப்பார்க்கின்றார்கள். கருணாவின் 5வருடத்தின் முற்போக்குச்சிந்தனைக்கு தற்போது பிற்பாட்டுப்பாடும் தமிழ்க்கட்சிகளை நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது. முன்பே புலிகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். ஆதனை மக்கள் நன்றாய் உற்று நோக்க வேண்டும். ஆதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் புலிகள் இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு காலப்போக்கில் தனிஅரசாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கூட கனிய இருந்ததனை எதற்காக புலிகள் தாமே அழித்தனர் என்பதனை மக்கள் கேள்வியாகக்கேட்கவேண்டும். ஆதற்கு சாக்குப்போக்குச் சொல்வதானால் எதற்காக தற்போது தேவையற்ற எம்பி பதவிக்காக பெரும் கட்சிகளை வால்பிடிக்க திட்டம்போட வேண்டும். இதோ அந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைத்திட்டம் …அதனையும் அலசி ஆராய்ந்து கொண்டே போவோம் வாருங்கள்… இப்படியாவது எமது அடிமட்ட அரசியலையும் சமுக போக்கினையும் அறிந்து சுயசிந்தைக்குச்செல்வோம். … சம்பந்தப்பட்ட தரப்புக்களான தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் கீழ்வரும் ஏற்பாடுகளுக்கு இத்தால் இணங்குகின்றன. 1. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை ISGA இல் முஸ்லிம் சமூகத்தினது பங்கை உருவாக்கம் செய்வதில் கலந்துகொள்வதற்கு அவர்களது பிரதிநிதிகளுக்கு உரிமை உண்டு. 3. தேர்தல்கள் இந்த அதிகாரங்களுக்குள், வடக்குக் கிழக்கிலும் வடக்குக் கிழக்கிற்காகவும் பிராந்திய நிர்வாகம் தொடர்பாக இலங்கை அரசால் செயற்படுத்தப்படும் அனைத்து அதிகாரங்களும் செயற்பாடுகளும் உள்ளடங்கும். 10. அதிகாரங்களை வகைபிரித்தல் இந்த ஒப்பந்தத்தின் சரத்து 4 (மனித உரிமைகள்) மற்றும் 22 இற்கு (பிணக்குத் தீர்த்தல்) பங்கம் ஏற்படாதவாறு, இந்த சரத்தின் கீழ் உருவாக்கப்படும் அமைப்புக்களே, இந்த உடன் படிக்கையை அர்த்தப்படுத்தி அமுல்படுத்துவதில் எழும் அனைத்துப் பிணக்குகளையும், இந்த உடன்படிக்கையில் அல்லது இந்த உடன்படிக்கையின் கீழ் அல்லது இந்த உடன்படிக்கையின் ஏதேனும் ஏற்பாட்டில் எழும் ஏதேனும் பிணக்குகளையும் தீர்ப்பதற்கு தனியானதும் தனித்துவமானதுமான நியாயாதிக்கத்தைக் கொண்டிருக்கும். ISGA ஆல் நியமிக்கப்படும் அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு நிதி ஆணைக்குழு அமைக்கப்படும். இந்த அங்கத்தவர்கள் நிதி, நிர்வாகம் அல்லது வாணிபம் போன்ற துறைகளில் உயர்பதவி வகித்தவர்களாகவோ அல்லது இத்துறைகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்கள் என இனங்காணப் பட்டவர்களாகவோ இருக்க வேண்டும். இலங்கை அரசின் ஒன்று திரட்டிய நிதியத்திலிருந்து (ஊழளெழடனையவநன கரனெ) வடக்குக் கிழக்கிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியின் அளவை இந்த ஆணைக் குழு பரிந்துரைக்கும். இப்பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசு தனது நல்லெண்ண முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சமவிகிதத்தில் பகிர்ந்தளிப்பதற்கு உரிய கவனம் செலுத்தி, ISGA தன்வசமுள்ள நிதிகளை எப்படிப் பயன்படுத்துவதெனத் தீர்மானிக்கும். ஐளுபுயு வசமுள்ள நிதிகளுள் வடக்குக் கிழக்குப் பொதுநிதியம், வடக்குக் கிழக்கு மீள்கட்டுமான நிதியம், விசேட நிதியம் ஆகியன உள்ளடங்கியிருக்கும். வடக்குக் கிழக்கில் அல்லது வடக்குக் கிழக்கிற்காக இலங்கை அரசு செய்யும் அனைத்துச் செலவுகளும் ஐளுபுயு இன் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்பதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறது. 