Arugan's profileஅருகன்PhotosBlogListsMore ![]() | Help |
அருகன்புதிய தலைமுறை ஒன்றியத்தின் தத்துவ முற்போக்கு எழுத்தாளரும், வெளியீட்டு பணிமனையும் Scrittore Tamil - Tamil writter - Italy
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கல்வி
பிற தளங்களில் இருந்து
இத்தாலியில் இருந்து
இணைய பதிவுகள்
இத்தாலியில் இருந்து
|
February 09 தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தமிழீழம், தனிநாடாக அமைய என்ன வழிகள்- மீழ் வெளியீடு
ஏற்கனவே எழுதிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் தள்ளப்படுகின்றேன். அதாவது, “மண்மைகழுவப்பட்ட மக்கள்மத்தியில் தொண்டைகிழியக்கத்தினாலும் தேசம் கிடைக்கப் போவதில்லை” பலர் மக்கள் தொகையினைவைத்து தமிழீழத்தின் கோரிக்கையினை புறந்தள்ளப்பார்க்கின்றனர். ஒரு நாட்டின் பெரும் அம்சமாகக்கருதப்படுவது மக்களேயாயினும், மக்கள்தொகையினைவைத்து அரசினை எடைபோடமுடியாது. மேலும் வாசிக்க » தீவிர வாதச் சிந்தனைகள் சீர்திருத்தப் படட்டும். - Arugan
ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட சில வரிகள் இப்போது மீண்டுஞ் ஞாபகத்துக்கு வருகிறது...
யார் நடத்திய வேள்வியிது? ஓ இயற்கையே!! இத்தோடு உங்கள் போர் கொடிகளை இயற்கையின் சமநிலை பற்றாக் குறைதனை “ இதுதானா மில்லெனிய மாற்றம்?” 2004ம் ஆண்டு வெளியிட்ட நாவலில் இருந்து … இப்போது மட்டுமல்ல, உலகத்தை எப்போதுமே ஆட்சி செய்து கொண்டிருப்பது “அன்பல்ல” மாறாக “பயமே”!!
இப்போது மட்டுமல்ல, உலகத்தை எப்போதுமே ஆட்சி செய்து கொண்டிருப்பது “அன்பல்ல” மாறாக “பயமே”!! வல்லரசு சிற்றரசைத்தாக்கும், அல்லது ஆக்கிரமிக்கும் என்ற பயம். பயம் பயம் பயம் … எலிக்குப்பூனையைக்கண்டால் பயம். பொதுமக்களுக்கு அதிகாரிகளைக் கண்டால் பயம். உயிரினங்கள் எல்லாம் அன்பில் நிலைத்திருக்கோ இல்லையோ, பயத்தில்த்தான் அதிகம் நிறைந்திருக்கிறது என்பதனை நடைமுறை காட்டத் தவறவில்லை. “ இதுதானா மில்லெனிய மாற்றம்?” 2004ம் ஆண்டு வெளியிட்ட நாவலில் இருந்து யாருக்காக, யாரிடம் இருந்து தமிழீழம்- அருகன்.
