Arugan's profileஅருகன்PhotosBlogListsMore Tools Help

அருகன்

புதிய தலைமுறை ஒன்றியத்தின் தத்துவ முற்போக்கு எழுத்தாளரும், வெளியீட்டு பணிமனையும் Scrittore Tamil - Tamil writter - Italy

Arugan Maximin

Occupation
Location
Interests
இத்தாலியின் தமிழ் எழுத்தாளர் - கவிதை, கட்டுரை, கதை, அரசியல், வரலாறு, விமர்சனம், செய்தி, தகவல், போன்ற ஏராளம் தகவல் உள்ளடங்கிய இணையத்தளம். தொடர்புகளுக்கு +39 3204031624

இணையத்தின்மூலம் கருத்துக்களைப்பரிமாற்றுவதற்கு Skype- arugan2008 படுத்தலாம் நன்றிகள்.

வெளிநாட்டவர்களுக்கான அலுவலகங்களில் சந்திப்பதற்கான இடமும் நேரங்களும்...

திங்கள் காலை றெஜியோ எமிலியா (Reggio Emilia) நகரசபை
செவ்வாய் சாந்திலாறியோ (Sant'ilario )நகரசபை
புதன் ஸ்கந்தியானோ (Scandiano)நகரசபை
வியாளன் ஸ்கந்தியானோ (Scandiano) நகரசபை
வெள்ளி றெஜியோ எமிலியா (Reggio Emilia) நகரசபை
சனி கனோஸ்ஷா (Canossa) நகரசபை

Video

 
அனுமதியுள்ளோருக்கு
Photo 1 of 50
Photo 1 of 3
More albums (1)
கல்வி
இத்தாலியில் இருந்து
No list items have been added yet.
இணைய பதிவுகள்
இத்தாலியில் இருந்து
November 09

நாடு கடந்த தமிழீழ அரசு: விடுதலைப் புலிகள் விளக்கம்

LTTE-PR தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 09–11–2009 ஊடக அறிக்கை சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்றின் உண்மையாகும். காலத்திற்குக் காலம் ஆட்சிபீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஆரம்ப வடிவமாக அகிம்சை வழியிலும் அரசியல் முறையிலும் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க முற்பட்டதாலேயே தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகப் பரிமாணம் பெற்றது. ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்துவரும் விடயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத்தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றன. உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்லவேண்டியதும், விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத்தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் கடமையாகின்றது. இவ்வகையில், ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும். இந்த வழிமொழிவு இன்று ஈழத்தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதற்கட்டமாகும். அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத்தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது. அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும். மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' Nanri thmil udakam

November 05

Rinnovo del Permesso di Soggiorno - Tamil

இத்தாலி வாழ்தமிழர்களே, தாங்கள் விண்ணப்பித்த விசாக்களை தனிநபர்களின் ஆலோசனையின்பெயரிலும் சட்டத்தரணிகள் ஊடாகவும் மேலதிக பணத்தைச் செலவளிப்பதுடன் நேரத்தையும் விரயம் செய்கின்றீர்கள். எனவே தகுந்த ஆலோசனை தரக்கூடியவர்களிடமும், சேவையினை சீராக மேற்கொள்கின்ற அலுவலகங்கள் ஊடாகவும் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். விசாதொடர்பாக முதலாவது தடவை அழைக்கப்பட்டோர்கள் பின்வரும் பகுதியை அழுத்தி அங்கு உங்கள் பற்றுச்சீட்டில் 0607... என்று தொடங்கும் இலக்கங்களை மட்டும் அழுத்திப்பார்த்து விசா ஆயத்தமா என்று பார்த்தபின்னர், அதனை மீட்பதற்கு எப்போது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்ற விடயத்தை பின்வரும் பகுதிக்குச்சௌன்று பார்வையிடலாம். இதற்கு யாருக்கும் கட்டணம் செலுத்தத்தேவையில்லை.  மேலதிக விபரங்கள் தேவைப்படின் 3204031624 என்ற இலக்கங்களுடன் அல்லது தகுந்த அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளவும். - அருகன்.
 
1) விசா ஆயத்தமா என்று பார்க்க -                            ******
 
2) விசாவை மீட்பதற்கான நாளை அறிவதற்கு-       ****** 
 
 

புதிய தேசியளவிலான கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம். - திரு உருததிரகுமார் பதில்

 

4ம் திகதி எமது வெளியீட்டு வினாக்களுக்கு திரு உருததிரகுமார்  இணையத்தின்மூலம் பதில் வழங்கியுள்ளார். எமது வினாக்களும் பின்னர் அவருடைய அறிக்கையும் இங்கு தரப்படுகின்றது.

“இதற்கமைய தமிழர் பேரவையால் தற்போது எடுத்துநடாத்தப்படும் நாடுகடந்த அரசை அமைப்பது தொடர்பாக அப்படியே மாற்றமின்றி வெளியிடப்பட்டமை குநறிப்பிடத்தக்கது. எனினும் இதுதொடர்பாக புலத்தில் இயங்பகிவரும் பல அமைப்புக்களை இத்திட்டத்தில் இருந்து விலக்கியே இதனை அமைத்திருப்பது தெரியவருகின்றது. இதனை அமைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது மீழவும் வெளியிடப்படுகின்றது. “ http://www.thesiyam.org

தமிழ் தேசிய நலன்கருதி தேசியம் என்னும் இணையத்தை 01-11-2009 ல் இருந்து, செயற்படுத்துவதோடு,

Posted on நவம்பர் 2, 2009 by தேசியம்

தமிழ் தேசிய நலன்கருதி தேசியம் என்னும் இணையத்தை 01-11-2009 ல் இருந்து,

கடந்த பத்துவருடங்களாக, தமிழர்களுக்கு மட்டுமன்றி பல்வேறுபட்ட மக்களுக்கும் உதவும் வகையில் ஐரோப்பா ரீதியில் செயற்பட்டுவந்த தமிழ் ஒன்றியமான “புதிய தலைமுறை ஒன்றியம்” தற்போது தமிழ் தேசிய நலன்கருதி தேசியம் என்னும் இணையத்தை 01-11-2009 ல் இருந்து, செயற்படுத்துவதோடு, அதன்மூலம் உலகத்தமிழர்களுக்கு ஆதரவாகச்செயற்படும் அனைத்து அமைப்புக்களுக்கும் அனைத்து உலக ரீதியிலான அரச நிறுவனங்களுக்கும் ஒத்தாசையும் முழு ஆதரவும் வழங்கும் … என்ற எமது போக்கிற்கும் பதில் இதுவாக எடுத்துக்கொள்ளலாமா????”