12. கடன் பெறுவதற்கும் உதவிபெறுவதற்கும் உள்@ரிலும் வெளிய+ரிலும் கடன்பெறுதல், உத்தரவாதங் களையும் இழப்பீடுகளையும் வழங்குதல், நேரடியாக உதவிகளைப் பெறுதல், உள்ளுர் மற்றும் வெளியூர் வர்த்தகத்தில் ஈடுபடுதல் அல்லது அதனை ஒழுங்கமைத்தல் போன்றனவற்றிற்கான அதிகாரங்களை ISGA கொண்டிருக்கும். 14. மாவட்டக் குழுக்கள் 15. நிர்வாகம் ISGA தற்றுணிவுடன், தேவையான துறைகளில் நிபுணர்களது ஆலோசனைக் குழுக்களை உருவாக்கலாம். இந்த ஆலோசனைக் குழுக்கள் பொருளாதார விவகாரங்கள், நிதி விவகாரங்கள், நீதி விவகாரங்கள், மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு விவகாரங்கள், அடிப்படை கட்டுமானங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆகியனவற்றிற்கும் இவற்றிற்கென மட்டுப்படுத்தப்படாமல் இன்னும் தேவையான துறைகளுக்கும் அமைக்கப்படலாம். காணிகளிலிருந்து விரட்டப்பட்ட மக்களது காணிகளின் உரிமை, அத்துமீறிக் குடியேறியோர் வசிக்கும் காணிகளின் உரிமை போன்றவற்றை காலம் எவ்வளவு கடந்திருந்தாலும் கூட விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென காணி நிர்வாகம் தொடர்பான ஒரு விசேட ஆணைக்குழுவை ISGA நியமிக்கும். விசேட ஆணைக்குழு செயற்படுகின்ற கால வரையறையை ISGA தீர்மானிக்கும். இந்தக் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களையும் அகதி களையும் மீளக்குடியமர்த்திப் புனர்வாழ்வு அளிப்பதற்கு ISGA பொறுப்பாக இருக்கும். எந்தவொரு தகராறு பற்றியும் தீர்மானமெடுக்கையில், பிணக்குத் தீர்ப்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளதும் இலங்கை அரசினதும் சமத்துவமான நிலையை உறுதிசெய்வதோடு இந்த உடன்படிக்கையின் ஏற்பாடுகளை மாத்திரமே உசாத்துணையாகக் கொண்டு பிணக்குகளைத் தீர்ப்பர். பிணக்குத் தீர்ப்பவர்களது தீர்மானம் இறுதியானதாகவும் முடிவானதாகவும் இருப்பதோடு பிணக்கில் சம்பந்தப்பட்ட தரப்புக்களையும் கட்டுப்படுத்தும். இருப்பினும் கூட இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கிடையே நான்கு வருடங்களின் முடிவில் இறுதி உடன் படிக்கை எதுவும் எட்டப்படாவிட்டால் ஒப்பந்தத்தின் வீதிகளை மேலும் அதிகரித்து தெளிவுபடுத்தி வலுப்படுத்தும் நோக்கத்தில் இரு தரப்பும் நல்லெண்ணத்தோடு பேச்சுக்களில் ஈடுபடும்.” |
வெப் தளங்கள்
வானொலிகள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
公共文件夹 ![]() 01 ottobre
![]() 06 novembre
![]() 27 giugno
![]() 27 giugno
![]() 27 giugno
![]() 27 giugno
![]() Blog Images
![]() Blog Images
![]() Blog Images
![]() Blog Images (2)
![]() Blog Images (3)
![]() Blog Images (4)
![]() Le mie foto sul blog
![]() TAMIL FONTS தமிழ் எழுத்துக்கள்
![]() UNGA ஒன்றியம்
![]() Video
![]() அருகனின் ஆக்கங்கள்
![]() இத்தாலி ஊடகங்களில் தமிழர்கள் பற்றி
![]() இலங்கைத் தூதுவர் ஆலயம்
![]() சாகடிக்கப்படும் சரித்திரத்திற்கெதிரான போராட்டம்
![]() சாகடிக்கப்படும் சரித்திரத்திற்கெதிரான போராட்டம் 1948-2009
![]() சிறுவர் கல்வி
![]() விளம்பரங்கள்
![]() வெளிநாட்டவர் தொடர்பான தகவல்கள்
![]() வேலைவாய்ப்பகம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|