Arugan's profileஅருகன்PhotosBlogListsMore Tools Help

அருகன்

புதிய தலைமுறை ஒன்றியத்தின் தத்துவ முற்போக்கு எழுத்தாளரும், வெளியீட்டு பணிமனையும் Scrittore Tamil - Tamil writter - Italy

Arugan Maximin

Occupation
Location
Interests
இத்தாலியின் தமிழ் எழுத்தாளர் - கவிதை, கட்டுரை, கதை, அரசியல், வரலாறு, விமர்சனம், செய்தி, தகவல், போன்ற ஏராளம் தகவல் உள்ளடங்கிய இணையத்தளம். தொடர்புகளுக்கு +39 3204031624

இணையத்தின்மூலம் கருத்துக்களைப்பரிமாற்றுவதற்கு Skype- arugan2008 படுத்தலாம் நன்றிகள்.

தொழில்- "வெளிநாட்டவர்களுக்கான ஆவணங்கள் தொடர்பான அலுவலகம்."

வெளிநாட்டவர்களுக்கான அலுவலகங்களில் சந்திப்பதற்கான இடமும் நேரங்களும்...

திங்கள் காலை றெஜியோ எமிலியா (Reggio Emilia) நகரசபை
செவ்வாய் சாந்திலாறியோ (Sant'ilario )நகரசபை
புதன் ஸ்கந்தியானோ (Scandiano)நகரசபை
வியாளன் ஸ்கந்தியானோ (Scandiano) நகரசபை
வெள்ளி றெஜியோ எமிலியா (Reggio Emilia) நகரசபை
சனி கனோஸ்ஷா (Canossa) நகரசபை

Video

 
Photo 1 of 50
Photo 1 of 3
More albums (1)
கல்வி
இத்தாலியில் இருந்து
No list items have been added yet.
இணைய பதிவுகள்
இத்தாலியில் இருந்து
February 09

தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தமிழீழம், தனிநாடாக அமைய என்ன வழிகள்- மீழ் வெளியீடு

pesidentil_election_2010 தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தமிழீழம், தனிநாடாக அமைய என்ன வழிகள்- பகுதி -1

ஏற்கனவே எழுதிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் நான் தள்ளப்படுகின்றேன். அதாவது, “மண்மைகழுவப்பட்ட மக்கள்மத்தியில் தொண்டைகிழியக்கத்தினாலும் தேசம் கிடைக்கப் போவதில்லை”  பலர் மக்கள் தொகையினைவைத்து தமிழீழத்தின் கோரிக்கையினை புறந்தள்ளப்பார்க்கின்றனர். ஒரு நாட்டின் பெரும் அம்சமாகக்கருதப்படுவது மக்களேயாயினும், மக்கள்தொகையினைவைத்து அரசினை எடைபோடமுடியாது. மேலும் வாசிக்க »

தீவிர வாதச் சிந்தனைகள் சீர்திருத்தப் படட்டும். - Arugan

Arugan.comபோர்க் கருவிகள் மண்ணுக்குள் புதைக்கப்பட வேண்டிய அத்தியாயம். உலகத்து இராணுவ வீரர்கள் புதிய இராகம் இசைக்கட்டும். அவர்கள் உடுதுணிகள் பூமணம் வீசட்டும். தீவிர வாதச் சிந்தனைகள் சீர்திருத்தப் படட்டும்.

ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட சில வரிகள் இப்போது மீண்டுஞ் ஞாபகத்துக்கு வருகிறது...

 

யார் நடத்திய வேள்வியிது?
வேரோடு வெள்ளம் கொண்ட தாகத்துக்குப் -பல
நூறாயிரம் பேர் மண்ணோடு போராட்;டம்.
இயற்கையின் சமநிலை சீர் கெட்டதோ!!
மரணத்தின் வழியாலே பகிர்வுண்டதோ!!!

ஓ இயற்கையே!!
உன்சீற்றத்தைக் காட்டென்று
யார் கேட்டார்??!!
உன் தோற்றதை காட்டென்று
யார் கேட்டார்??!!
யார் நடத்திய வேள்விக்கு
நாமிங்கு பலியானோம்!!

இத்தோடு உங்கள் போர் கொடிகளை
குளிருக்குப் போர்வை ஆக்குங்கள்.
ஆயுதங்களை விளைநிலத்தில் களை பிடுங்கும்
கருவிகள் ஆக்குங்கள.;
இயற்கையின் அகோரத்திலும் பார்க்க
உங்கள் “பற்று” ஒன்றும் பெரிதல்ல!!!!
ஒரு நொடியில் அழித்துவிடக்கூடிய
அனர்தத்திலும் பார்க்க – உங்கள்
ஆணவ அதிகாரம் ஒன்றும் பெரிதல்ல!!!!