 
நாடு கடந்த அரசாங்கத்தின் முக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது

04 November, 2009 by admin


புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் உருவாகும் புதிய கட்டமைப்புக்களை நாடுகடந்த தமிழீழ அரசு வரவேற்கிறது..
இடைக்கால நாடுகடந்த தமிழீழ அரசுக்கான ஆலோசனைக் குழு தனது முழுமையான அறிக்கையை 2009 டிசம்பரில் வெளியிடுவதற்குரிய இலக்குடன் பணிகளை உரிய வேகத்தில் தொடர்ச்சியாக
மேற்கொண்டுவருகின்றது. இது தொடர்பாக நாங்கள் பல்வேறுபட்ட பிரேரணைகளையும், குறிப்பான கேள்விகளையும் புலத்துத்தமிழ் சமூகத்திடமிருந்து தொடர்ந்தும் பெற்றுவருகின்றோம். மேலும், கடந்த
மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களும் தங்களது பணிகளை ஆரம்பித்துள்ளன.
எதிர்வரும் வாரங்களில் தமிழ்மக்கள் பெருந்தொகையாக வாழும் மற்றைய நாடுகளுக்கான இணைப்பாளர்களும், செயற்பாட்டுக்குழுக்களும் அறிவிக்கப்படவுள்ளன.ஏப்பிரல் 2010ல் தேர்தல்களை நடத்துவதறகுரிய வகையில் பணிகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன. எதிர்வரும் இரண்டு மாத காலங்களுக்கு புலத்துத்தமிழ் சமூகத்துடன் எமது இதுவரையிலான முன்மொழிவு மற்றும் குறிப்பிடப்பட்ட சில கேள்விகள் தொடர்பாகப் பரவலான ஆலோசனைகள் மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்துள்ளோம்.இந்தச்சந்தர்ப்பத்தில் அண்மைக்காலமாக எழுப்பபட்டுவரும் சில கேள்விகள் தொடர்பான எமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

2009 யூனில் வெளியிடப்பட்ட எமது முதலாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போன்று நாடுகடந்த தமிழீழ அரசுவினை நிறுவும் செயற்பாடானது அனைத்துத்தமிழர் அலகுகளையும் ஒன்றுபடுத்துவதற்கான அடிப்படையில் சனநாயக வழியிலமைந்த ஒரு முன்னெடுப்பாகும். புலத்துத்தமிழ் சமூகம் சனநாயக உரிமைகளைப் பிரயோகிப்பதற்கு நேரிடையான தேர்தல் ஒரு சிறப்பான வாய்ப்பு என்பதே எங்களது தெளிவுபடுத்தப்பட்ட நிலைப்பாடாகும். இதுவொன்றே நாடுகடந்த தமிழீழ அரசுக்கான சட்டபூர்வத்தன்மையைத் தரும்.
இதனால் நேரிடையாக தேர்வுசெய்யப்பட்டவர்களைத் தவிர்ந்த பிறர் எவரும் நாடுகடந்த அரசுவின் அங்கமாக முடியாது. இந்த நாடுகடந்த தமிழீழ அரசுவானது தனது முதல் விடயமாக அரசியலமைப்பு நிர்ணயசபையாகச் செயற்படும். மேலும், நாடுகடந்த தமிழீழ அரசினது ஆட்சிசார் செயற்பாடுகள் தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் தோறும் செயற்படும் அல்லது உருவாக்கப்படும் கட்டமைப்புக்களுடன் எத்தகைய உறவினைப் பேணுவது என்பதை இவ்வாறு நேரிடையாக தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களே முடிவு செய்வார்கள்.

சில நாடுகளில் தேர்தல்கள் மூலம் புதிய தேசியளவிலான கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம். நாங்கள் அத்தகைய சனநாயக முயற்சிகளை வரவேற்கின்றோம். ஆனாலும், இந்த வேளையில் அவ்வகை முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை. ஏனெனில், அவ்வாறுசெய்வதென்பது அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் சனநாயகமற்ற ஊகநடவடிக்கையாக அமைந்துவிடும்.
எம்முடனான தொடர்புகளுக்குரிய மின்னஞ்சல் முகவரி:info@govtamileelam.org
விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

4ம் திகதிக்குன்  திகதி எமது வெளியீட்டு

THESIYAM  கடந்த காலங்களில் இறுதிக்கட்டப்போர் ஆரம்பித்து உச்சகட்டமாக இடம்பெற்றபோது, புலத்தில் தமிழர்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுவோரால் பல போராட்ட வழிகள் பின்பற்றப்பட்டன. அப்போது எமது ஒன்றியத்தின் சார்பில் எமது ஒன்றிய எழுத்தாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையினை மீண்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இது மக்களுக்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 15-02-2009ற்கு முன்னர் இது அனுப்பிவைக்கப்பட்டதும் அருகன் தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது.

  “வணக்கம் மதிப்பின் தமிழ் நெஞ்சங்களே!!! 

 
வணக்கம் தமிழ் அமைப்புக்களே!!!