யாரெல்லாம் குற்றவாளியாகத் தேடப்படுகின்றார்களோ?, யாரெல்லாம் தமிழர்களை படுகுழிக்குள் தள்ளுகின்றார்களோ அவர்களை யெல்லாம் தமிழர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளார்கள். யாருக்காக, யாரிடம் இருந்து தமிழீழம்- அருகன்.“ஆத்தில வச்சிட்டு குழத்தில தேடுறமாதிரி” … என்று ஒரு பழமொழி உண்டு, அது போலவே “குளத்துடன் கோவிச்சுக்கொண்டு…” என்று இன்னொன்றும் உண்டு… இது மிகச்சரியாக தமிழர்களுக்குப்பொருந்தும். யாரெல்லாம் குற்றவாளியாகத் தேடப்படுகின்றார்களோ?, யாரெல்லாம் தமிழர்களை படுகுழிக்குள் தள்ளுகின்றார்களோ அவர்களை யெல்லாம் தமிழர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளார்கள். கேபியை தலைவர் என்றார்கள்… அவர் ஏற்கனவே சர்வதேச குற்றவாளியாகப் பட்டியலிடப்பட்டவர். பொட்டம்மானை அடுத்த தலைவர் என்றார்கள் … இவரும் தேடப்படுபவரே!!! சரி இதையெல்லாம் விடுங்கள் இவர்கள் தமிழர்கள்!!! தமிழர்களுக்காகப்பாடுபட்டவர்கள். தமிழர்களின் விடிவிற்காகத் தம்முயிரையே துச்சமென அர்ப்பணித்தவர்கள். கடினமான பாதைகளை பல வருடங்களாக கடந்தவர்கள்… இவர்கள் சர்வதேசத்திற்கு வேண்டும் என்றால் குற்றவாளியாகட்டும் எமக்கெல்லாம் தேசத்தைக்காக்கா போராடிய தெய்வங்களே!!! தெய்வங்களாக இருந்து தவறுசெய்தவர்களே சாத்தான்களாகவும் இருக்கின்றார்கள். அது போகட்டும். ஆனால் இந்த சரத் பொன்செக்காவை ஆதரவளித்த முட்டாள் செயல் இருக்கே!!! அந்நார்ந்து பார்த்து வணத்தில் எச்சிலைத்துப்பினால் என்ன நடக்கும் அது திரும்பிவந்து துப்பியவர் முகத்தில்தான் படியும் அது போலவே கூட்டமைப்பின் வழியில் தமிழர்களின் முகத்தில் எச்சிலையும், கரியையும் பூசி தமிழர்களுக்கு பெரும் களங்கத்தையே ஏற்படுத்திவிட்டனர். மகிந்த நாலுவருடமே புலிகளுக்கு எதிராகப்போராடினார் என்றால், மிஸ்டர் சரத் 25வருடங்களாக தமிழர்களுக்கு எதிராக வண்முறையினைக் கட்டவிழ்த்துவிட்டவர்!!! இப்போது அவரை சிறைப்பிடித்தது என்பது அவருக்குக் கொடுத்த சாட்டையடியல்ல! தமிழர்களுக்குக் கொடுத்த சாட்டையடி!!! எமது போக்கில் மாற்றம் வேண்டும் என்று அன்றில் இருந்து இன்று வரை எழுதிக்கொண்டே வருகின்றேன். எமக்கு சாணக்கியம் போதாது, எப்போதும் முரட்டுத்தனமும், முன்கோபமும். எம்மையே நாம் கோமாளியாக்கி மகிழ்ந்து கொள்கின்றோம். எப்போது நாம் சாணக்கியத்தைப் பயன்படுத்தப் போகின்றோம்??? ஒவ்வொரு தமிழனும் சுயமாகச் சிந்திக்க வேண்டும். புரையோடிய வார்த்தைகளைப் பேலிப் புகளாரஞ்செய்யாதீர்கள். கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சாம்பலாக்கிவிட்டு “சிங்களவன் தாறானில்லை, சிங்களவன் தாறானில்லை” – என்று கூப்பாடு போடாதீர்கள். பெரும் அதிஸ்டமாக ஜனாதிபதி தேர்தல் வந்தது அதை அப்படியே கோட்டைவிட்டனர். இப்போது பாராளுமன்றத் தேர்தல் வரப்போகின்றது அதையும் தவிடு பொடியாக்குவார்கள் என்பாதில் எந்த சந்தேகமும் இல்லை. அது முடிந்ததும் மகிந்தவுடைய அடுத்த திட்டமாக சர்வதேச புலிகள் ஆதரவுச் செயற்பாடுகளை முறியடிப்பதே!!! அப்போது, “நாடுகடந்த அரசு” காத்தில பறந்து விடும் அதை நம்பிய மக்கள் அதன் தலைவர்களை தேடுவார்கள். இது தீர்க்கதரிசனமாக நடைபெறும். அப்போது என்ன செய்வதென்று தெரியாதவர்கள் மீண்டும் மீண்டும் முறையற்ற வண்செயல்களை மேற்கொள்ள தூண்டப்படுவார்கள். புலத்து ஊடகங்கள் எல்லாம் வழிமாறிப்போகும் இதற்கு மாற்று வழியை அனர்த்தத்திற்கேற்ப எடுக்காவிட்டால் இது நடந்தே தீரும். அருகன் தொடரும். February 08 அருகனின் நாவல்களில் சில!!!!!!!!புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரிலேயே இலங்கை அரசியல் நடக்கிறது…
போலித்தமிழ் அமைப்புக்கள், போலித்தமிழ் அமைச்சர்கள் இதற்கு ஒத்துவரமாட்டார்கள். அவர்களுடைய பதவிகள் அடுத்த தெரிவில் சின்னாபின்னமாக்கப்பட்டு, அவ்வமைப்பும் சீர்குலைக்கப்பட வேண்டும். அதற்கு பலம் பொருந்திய விடுதலைப்புலிகள் தலைமை பீடம் ஒத்துளைக்க (முன்னைய பதிப்பு) வேண்டும். துணைக் காரியாலயங்கள் இவ்வாறான செயற்பாட்டினைச் சிந்திக்கக் கூட முடியாது என்பதனை நன்கு அறிவேன். எனவே, தலைமைப்பீடம் இதற்கு உந்துதல் கொடுத்து வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் தேவைகளுக்கும் சிரமங்களுக்கும் தீர்வுகாணக்கருத்தெடுக்கவும், இதன் மூலம் ஈழத்தில் உள்ள மற்றைய உறவுகளுக்கு மேலும் உதவமுடியும் என்பதனையும், தமிழர்களின் தாயகத்தையும் திடப்படுத்தமுடியும் என்பதனையும் உறுதிப்படுத்துகிறேன். எனவே விரைவில் அரசு, அரச சார்பில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரிகள், வி.பு., உலகச் சமாதான அக்கறையாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் மனித நேய அமைப்புக்கள் போன்றோர் இதில் அக்கறை காட்டவேண்டும் என்று விரும்புகிறேன். விரைவில் இச்சின்னஞ்சிறு தீவு, உலகின் அறிவும் திறமையும் போட்டிபோடும் இடங்களிலெல்லாம் இடம்பெறவேண்டும். இதற்கு “மலருமா?”, என்ற வினாவா, அல்லது “மலரும் மா!” என்ற மாபெரும் தமிழீழமாய் மிழிருமா, அல்லது இருக்கும் வழங்களும் அழிக்கப்பட்டு மேலும் உயிர்கள் இழக்கப்பட்டு சுடுகாடாகுமா?... காலம் என்றும் எங்கள் கையில் மட்டுமே!... என் பக்கங்கள் பொங்கு மலை எங்கிருந்து பொருமி வந்தாலும் கடந்த கால நடைமுறைகள் எமக்குக் கற்றுத்தந்த பாடம்தான் என்ன? இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வுகள், வெறுங்கனவுகளோ?!... என்று, எண்ணத்தோன்றுகின்றது. இலங்கையில் தமிழர்களின் உயிர்ச் சேதத்தையோ, வாழ்க்கைச் சிதைவினையோ யாரும் எண்ணிப்பார்த்ததாக இல்லை. அவரவர் தமது தேவைகளையும், இலாபத்தையும் காத்துக்கொள்வதோடு, தமக்கு முக்காடும் போட்டுக்கொள்கின்றனர். இலங்கை அன்னையின் இரத்தக்கறையும், வியர்வைத்துளியும் துடைக்கப்பட வேண்டுமென்றால், இரு பிரிவினரும் ஒரேயொரு கட்டமைப்புக்குள் வந்தாலொழிய பிளவுகள் தீர்க்கப்படப் போவதில்லை. 2003ல் வெளியிடப்பட்ட “அநுபூதி” என்னும் நூலில் குறிப்பிடும் “சாகடிக்கப்படும் சரித்திரம்” என்ற பகுதியில் தமிழரின் வரலாறு பற்றிச் சற்றுச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. மழுங்கடிக்கப்பட்ட சரித்திரத்தை மீட்டெடுக்கவேண்டிய கடப்பாடு யாருக்குண்டு? அநுப+தித்தனமான எழுத்தாளரை எப்படி இனங்கண்டு கொள்வது? இவையெல்லாம் தொடுக்கப்பட வேண்டிய வினாக்களல்ல செயற்பட வேண்டிய அனர்த்தங்கள். 