இயற்கையின் சமநிலை பற்றாக் குறைதனை
சீர் செய்யும் அதிகாரம் அதனிடம் உண்டு,
அழிவுக்குக் காரணமான அமைப்புகளுக்கு
இயற்கைவிடும் எச்சரிக்கை தான் இந்த சமிஞ்சை.
போர்க் கொடிகளால் பூமியில்
ஏற்படும் கொதிப்பின் விளைவை
பெருங்கடல் கூட தணித்துக் கொள்ளமுடியவில்லை!!!!
உங்கள் பூஜைகளுங்கூட!!!...
உலகத்தின் ஆதிக்க அதிகார வெறியின் விளைவு
இயற்கையின் அற்ப தும்மலுக்கும் ஒப்பாகாது.
ஆக்கத்தை மட்டும் பொறுப்பெடுங்கள்
அழிவின் பொறுப்பு அனர்தத்திடம் …

“ இதுதானா மில்லெனிய மாற்றம்?”  2004ம் ஆண்டு வெளியிட்ட நாவலில் இருந்து   …

இப்போது மட்டுமல்ல, உலகத்தை எப்போதுமே ஆட்சி செய்து கொண்டிருப்பது “அன்பல்ல” மாறாக “பயமே”!!

Kann - Aruganஒன்றின் மீதுள்ள பயம்தான் வழ்கையினை நடத்த துணிவு கொடுக்கின்றது என்றாலும், அந்தப்பயம் ஒருவரிடத்தில் நிலையாய் எப்போதும் நிலைத்ததில்லை - அருகன்.

இப்போது மட்டுமல்ல, உலகத்தை எப்போதுமே ஆட்சி செய்து கொண்டிருப்பது “அன்பல்ல” மாறாக  “பயமே”!!

வல்லரசு  சிற்றரசைத்தாக்கும், அல்லது ஆக்கிரமிக்கும் என்ற பயம்.
பலவீனன் பலமுள்ளவனைப் பார்த்துப் பயம்.
எரிமலை வெடிக்கும் என்று பயம்.
கடலலை (சுனாமி) பெருகும் என்று பயம்.
தலைமுடி நரைக்கும் என்று பயம்.
கண்ணில் தூசி விழும் என்று பயம்.
இருளில் நடப்பதென்றால்ப் பயம்.
விமானத்தில் போவதென்றால்ப் பயம்.
வீதியில் நடப்பதென்றால்ப் பயம்.
வியாபாரம் செய்வதற்குப்பயம்.
அப்பா பேசுவாரென்று பயம்.
ஆசிரியர் அடிப்பாரென்று பயம்.
பாம்பு கொத்தும் என்று பயம்.
எறும்பு காலைக்கடிக்கும் என்று பயம்.
இடி இடிக்கும் போது பயம்.
மின்னல் தெரியும் போது பயம்.
கடல் பிரயாணம் என்றால்ப் பயம்.
காற்று அடிக்கும் போது பயம்.
கணவன் மனைவிக்கிடையே பயம்.
காதலருக்கிடையே பயம்.
உறவுகளுக்கிடையே பயம்.
எதிரிகளுக்கிடையே பயம்.
ஏமாற்றுவோரைக்கண்டால் பயம்.
ஏமாற்றுவதற்கும்பயம்.
அரச வரிக்கும் பயம்.
அரிசியில் கல்லுக்கும் பயம்.
சாதனை ஒன்றைச் சாதிக்கப்பயம்.
சொந்த இடத்தில் வாழப்பயம்.
வந்தஇடத்தில் பேசப்பயம். 
மரணம்வந்து முடியும் என்றுபயம்.

பயம் பயம் பயம் …

எலிக்குப்பூனையைக்கண்டால் பயம்.
பூனைக்கு நாயைக்கண்டால் பயம்.
மிருகங்களுக்கு மனிதனைக் கண்டால் பயம்.
மனிதனுக்கு மிருகங்களைக்கண்டால் பயம்.

பொதுமக்களுக்கு அதிகாரிகளைக் கண்டால் பயம்.
கீழ் அதிகாரிக்கு மேல் அதிகாரியைக் கண்டால் பயம்.
மேல் அதிகாரிக்குத் தன்பதவி போய்விடுமென்ற பயம்.

உயிரினங்கள் எல்லாம் அன்பில் நிலைத்திருக்கோ இல்லையோ, பயத்தில்த்தான் அதிகம் நிறைந்திருக்கிறது என்பதனை நடைமுறை காட்டத் தவறவில்லை.

“ இதுதானா மில்லெனிய மாற்றம்?”  2004ம் ஆண்டு வெளியிட்ட நாவலில் இருந்து                                                  

யாருக்காக, யாரிடம் இருந்து தமிழீழம்- அருகன்.

tn_sarath-ltte “ஆத்தில வச்சிட்டு குழத்தில தேடுறமாதிரி” … என்று ஒரு பழமொழி உண்டு, அது போலவே “குளத்துடன் கோவிச்சுக்கொண்டு…” என்று இன்னொன்றும் உண்டு… இது மிகச்சரியாக தமிழர்களுக்குப்பொருந்தும்.