பல வருடங்களாக தமிழர்களுக்கு பல்வேறு வழிகளில் பாரிய செயல்திட்டங்கள் மூலமாக இத்தாலியில் இருந்து UNGA  “புதிய தலைமுறை ஒன்றியம்” செயற்பட்டு வருகின்றது.

இதன் செயற்பாடுகள்பற்றி இத்தாலி வாழ்மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் சில குள்ளநரிகள் எமது அமைப்பை குற்றப்படுத்தும் நோக்குடனும் செயலிழக்கச்செய்யும் நோக்குடனும் வஞ்சக வலையினை விரித்து வருகிறதை நாமறிந்துள்ளோம்.

இதனால் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறைவடைகின்றனவொழிய, ஒன்றியத்தின் செயற்திறன் அதிகரித்தே செல்கின்றது. தற்போதுள்ள நிலையில் எம்மை ஒதுக்கிவிடலாம் என்று கங்கணம்கட்டுவதோடு, மக்களையும் தூண்டி விடுகின்றனர்.

 
இதனால் எமக்கு மென்மேலும் உச்சாகத்தையும் தொழிற்திறனையும் அதிகரிக்கச்செய்வதனால் அத்தகையோருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். இம்மாத ஆரம்பப்பகுதியில், றோம் நகரில் தமிழர்களுக்காக எமது குரலைக் கொடுப்பதற்காக நாம் மேற்கொண்ட நிகழ்வில் தமிழர்களைக்கலந்து கொள்ளக்கூடாது என்று தடைசெய்தனர். இதனால் ஏற்படும் நல்விளைவுகளை பிடுங்கி எறியப் பார்க்கின்றனர். வீட்டுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கும் கல்லானது அடுத்த அத்திவாரத்திற்கு மூலைக்கல்லாக அமையும் என்பதனை அவர்கள் அறியாதவர் போலும்.

மேலும் தமிழ் அமைப்புக்களை இணையுமாறும் அதற்கான வழிகளை மேற்கொண்டும் அதற்கு முன்னுரிமை கொடுக்காது தம்மைச்சுற்றியே நற்பணிகள்நடக்கவேண்டும் என்றும், சரியோ தவறோ இப்படித்தான் செய்வோம் என்றும் எமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தோடும் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன… ஒரு காரியத்தைச் செய்யும்போது அது வெற்றியடைய வேண்டுமென்னால் அதனைத்திட்டமிட்டு திடமாகச்செய்ய வேண்டும். எப்படியோ செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்று செயற்படுவது முறையற்றது.  எமது ஒன்றியத்துடன் இணையாவிட்டாலும் உலகத்தமிழர்களின் போராட்டம் பின்வருமாறு புது முறையில் வழிநடத்தப்படவேண்டும்.


எமது தமிழர்களின் விடுதலைக்கான சிறந்த படிக்கற்கள் இவை…

•    முதலில்  உலகத்தமிழர்கள் மத்தியில் ஒவ்வொரு நாட்டிலும் ஐனநாயக முறையில் ஒரு பிரதிநிதி பிரபல்யமாகத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.


•    அப்பிரதிநிதிகள் ஓரிடத்தில் குழுமி தமிழர்களின் உலகப்பிரதிநிதிகளாகப்பிரகண்டனப்படுத்த வேண்டும்.

•    அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தமிழர்கள் சார்பில் கலந்துரையாட வேண்டும். பின்னர் மக்கள் சார்பில் சேவை அமைப்புக்களுடன் பேச வேண்டும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சேவை அமைப்புக்களில் உலகத்தமிழர் அனைவரும் குறிப்பாகப்போராட்டத்தில் பங்குபற்றிய அனைவரும் தத்தம் நாட்டில் அங்கம் வகிக்க வேண்டும்.

•    அவ்வங்கத்தவர்களின் வேண்டுகோள் அமைப்புக்களின் தலைமைக்கு எடுத்துச்செல்லப்படும். அவ்வேளையில் தமிழர் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள்.  இதன்மூலமாக ஈழத்தமிழர்களுக்கு இங்கிருந்து சேவை அமைப்புக்கள்மூலமாக நேரடியாக நாமே உதவமுடியும்.

•    உலகத்தமிழர் பிரதிநிதிகள்மூலம் ஐ.நா அமைப்புடன்கூட நேரடியாக உரையாட முடியும்.

•    உலக ஊடக வியலாளர்கள் எம்மைச்சுற்றுவதைவிட, நாம் உலக ஊடகவியலாளராகச்சுற்றினால் நாமே நமது நிலைகளை உலகிற்குக் கொண்டுவரலாமே!

•    உலக அரசு எம்மை நோக்கவில்லை என்றால், உலக அரசில் எமது அங்கம் இல்லை என்றுதான் பொருள். எனவே, அதில் எமது அங்கத்துவத்தை உருவாக்க மேற்சொன்ன வழியினை அமைக்க வேண்டும்.

•    இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அவர்களுக்காக தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று இத்தாலியர்கள் கேட்காத அளவிற்கு உலக விவகாரங்களில் நாம் தலையிடவேண்டும் அப்போதுதான் எமது விவகாரங்களில் உலகம்தலையிடும்.

•    நாம் இறக்கும் போதும், மற்றவர் இறப்பிற்காகக்கண்ணீர்விடும் இனம் எமது தமிழினம். இதன்பிரதிபலிப்பு அதிகரிக்கவேண்டும். அதனால்தான்; விடுதலைப்புலிகள் இன்னமும் (தமிழர்களின் அகோரஅழிவு கண்டும்) சிங்கள மக்களை அழிக்க முயலவில்லை.