2006ல் நின்று பார்க்கும் பொழுது, இலங்கை அரசியல் வாதிகள் அரசியல் அறிவில் அநுபவம் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர் என்பது ஐயமில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளோ தாம்தான் அரசியலை நன்றாய்க் கற்றவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலத்தை அதிகரித்ததும், உலகிற்கு வெளிக்காட்டியதும் சிங்கள இனவாதிகள் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கவ்வளவு உண்மை, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரசியலைக் கற்றுக்கொடுத்த மேதாவிகளும் அவர்களென்பது. ஆனால், தமிழீழவிடுதலைப்புலிகள் இராணுவ நடவடிக்கையில் அதிகம் பாராட்டக் கூடியவர்களாகவுள்ளார்கள். எனினும், அரசியலில், சிங்கள அரசியல் வாதிகள் தற்போது மாமேதைகளாகிவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் அரசியல், முஸ்லீம் அரசியல் மட்டுமல்லாது சிங்கள அரசியலிலும் பாடத்தைக் கற்பிக்கிறார்களே!!! தமிழர்கள் பக்கம் ஒருவிடயத்தைப் பதித்தாகவேண்டும். அதாவது, தமிழீழ ஆதரவாளர்கள்-விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், இவற்றிற்கிடையில் வேறுபாடு உண்டா இல்லையா??? இந்த நூல் பலருடைய சிரசில் பாரத்தை ஏற்றப்போகிறது என்பது ஒருபுறம் இருக்க, எதிர்கால வரலாற்றுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் ஒரு சரித்திரக் கையேடாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழர்கள், ஈழம், வரலாறு, எதிர்காலம்... என்று பார்க்கும் போது, நிர்மாணத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் தமிழீழச் சமுகத்திற்கு, “எதிர்காலம்” எட்டிப்பார்க்கக்கூடிய ஆழத்தில் தென்படக்கூடாது என்பதிலும், நையாண்டித்தனமுடையதாக அமைந்து விடக்கூடாது என்பதிலும் கருத்தாய் இருக்க வேண்டும். இதில் தமிழ் நிலை தொடர்பாக பல்வேறு சிந்திக்கும் சிதறல்கள் திணிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், தமிழோ அல்லது அத்தமிழர்களோ, சரித்திரத்தில் புதியவர்களல்ல என்பதனை விளக்குவதற்கே! விடுதலைப் புலிகளுடைய ஆரம்பகாலத்துப் போக்கும், அத்தலைமைத்துவத்தின் எண்ணத்திற்கும், தற்காலத்தில் அவர்கள் பெயரில் உலகநாடுகளில் ஈடுபடுபவர்களுடைய போக்கும் மீள்பரிசீலனை ஒன்றை அவ்வமைப்பின் தலைமைத்துவத்தால் எடுக்கப்பட வேண்டும் என்பதனை இவ்வேடு குறிப்பிட்டுக் காட்டுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து அவர்களின் பலத்தைக் குறைத்தும், அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களுக்கும் இதன்மூலம் கோரிக்கை விடப்படுகிறது. அவர்கள் எத்தகைய பங்களிப்பினை தமிழர்களின் நிரந்தர நிம்மதிக்காகச் செலுத்தப்போகிறார்கள் என்றும், தற்போதை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதுதொடர்பான தகவல் வினாவப்படுகிறது. உலக நாடுகளில் தமிழர்களுக்கு ஒரு தரத்தை நிர்மாணித்துள்ள போதிலும் அவற்றை மறைத்து