யாரெல்லாம் குற்றவாளியாகத் தேடப்படுகின்றார்களோ?, யாரெல்லாம் தமிழர்களை படுகுழிக்குள் தள்ளுகின்றார்களோ அவர்களை யெல்லாம் தமிழர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளார்கள்.

மேலும் வாசிக்க »

யாருக்காக, யாரிடம் இருந்து தமிழீழம்- அருகன்.

“ஆத்தில வச்சிட்டு குழத்தில தேடுறமாதிரி” … என்று ஒரு பழமொழி உண்டு, அது போலவே “குளத்துடன் கோவிச்சுக்கொண்டு…” என்று இன்னொன்றும் உண்டு… இது மிகச்சரியாக தமிழர்களுக்குப்பொருந்தும்.

யாரெல்லாம் குற்றவாளியாகத் தேடப்படுகின்றார்களோ?, யாரெல்லாம் தமிழர்களை படுகுழிக்குள் தள்ளுகின்றார்களோ அவர்களை யெல்லாம் தமிழர்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளார்கள்.

கேபியை தலைவர் என்றார்கள்… அவர் ஏற்கனவே சர்வதேச குற்றவாளியாகப் பட்டியலிடப்பட்டவர். பொட்டம்மானை அடுத்த தலைவர் என்றார்கள் … இவரும் தேடப்படுபவரே!!! சரி இதையெல்லாம் விடுங்கள் இவர்கள் தமிழர்கள்!!! தமிழர்களுக்காகப்பாடுபட்டவர்கள். தமிழர்களின் விடிவிற்காகத் தம்முயிரையே துச்சமென அர்ப்பணித்தவர்கள். கடினமான பாதைகளை பல வருடங்களாக கடந்தவர்கள்…

இவர்கள் சர்வதேசத்திற்கு வேண்டும் என்றால் குற்றவாளியாகட்டும் எமக்கெல்லாம் தேசத்தைக்காக்கா போராடிய தெய்வங்களே!!!

தெய்வங்களாக இருந்து தவறுசெய்தவர்களே சாத்தான்களாகவும் இருக்கின்றார்கள். அது போகட்டும்.

ஆனால் இந்த சரத் பொன்செக்காவை ஆதரவளித்த முட்டாள் செயல் இருக்கே!!! அந்நார்ந்து பார்த்து வணத்தில் எச்சிலைத்துப்பினால் என்ன நடக்கும் அது திரும்பிவந்து துப்பியவர் முகத்தில்தான் படியும் அது போலவே கூட்டமைப்பின் வழியில் தமிழர்களின் முகத்தில் எச்சிலையும், கரியையும் பூசி தமிழர்களுக்கு பெரும் களங்கத்தையே ஏற்படுத்திவிட்டனர்.

மகிந்த நாலுவருடமே புலிகளுக்கு எதிராகப்போராடினார் என்றால், மிஸ்டர் சரத் 25வருடங்களாக தமிழர்களுக்கு எதிராக வண்முறையினைக் கட்டவிழ்த்துவிட்டவர்!!! இப்போது அவரை சிறைப்பிடித்தது என்பது அவருக்குக் கொடுத்த சாட்டையடியல்ல! தமிழர்களுக்குக் கொடுத்த சாட்டையடி!!! எமது போக்கில் மாற்றம் வேண்டும் என்று அன்றில் இருந்து இன்று வரை எழுதிக்கொண்டே வருகின்றேன்.

எமக்கு சாணக்கியம் போதாது, எப்போதும் முரட்டுத்தனமும், முன்கோபமும். எம்மையே நாம் கோமாளியாக்கி மகிழ்ந்து கொள்கின்றோம். எப்போது நாம் சாணக்கியத்தைப் பயன்படுத்தப் போகின்றோம்??? ஒவ்வொரு தமிழனும் சுயமாகச் சிந்திக்க வேண்டும்.

புரையோடிய வார்த்தைகளைப் பேலிப் புகளாரஞ்செய்யாதீர்கள். கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சாம்பலாக்கிவிட்டு “சிங்களவன் தாறானில்லை, சிங்களவன் தாறானில்லை” – என்று கூப்பாடு போடாதீர்கள். பெரும் அதிஸ்டமாக ஜனாதிபதி தேர்தல் வந்தது அதை அப்படியே கோட்டைவிட்டனர். இப்போது பாராளுமன்றத் தேர்தல் வரப்போகின்றது அதையும் தவிடு பொடியாக்குவார்கள் என்பாதில் எந்த சந்தேகமும் இல்லை.