•    எமது தேசத்திற்காகவும் ஒரு இனத்தின் அழிவிற்காகவும் தமது உயிரை பலிகொடுக்க முன்நிற்கும் தமிழ் உறவை நாம் அழிய விடலாமா அவர்களல்லவா நாட்டிற்காக வாழவேண்டியவர்கள். அவ்வாறான செயற்திறனிருப்போரை எவ்வாறு நாம் இழக்கலாம்? இவ்வாறான மன பலமுள்ளோரையும் உளத்திறனுள்ளோரையும் இழந்தோமேயானால் “மலரும்  மா தமிழீழத்தில்” எத்தனையோ புத்திஜீவிகளை இழக்கமாட்டோமா?

•    வயது மட்டும் அறிவை பிரதிபலிக்கும் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். அனுபவம் நிச்சயம் அறிவை வளர்த்திருக்கும் என்ற எமது திட்டத்தை மறக்க வேண்டும். கல்வியறிவுமட்டும் ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். இவற்றை நீக்கினால் எமது விடுதலைக்கு கொடுக்கப்படும் பல்வேறுபட்ட குரல்களின் எதிரொலிகள் கேட்கும் அதுகும் விடுதலைக்கான நல்வழிகளைச் செல்லும் என்பது புரியும். இதனால் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கொச்சப்படுத்தப்படுவதாக நினைப்பது முட்டாள்தனமானது. அதன்பிரதிபலிப்பும் அவசியம், போராட்டமும் அவசியம் வரலாறும் அவசியம் …

•    ஒருநாட்டில், மக்கள் போராட்டம் அந்நாட்டு 50 வருட அரசினையே மாற்றி அமைக்காத போது குறுகிய காலத்தில் உலகின் போக்கினை மாற்றியமைக்கும் என்பது சற்று வினாவிற்குரியதே???

•    தமிழர்கள் பிரதிநிதி இன்னமும் இலங்கை அரசில் இடம்பெற்றிருக்கும்போது, அப்பிரதிகள்- மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐனநாயகாக நடக்கும்போது, உலகு எவ்வகையில் அந்நாட்டு அதிகாரங்களில் தலையிடமுடியும்? அந்நாட்டில் எதிர்கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் எதிரொலிப்புகள் (எதிர்ப்பாக) உலகிற்குத்தெரியாத வகையில்,  ஐக்கிய நாடுகள் எவ்வாறு தலையிடமுடியும்?

•    எமது வேதனைகளின்பால் மேற்கொள்ளப்படும் போராட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டால்மட்டும் போதாது, வேதவைகள் தீர்க்கப்படக்கூடிய ரீதியில், கோரிக்கைகளையும் வேண்டுதல் அவசியமானவை. எனவே எமது போராட்டக்களும் கோரிக்கைகளும் பல்வேறு உலக அறிஞர்களாலும் சீர்செய்யப்பட்டதாக உலக நீதிமண்றத்துpன்முன்னால் மட்டும் முன்னெடுக்கப்படவேண்டும். எமது போராட்டத்தை தமது அரசியல் இலாபங்கருதி பயன்படுத்துவொரைக்கூட இன்று நாம்நம்பியிருக்க நேரிடுகின்றது என்றால் எமது துன்பத்தின்நிமித்தம் எமது திடபுத்தியினை சிதறடிக்க முணற்சிக்கின்றோம்என்று அர்த்தமில்லையா???

•    நாம் விண்ணப்பிக்கும் அனைத்தையும் மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவது வேறு, ஒருவர்க்கு இருக்கும் சட்டத்தின்முன் அதிகாரம் என்பது வேறு. எனவே யாரிடம் எதை கேட்கவேண்டும் என்பதனை முதலில் தீர்மாணிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யும் நாட்டில் அத்தடையினை நீக்கும்படி காரணங்களைக்காட்டி கோரிக்கை விடுவதுதான் ஏற்கக்கூடிய கோரிக்கை. எமது ஏக பிரதிநிதிகள் அவர்கள்என்பதனை நாம்தான் முடிவெடுக்கவேண்டும் அதனை உலகநாடுகளிடம் கேட்கக்கூடாது. அது போல உலக சட்டத்திற்கு முரணான இலங்கையின் செயற்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுங்கள். அது மாற்றப்பட்டால் நாடு தானாக பிரியும். 
•    …

இவைபோன்ற பல்வேறு மாற்று வழிகள் தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும். எனவே, புதிய வழிமுறைகளைக்கையாள நடவடிக்கைகளை பொறுப்பாகச்செயற்படுவோர் தலையிட்டு மேற்கொள்ள வேண்டும்.

எமது அமைப்பும் எனது தனிப்பட்ட செயலும், இலங்கை அரசு சட்டமிருந்தும் தமிழர்களுக்கு வழங்கமறுக்கும் உரிமைகளையே பெரும்பாலும் உலகிற்கு எடுத்துக்காட்ட  முயற்சிக்கிறது, இதன்மூலம் தமிழர்களுக்கு நிகழ்ந்துவரும் இழப்புக்கள் மனித உரிமைமீறல்கள் போன்றவற்றை உளச்சிக்கல்கள், எதிர்காலத்தாக்கங்கள் போன்றவற்றை வெளிக்காட்டுவதில் முன்நிற்கின்றன… எனினும் தமிழர்கள் ஒத்துளைப்பின்மை காரணமாக எம்மால் மென்மேலும் பலமாகச் செயற்பட முடியாமல் இருக்கின்றன. தமிழர்கள் விடிவில் அக்கறையுள்ளோர் இக்கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இது தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டிலே வெளியிடப்பட்ட ஆக்கத்தில் மேலும் அழுத்தமா விடுதலை நோக்கிய படிக்கற்கள் அமைந்திருக்கின்றன….

அன்பன் அருகன்.
இத்தாலியில் இருந்து.