வட்டம் ஒன்றைப் போட்டுவிட்டு அதற்குள் குத்துக்கரணம் போடுகின்றனர் சிலர். இவ்வாறான பல்வேறுபட்ட விடிவு நோக்கிய கருத்துக்கள் உட்திணிக்கப்பட்டுள்ளது. தமிழர்களால், தற்போது கோரப்படும் தமிழீழப்பகுதிக்குமட்டுமல்ல இலங்கை முழுவதிற்குமே உரியவர்கள் என்பதனையும் இது எடுத்துக்காட்டத் தவறவில்லை. விஜயனின் காலத்தின்பின்னரே ஆரியரின் ஆதிக்கம் ஏற்பட்டது என்பதனையும், தமிழ் எத்தகைய சிறப்புடையது என்பதனையும் தமிழர்களின் - திராவிடனின் ஆரம்பகால நிலைக்கும் இந்நூல் கொண்டு சென்று விடுகிறது. இவ்வாறான வரலாற்றுத்தகவல் அடங்கிய நூல் ஒன்றைப்புனைவதன் சிரமம் எவ்வளவு என்பதனை கற்றோரும் விமர்சகரும் அறிவர். எனினும் வாசகர்களுக்கும் எதிர்காலச்சந்ததிக்கும் இது ஒரு சிறந்த தகவலாக அமையவேண்டும் என்று விரும்புகிறேன். தமிழர்களுக்கு நிலையான வாழ்வு நோக்கிய பாதையின் கடினம், தமிழர்களின் எதிர்காலச் சந்ததியினரைப் பாதிப்புக்குள்ளாக்கி விடக்கூடாது என்பதனையும் அணுகுண்டின் பாதிப்போடு ஒப்பிட்டு எச்சரிக்கையும் செய்கிறது. இதன்மூலம் விரைவில் நிம்மதிப்பெருமூச்சினை நோக்கி ஓடவேண்டுவே இவ்வேடு எச்சரிக்கை செய்கிறது. இவ்வேடு புனையப்படுவதற்கு 2005காலப்பகுதி தொட்டு 2008வரையிலான காலப்பகுதி தேவைப்பட்டது. அரசில் அங்கம் வகிப்போரோஇ பலமாக இருக்கும் அமைப்புகளோஇ தனிநபர்களோஇ நிதி ஆதரவிலும் சரிஇ அல்லது இலக்கிய ரீதியில் வெளியீட்டு ஆதரவிலுஞ்சரி முன்னுரிமை வழங்காமையும் இதன் வெளியீட்டுப்பின்வாங்கலுக்கு முக்கிய காரணம் எனலாம். எனினும் பிரதி செய்வதற்கும் வெளியிடுவதற்கும் போதிய நிதி இல்லாமையால் இணையத்தின் மூலமே பெரும்பாலும் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டது. தற்காலத்தில் இதற்கு ஆதரவு, அறிவுடையோரிடையே முன்நிலை வகிக்கும் என்பது திண்ணமே! இலக்கியம், இலக்கணம் என்றும், சங்ககாலம் சங்கம் மருவிய காலம் என்றும் மக்களைக் குழப்பாமலும், புணரியல் வாக்கியங்களை அமைக்காமலும் சாதாரண மக்கள் தொட்டு கற்றோர்வரை வாசிக்கக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இது பயனுள்ள கையேடாக அமையும் என்று நம்புகிறேன். இதற்கு வித்திட்ட அடிப்படைத் தொன்மையான நூல்களுக்கும், ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் நன்றிகலந்த வணக்கம். அடுத்த வெளியீட்டில் சந்திக்கும் சந்தர்ப்பத்தில்... February 05 முக்கிய செய்திகள் 5/2/2010முக்கிய செய்திகள்
தப்பிச்சென்ற இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பம்:இராணுவப் பேச்சாளர்
பொதுத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது? விரைவில் தீர்மானம் : சதாசிவம்
மன்னார் மீனவர்கள் தொழிலில் ஈடுபட எவ்வித கட்டுப்பாடுமில்லை : அமைச்சர் றிசாத்
வடக்கு, கிழக்கு அரசியல் தீர்வு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம்
கூட்டமைப்பு,ஜே.வி.பி. ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சிப்போம்:ஐ.தே.க
நாளை அல்லது 10 ஆம் திகதி சபை கலைக்கப்பட்டு ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல்?
சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,753 கைதிகள் விடுதலை
இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் : அறிக்கை காலதாமதம் குறித்துக் கேள்வி
மன்னார் பொலிஸ் நிலையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு(பட இணைப்பு)
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
February 04 தமிழர்களின் “சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலீச குடியரசு”ஈழம் மலரும் போது தமிழ் வாடிவிட்டால்? என்ன செய்வது….!!!
“அடிதடி 15” தமிழர்களின் “சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலீச குடியரசு” நோக்கிய பேராட்டத்தின் தன்மையினைப்பார்க்கும் போது, பல்வேறு கேள்விகள் உதயமாகின்றது. போராட்டம் ஈழம் மலரும் போது தமிழ் வாடிவிட்டால்? என்ன செய்வது. மேலே காட்டப்பட்ட மனித உரிமை தொடர்பான விடையத்தைப் பாருங்கள் அது படிவம் எடுக்கப்பட்டு வாசிப்பதற்கு கடினமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. யார் சீர்செய்வார்?. உலகத்தில் தமிழ் சிறகடித்துப் பறக்கிறது. ஆனால் தமிழர்கள் அதன் சிறகிற்கு பலங்கொடுக்க முன்னரவில்லை. பேருக்கு தமிழ்ப் போராட்டம். இப்படி எடுத்துரைக்கும் என்மீது கோபப்படுவதற்குப் பதிலாக தவறுகளைச் சீர் செய்யுங்கள். சீர் செய்வோருக்கு ஆதரவு அளியுங்கள் முரட்டுப் பிடிவாதம் பிடிக்காதீர்கள். “இதற்கிடையில் மாபெரும் தமிழ் விடுதலைப் போராட்டத்தின் தலைவராக (இன்று) 2008வரையில் மதிக்கப்படுகிற திரு வே.பிரபாகரன் அவர்களைப்பற்றிய ஒரு கட்டுரைதொடர்பான, தொலைக்காட்சி விமர்சனத்தில் தகவல்கள் தவறுதலாகப் புனையப்பட்டிருந்தது. இவை வரலாற்றில் உண்மைகளையும் பொய்களாக மாற்றிவிடக்கூடியன. அவர் பல்கலைக்கழகப்பட்டதாரி என்றும் வேறு சிலவிடையங்களும் தவறுதலாகப் பரினாமித்தது. அவர் கடைசியாகக்கற்ற கல்வி 10 வரைதான். ஆனால் அவர் பட்டதாரிக்குமேலான அனுபவத்தை அனர்த்த அறிவிலிருந்து கற்றுக்கொண்டார். என்றால், அது மிகையாகாது. மேலும் வாசிக்க » |
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
Public folders ![]() 01 ottobre
![]() 06 novembre
![]() 27 giugno
![]() 27 giugno
![]() 27 giugno
![]() 27 giugno
![]() Blog Images
![]() Blog Images
![]() Blog Images
![]() Blog Images (2)
![]() Blog Images (3)
![]() Blog Images (4)
![]() Le mie foto sul blog
![]() TAMIL FONTS தமிழ் எழுத்துக்கள்
![]() UNGA ஒன்றியம்
![]() Video
![]() அருகனின் ஆக்கங்கள்
![]() இத்தாலி ஊடகங்களில் தமிழர்கள் பற்றி
![]() இலங்கைத் தூதுவர் ஆலயம்
![]() சாகடிக்கப்படும் சரித்திரத்திற்கெதிரான போராட்டம்
![]() சாகடிக்கப்படும் சரித்திரத்திற்கெதிரான போராட்டம் 1948-2009
![]() சிறுவர் கல்வி
![]() விளம்பரங்கள்
![]() வெளிநாட்டவர் தொடர்பான தகவல்கள்
![]() வேலைவாய்ப்பகம்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|