தொடர்புகளுக்கு arugan@hotmail.it

இதற்கமைய தமிழர் பேரவையால் தற்போது எடுத்துநடாத்தப்படும் நாடுகடந்த அரசை அமைப்பது தொடர்பாக அப்படியே மாற்றமின்றி வெளியிடப்பட்டமை குநறிப்பிடத்தக்கது. எனினும் இதுதொடர்பாக புலத்தில் இயங்பகிவரும் பல அமைப்புக்களை இத்திட்டத்தில் இருந்து விலக்கியே இதனை அமைத்திருப்பது தெரியவருகின்றது. இதனை அமைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது மீழவும் வெளியிடப்படுகின்றது.

முடிவாக எமது கருத்து, எமது திட்டங்களும் போக்குகளும் தமிழீழத்தை உருவாக்க வழிவகுக்குமாக இருந்தால், எதற்காக எமது பக்கம் தங்கள் அமைப்பின்பார்வை செல்லுவதற்குக்குத் தாமதமாகின்றது??? வேகமும் விவேகமும் தனிய கல்வியறிவில் மட்டும் நிலைத்திருக்கமுடியாது என்பதனை எமது தலைவர்அவர்களிடம் இருந்தே கற்றுக்கொள்ளலாமே!!!  எம்முடன் தொடர்பு கொள்ள  - arugan@hotmail.it or thesiyam@hotmail.it or info@thesiyam@.org

www.thesiyam.org

November 04

UNGA ஒன்றியத்தின் அனைத்துப்போக்கும் தமிழர்களின் தார்மீக உரிமையினை நோக்கியே சொல்கின்றன...

கடந்த காலங்களில் இறுதிக்கட்டப்போர் ஆரம்பித்து உச்சகட்டமாக இடம்பெற்றபோது, புலத்தில் தமிழர்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுவோரால் பல போராட்ட வழிகள் பின்பற்றப்பட்டன. அப்போது எமது ஒன்றியத்தின் சார்பில் எமது ஒன்றிய எழுத்தாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையினை மீண்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இது மக்களுக்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 15-02-2009ற்கு முன்னர் இது அனுப்பிவைக்கப்பட்டதும் அருகன் தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டதும் என்பது குறிப்பிடத்தக்கது.

 New UNGA copy “வணக்கம் மதிப்பின் தமிழ் நெஞ்சங்களே!!! 

 
வணக்கம் தமிழ் அமைப்புக்களே!!!


பல வருடங்களாக தமிழர்களுக்கு பல்வேறு வழிகளில் பாரிய செயல்திட்டங்கள் மூலமாக இத்தாலியில் இருந்து UNGA  “புதிய தலைமுறை ஒன்றியம்” செயற்பட்டு வருகின்றது.

இதன் செயற்பாடுகள்பற்றி இத்தாலி வாழ்மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் சில குள்ளநரிகள் எமது அமைப்பை குற்றப்படுத்தும் நோக்குடனும் செயலிழக்கச்செய்யும் நோக்குடனும் வஞ்சக வலையினை விரித்து வருகிறதை நாமறிந்துள்ளோம்.

இதனால் தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறைவடைகின்றனவொழிய, ஒன்றியத்தின் செயற்திறன் அதிகரித்தே செல்கின்றது. தற்போதுள்ள நிலையில் எம்மை ஒதுக்கிவிடலாம் என்று கங்கணம்கட்டுவதோடு, மக்களையும் தூண்டி விடுகின்றனர்.

 
இதனால் எமக்கு மென்மேலும் உச்சாகத்தையும் தொழிற்திறனையும் அதிகரிக்கச்செய்வதனால் அத்தகையோருக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். இம்மாத ஆரம்பப்பகுதியில், றோம் நகரில் தமிழர்களுக்காக எமது குரலைக் கொடுப்பதற்காக நாம் மேற்கொண்ட நிகழ்வில் தமிழர்களைக்கலந்து கொள்ளக்கூடாது என்று தடைசெய்தனர். இதனால் ஏற்படும் நல்விளைவுகளை பிடுங்கி எறியப் பார்க்கின்றனர். வீட்டுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கும் கல்லானது அடுத்த அத்திவாரத்திற்கு மூலைக்கல்லாக அமையும் என்பதனை அவர்கள் அறியாதவர் போலும்.

மேலும் தமிழ் அமைப்புக்களை இணையுமாறும் அதற்கான வழிகளை மேற்கொண்டும் அதற்கு முன்னுரிமை கொடுக்காது தம்மைச்சுற்றியே நற்பணிகள்நடக்கவேண்டும் என்றும், சரியோ தவறோ இப்படித்தான் செய்வோம் என்றும் எமக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தோடும் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன… ஒரு காரியத்தைச் செய்யும்போது அது வெற்றியடைய வேண்டுமென்னால் அதனைத்திட்டமிட்டு திடமாகச்செய்ய வேண்டும். எப்படியோ செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்று செயற்படுவது முறையற்றது.  எமது ஒன்றியத்துடன் இணையாவிட்டாலும் உலகத்தமிழர்களின் போராட்டம் பின்வருமாறு புது முறையில் வழிநடத்தப்படவேண்டும்.


எமது தமிழர்களின் விடுதலைக்கான சிறந்த படிக்கற்கள் இவை…

•    முதலில்  உலகத்தமிழர்கள் மத்தியில் ஒவ்வொரு நாட்டிலும் ஐனநாயக முறையில் ஒரு பிரதிநிதி பிரபல்யமாகத் தெரிவு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.


•    அப்பிரதிநிதிகள் ஓரிடத்தில் குழுமி தமிழர்களின் உலகப்பிரதிநிதிகளாகப்பிரகண்டனப்படுத்த வேண்டும்.

•    அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தமிழர்கள் சார்பில் கலந்துரையாட வேண்டும். பின்னர் மக்கள் சார்பில் சேவை அமைப்புக்களுடன் பேச வேண்டும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சேவை அமைப்புக்களில் உலகத்தமிழர் அனைவரும் குறிப்பாகப்போராட்டத்தில் பங்குபற்றிய அனைவரும் தத்தம் நாட்டில் அங்கம் வகிக்க வேண்டும்.

•    அவ்வங்கத்தவர்களின் வேண்டுகோள் அமைப்புக்களின் தலைமைக்கு எடுத்துச்செல்லப்படும். அவ்வேளையில் தமிழர் பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள்.  இதன்மூலமாக ஈழத்தமிழர்களுக்கு இங்கிருந்து சேவை அமைப்புக்கள்மூலமாக நேரடியாக நாமே உதவமுடியும்.

•    உலகத்தமிழர் பிரதிநிதிகள்மூலம் ஐ.நா அமைப்புடன்கூட நேரடியாக உரையாட முடியும்.

•    உலக ஊடக வியலாளர்கள் எம்மைச்சுற்றுவதைவிட, நாம் உலக ஊடகவியலாளராகச்சுற்றினால் நாமே நமது நிலைகளை உலகிற்குக் கொண்டுவரலாமே!

•    உலக அரசு எம்மை நோக்கவில்லை என்றால், உலக அரசில் எமது அங்கம் இல்லை என்றுதான் பொருள். எனவே, அதில் எமது அங்கத்துவத்தை உருவாக்க மேற்சொன்ன வழியினை அமைக்க வேண்டும்.

•    இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அவர்களுக்காக தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று இத்தாலியர்கள் கேட்காத அளவிற்கு உலக விவகாரங்களில் நாம் தலையிடவேண்டும் அப்போதுதான் எமது விவகாரங்களில் உலகம்தலையிடும்.

•    நாம் இறக்கும் போதும், மற்றவர் இறப்பிற்காகக்கண்ணீர்விடும் இனம் எமது தமிழினம். இதன்பிரதிபலிப்பு அதிகரிக்கவேண்டும். அதனால்தான்; விடுதலைப்புலிகள் இன்னமும் (தமிழர்களின் அகோரஅழிவு கண்டும்) சிங்கள மக்களை அழிக்க முயலவில்லை.

•    எமது தேசத்திற்காகவும் ஒரு இனத்தின் அழிவிற்காகவும் தமது உயிரை பலிகொடுக்க முன்நிற்கும் தமிழ் உறவை நாம் அழிய விடலாமா அவர்களல்லவா நாட்டிற்காக வாழவேண்டியவர்கள். அவ்வாறான செயற்திறனிருப்போரை எவ்வாறு நாம் இழக்கலாம்? இவ்வாறான மன பலமுள்ளோரையும் உளத்திறனுள்ளோரையும் இழந்தோமேயானால் “மலரும்  மா தமிழீழத்தில்” எத்தனையோ புத்திஜீவிகளை இழக்கமாட்டோமா?

•    வயது மட்டும் அறிவை பிரதிபலிக்கும் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். அனுபவம் நிச்சயம் அறிவை வளர்த்திருக்கும் என்ற எமது திட்டத்தை மறக்க வேண்டும். கல்வியறிவுமட்டும் ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும். இவற்றை நீக்கினால் எமது விடுதலைக்கு கொடுக்கப்படும் பல்வேறுபட்ட குரல்களின் எதிரொலிகள் கேட்கும் அதுகும் விடுதலைக்கான நல்வழிகளைச் செல்லும் என்பது புரியும். இதனால் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் கொச்சப்படுத்தப்படுவதாக நினைப்பது முட்டாள்தனமானது. அதன்பிரதிபலிப்பும் அவசியம், போராட்டமும் அவசியம் வரலாறும் அவசியம் …

•    ஒருநாட்டில், மக்கள் போராட்டம் அந்நாட்டு 50 வருட அரசினையே மாற்றி அமைக்காத போது குறுகிய காலத்தில் உலகின் போக்கினை மாற்றியமைக்கும் என்பது சற்று வினாவிற்குரியதே???

•    தமிழர்கள் பிரதிநிதி இன்னமும் இலங்கை அரசில் இடம்பெற்றிருக்கும்போது, அப்பிரதிகள்- மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐனநாயகாக நடக்கும்போது, உலகு எவ்வகையில் அந்நாட்டு அதிகாரங்களில் தலையிடமுடியும்? அந்நாட்டில் எதிர்கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் எதிரொலிப்புகள் (எதிர்ப்பாக) உலகிற்குத்தெரியாத வகையில்,  ஐக்கிய நாடுகள் எவ்வாறு தலையிடமுடியும்?

•    எமது வேதனைகளின்பால் மேற்கொள்ளப்படும் போராட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டால்மட்டும் போதாது, வேதவைகள் தீர்க்கப்படக்கூடிய ரீதியில், கோரிக்கைகளையும் வேண்டுதல் அவசியமானவை. எனவே எமது போராட்டக்களும் கோரிக்கைகளும் பல்வேறு உலக அறிஞர்களாலும் சீர்செய்யப்பட்டதாக உலக நீதிமண்றத்துpன்முன்னால் மட்டும் முன்னெடுக்கப்படவேண்டும். எமது போராட்டத்தை தமது அரசியல் இலாபங்கருதி பயன்படுத்துவொரைக்கூட இன்று நாம்நம்பியிருக்க நேரிடுகின்றது என்றால் எமது துன்பத்தின்நிமித்தம் எமது திடபுத்தியினை சிதறடிக்க முணற்சிக்கின்றோம்என்று அர்த்தமில்லையா???

•    நாம் விண்ணப்பிக்கும் அனைத்தையும் மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று விரும்புவது வேறு, ஒருவர்க்கு இருக்கும் சட்டத்தின்முன் அதிகாரம் என்பது வேறு. எனவே யாரிடம் எதை கேட்கவேண்டும் என்பதனை முதலில் தீர்மாணிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யும் நாட்டில் அத்தடையினை நீக்கும்படி காரணங்களைக்காட்டி கோரிக்கை விடுவதுதான் ஏற்கக்கூடிய கோரிக்கை. எமது ஏக பிரதிநிதிகள் அவர்கள்என்பதனை நாம்தான் முடிவெடுக்கவேண்டும் அதனை உலகநாடுகளிடம் கேட்கக்கூடாது. அது போல உலக சட்டத்திற்கு முரணான இலங்கையின் செயற்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டுங்கள். அது மாற்றப்பட்டால் நாடு தானாக பிரியும். 
•    …

இவைபோன்ற பல்வேறு மாற்று வழிகள் தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும். எனவே, புதிய வழிமுறைகளைக்கையாள நடவடிக்கைகளை பொறுப்பாகச்செயற்படுவோர் தலையிட்டு மேற்கொள்ள வேண்டும்.

எமது அமைப்பும் எனது தனிப்பட்ட செயலும், இலங்கை அரசு சட்டமிருந்தும் தமிழர்களுக்கு வழங்கமறுக்கும் உரிமைகளையே பெரும்பாலும் உலகிற்கு எடுத்துக்காட்ட  முயற்சிக்கிறது, இதன்மூலம் தமிழர்களுக்கு நிகழ்ந்துவரும் இழப்புக்கள் மனித உரிமைமீறல்கள் போன்றவற்றை உளச்சிக்கல்கள், எதிர்காலத்தாக்கங்கள் போன்றவற்றை வெளிக்காட்டுவதில் முன்நிற்கின்றன… எனினும் தமிழர்கள் ஒத்துளைப்பின்மை காரணமாக எம்மால் மென்மேலும் பலமாகச் செயற்பட முடியாமல் இருக்கின்றன. தமிழர்கள் விடிவில் அக்கறையுள்ளோர் இக்கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இது தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டிலே வெளியிடப்பட்ட ஆக்கத்தில் மேலும் அழுத்தமா விடுதலை நோக்கிய படிக்கற்கள் அமைந்திருக்கின்றன….

அன்பன் அருகன்.
இத்தாலியில் இருந்து.

தொடர்புகளுக்கு arugan@hotmail.it

இதற்கமைய தமிழர் பேரவையால் தற்போது எடுத்துநடாத்தப்படும் நாடுகடந்த அரசை அமைப்பது தொடர்பாக அப்படியே மாற்றமின்றி வெளியிடப்பட்டமை குநறிப்பிடத்தக்கது. எனினும் இதுதொடர்பாக புலத்தில் இயங்பகிவரும் பல அமைப்புக்களை இத்திட்டத்தில் இருந்து விலக்கியே இதனை அமைத்திருப்பது தெரியவருகின்றது. இதனை அமைப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது மீழவும் வெளியிடப்படுகின்றது.

புதிய தமிழீழம் எப்படி உருவாகும்? தவறுகளைச்சீர்செய்யும்போது மட்டுமே!!!

புதிய தமிழ் ஈழம்

வணக்கம் அன்பு உறவுகளே!

எமக்கிருக்கும் பிடிவாதம் ஒரு குடையின் கீழும், அறிவுடையோரின் ஆணையின் கீழும் அமையுமாயின் விடிவு கிடைத்து, பல வருடங்கள் ஆகியிருக்கும். நாம்தான் யாரின் சொல்லையும் கேட்கமாட்டோமே!!!. அரசியல் என்றால் என்னவென்று தெரியாதோர் மத்தியில் அரசியல் பேசுகின்றோம்! அரசியல் அறிவுடையோரை அவமதிக்கின்றோம். மனித நேயமில்லாதோருடன் கூடி மனித நேயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு, பொதுநலத்தொண்டு செய்வோரை உதார்சீனப்படுத்துகின்றோம். அநுபூதித்தனமான கருத்துக்களைச் செல்வோரை அவமதித்து எதிரியாக்கி வஞ்சகம் செய்கின்றோம். எம்முயிர் அழிவுகளைக்கண்டும், போலிச்சாட்டுத்தேடுகின்றோம். எமது எதிரியின் திறனையும் பாராட்டும் மனப்பக்குவம் எப் போது எமக்கு வருகின்றதோ, அப்போது நாம் மனித நேயத்தை மதிக்கின்றோம் என்று பொருள். அப்போது உண்மையின் வழி செல்ல முயற்சிக்கின்றோம் என்று பொருள். எமது உறவின் திறனையும் அவர்களின் நியாயமான கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுக்க முயற்றிக்க வேண்டும். அவர் எந்த அமைப்பு? அவர் எமக்கு ஆதரவானவரா எதிரானவரா? அவனை விட்டால் எமது தன்மானத்திற்கு இழிவு என்றெல்லாம் பேசியே எமது கையிலிருந்த பழத்தை நழுவி பாலில் விழுவதற்குப்பதிலாக சேற்றில் போட்டுவிட்டோம்.

அன்றே அருகனின் எழுத்துக்கள் (Malarum ma thamileelam) எடுத்துக்காட்டின… எமக்கு மேல் கருமேகம் சூழப்போகின்றது, எமது பாதைகளை மாற்ற வேண்டும் என்று பல தலைமைத்துவத்திற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் வேற்று நாட்டவர்களின் அறிவிற்குக் கொடுக்கும் முன்னுரிமையினை எமது இனத்தவருக்குக்கொடுக்க மறுத்துவிட்டோம். இதில் ஊடகச் சாதனங்களையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன். லண்டனில் தேர்தலில் நிற்கும் தமிழ்ப் பெண்ணிற்கு சர்வதேச ரீதியில் விளம்பரம், சர்வதேவ செயற்பாட்டில் ஈடுபடும் தமக்குச் சார்பற்ற அல்லது பிற தமிழ் அமைப்பிற்கு எதிர்ப்பிரச்சாரம் அல்லது மௌனம். இது எந்த வகையில் நியாயம். இவ்வாறான செயற்பாடுகள் அறிவுபூர்வமானவை என்பதனை தமிழர்கள் ஏற்றுக்கொண்டமையே இன்று எமது பின்னடைவும் அழிவும் என்றால் அது தவறில்லை. பல தமிழர்கள் இப்போதும் கூட்டுக்குள் இருந்து வெளிவர முயலவில்லை.

எமக்குச்சாதகம், எமதுபக்கம் மட்டும் நியாயம் என்று பார்த்து, சட்டங்களையும் அரசுகளையும் குற்றம் சுமத்தினோம். திரு சொல்கைம்மை கொச்சைப்படுத்தினோம். சர்வதேசத்தை ஏழனஞ்செய்தோம். இன்னமும் இலங்கையிடம் அடிமைப்பட்டு அவர்களின் கடவுச்சீட்டை வைத்துக்கொண்டே, அத்தலைமையினை கேவலமாக எள்ளி நகையாடினோம். கடவுச்சீட்டினைத்தூக்கி எறிந்துவிட்டு, எமது பிறப்பு  அத்தாட்சியைத் தொலைத்துவிட்டு, இலங்கைப்பதிவினை ஒதுக்கிவிட்டு அத்தலைமையைக்குறை செல்லவேண்டும். எமது கோரிக்கை நியாயமானது எமது போராட்டம் நியாயமானது. அதற்காக எதிரியாகக்கருதப்படுவோரை தாழ்வாகவோ, கோளையாகவோ, ஏழனமாகவோ பார்ப்பதும் பழிப்பதும் நீதியானதோ! தலைமைப்பதவிகள் மாற்றத்திற்குரியன. அப்படியிருக்க முன்பிருந்து எமக்கு அநியாயஞ்செய்தோரை ஏன்சும்மா இப்போது விட்டோம்.

சிங்களவன் என்ற பதத்தைப்பயன்படுத்துகின்றோமே! சிங்கள மக்கள் என்ன செய்தார்கள்? தமிழர்களுடைய சிக்கல் தெரியாத ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் இன்னமும் இருக்கின்றார்களே! சிங்கள அரசியல்வாதிகள் தமிழுக்கான உரிமையைக்கொடுக்கவில்லை. அதை தமிழ் அரசியல்வாதிகள் பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய இயலாமைக்கு சிங்களவர் என்ற பதம் சரியானதா?

இன்று தமிழர்களான நாம் தமிழுக்கு உரிமையும், மதிப்பும் கொடுக்கின்றோமா? ஆங்கிலத்தில் பேசுவோர் மட்டுமே அறிவாளிகள் என்று நம்பும் முட்டாள்களாக நாம் இருக்கின்றோம். எந்த ஈழத்தமிழ் அறிவாளிகளின் படைப்பை பிற மொழிகளில் மொழிபெயர்க்க எமக்கொரு அமைப்பு இருக்கிறது. எதையும் நீதியாகச்சொன்னால் உண்மையாகச் சொன்னால், அவர்களுக்கெதிராக கூட்டத்தைச் சேர்க்கின்றோம். மாறாக, அவர்செல்வது என்னவென்று நின்று கேட்க செவிகொடுக்க மறுக்கின்றோம். நல்ல இனம் எம்மினம். தற்போதைய அமைச்சரான திரு கருணாவைப்பற்றி முழுத்தகவலும் தெரியாமலே பலர் அவரைப்பற்றி ஊடகங்களில்கூட, தேசத்துரோகி என்றும் கேவலமான வார்த்தைகளாலும் எள்ளி நகையாடினர். அவருக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்தது என்ன??? பல விடயங்களை மறைத்துப்பேசுகின்றோம். எமது சிறப்புகளை புளுகித்தள்ளுகின்றோம். எமது அறிவினை வளர்ப்பதற்குப்பதிலாக மங்கச்செய்கின்றோம். இன்று உலகரீதியில் மேற்கொள்ளும் விடயங்கள் அருகனால் பல வருடங்களுக்கு முன்னால் எச்சரிக்கப்பட்டது. ஆனால் அவரை பலர் நச்சரித்துத்தள்ளினர். இப்போதும் அவருக்கெதிராக சில அமைப்புக்கள் வகைதேடுகின்றனர். தமிழர்களுக்காக உலக ரீதியில் பாடுபடும் அவரின் சேவையினைக் கொச்சைப்படுத்துகின்றனர். பத்துவருடத்திற்கும் மேலான துணைவியாருடன் இணைந்த அவருடைய சேவையினை எத்தனை தமிழர்கள் அறிவார்கள்? எந்த ஊடகம் அவர்களை உற்று நோக்கியது?… தமிழர்களுக்காக அவர்கள் பட்ட பாடுகளை பதிவுகள் தெளிவுபடுத்தும்.

இப்படி இருக்க எத்தனை தமிழ் உறவினை இன்றுவரை பலிகொடுத்துள்ளோம்??? புலத்திலும் சரி நிலத்திலுஞ்சரி இழந்த உயிர்களின் விலை என்ன???

எப்போதுமே தத்துவங்களும் தத்துவவாதிகளும் அநர்த்தகாலத்தில் மதிக்கப்பட்டதாகவோ, கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே சரித்திரம் காட்டவில்லையே!!! உண்மைகளையும் நீதிகளையும் எடுத்துக்காட்டும்போது, ஒருபக்கத்தாருக்கு பாதகமாகவே காணப்படும் என்பது உண்மையே!!! இந்தவகையிலேயே அருகனின் கருத்துக்களும் காணப்படுகின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது...

“இரத்தம்சிந்தாமல் சமாதானம்” என்பதே அருகனின் திட்டம் அதை யாரும் அப்போதும் ஏற்கவில்லை இப்போதும் கேட்கவில்லை ஆனால் அவரின் அடிகள் இன்றும் தமிழர்களுக்காய்த் தொடர்கின்றது.

- ஒன்றியத்தின் சார்பில் - 

 

Video

 

Video

Video

No content has been added yet.

Video

Video

 

Video