அது முடிந்ததும் மகிந்தவுடைய அடுத்த திட்டமாக சர்வதேச புலிகள் ஆதரவுச் செயற்பாடுகளை முறியடிப்பதே!!! அப்போது, “நாடுகடந்த அரசு” காத்தில பறந்து விடும் அதை நம்பிய மக்கள் அதன் தலைவர்களை தேடுவார்கள். இது தீர்க்கதரிசனமாக நடைபெறும். அப்போது என்ன செய்வதென்று தெரியாதவர்கள் மீண்டும் மீண்டும் முறையற்ற வண்செயல்களை மேற்கொள்ள தூண்டப்படுவார்கள். புலத்து ஊடகங்கள் எல்லாம் வழிமாறிப்போகும் இதற்கு மாற்று வழியை அனர்த்தத்திற்கேற்ப எடுக்காவிட்டால் இது நடந்தே தீரும். அருகன் தொடரும்.    

K.P - Ltte

 Pottu Amman

February 08

அருகனின் நாவல்களில் சில!!!!!!!!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரிலேயே இலங்கை அரசியல் நடக்கிறது…

LTTE - DEAD_PIRABA புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரிலேயே இலங்கை அரசியல் நடக்கிறது…
கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்குக்கிடைக்கவிருந்த தேர்தல் சக்கியை முறியடித்த கூட்டமைப்பினர் இந்தமுறையாவது சரியான சாணக்கியத்துடன் செயற்படுவார்களா என்று பார்க்கலாம்… என்று விட்டுவிட முடியாது. இம்முறை எடுக்கும் முடிவு மிகச்சரியானதாகவும் துல்லியமானதாகவும் எடுக்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும்.
ஊண்மையான நிலை எதுவென்றால் தமிழர்கள் யாருக்கும் தமிழீழம் என்ற ஒரு தேசம் கிடைப்பதிலோ அல்லது தமிழர்கள் நிலையான நிம்மதியான வாழ்வை வழங்க எத்தணிப்பதையோ முற்றாக விரும்பவில்லை என்றே தெரிகின்றது.


ஆரசியல் சாணக்கியம் தெரிந்த எத்தனையோ பேர் இன்னும் உயிருடனும் செயற்பாட்டுடனும் இருக்கத்தான் செய்கின்றனர். அரசியலுக்கு நரைவிழுந்தால் மட்டும் போதாது என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புpரபாகரன் போராட்டத்தில் ஈடுபடும் போது அவருக்கு எத்தனை வயது என்பதனை சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்… மட்டுமல்லாது, அவருடைய அரசியல் தொடர்போ அல்லது, இராணுவத்தொடர்போ மிக நெருக்கமாகவும் இருந்ததில்லை என்பதனையும் புரிநஇது கொள்ள வேண்டும்.
எனவே இன்று நடக்கவிருக்கும் தேர்தலை தமிழ் (புலத்திலுஞ்சரி, அகத்திலுஞ்சரி) மக்கள் எவ்வாறு கையாளவேண்டும்???? இதற்கு 2008ல் வெளியிட்ட “மலரும் மா தமிழீழம்” என்ற நாவல் தக்க பதிலைத்தருகின்றது. அதன் ஒரு பகுதி கீழே…

 
 


தமிழீழப் போராட்டம் யார் தலைமையிலாயினும் எவ்வாறாயினும் நடக்கட்டும். தமிழர்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற அரசியல் வாதிகள் உதவட்டும். இதில் தமிழ் அரசியல் வாதிகள் தலையிட்டால் நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகக்குறைந்த சாதாரண கோரிக்கைகள். அதனை நிறைவேற்ற முன்வரும் அரசில் அங்கம்வகிக்கும் அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உண்மையில் உதவ முன்வந்தால், இங்குகாட்டப்பட்டுள்ள அஞ்சல் தொடர்புமூலம் மக்களுக்கு உதவமுடியும் என்பதை, இத்தாலியில் வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்புள்ளவன் என்ற வகையில் உறுதிப்படுத்துகிறேன்.

போலித்தமிழ் அமைப்புக்கள், போலித்தமிழ் அமைச்சர்கள் இதற்கு ஒத்துவரமாட்டார்கள். அவர்களுடைய பதவிகள் அடுத்த தெரிவில் சின்னாபின்னமாக்கப்பட்டு, அவ்வமைப்பும் சீர்குலைக்கப்பட வேண்டும். அதற்கு பலம் பொருந்திய விடுதலைப்புலிகள் தலைமை பீடம் ஒத்துளைக்க (முன்னைய பதிப்பு)  வேண்டும்.  துணைக் காரியாலயங்கள் இவ்வாறான செயற்பாட்டினைச் சிந்திக்கக் கூட முடியாது என்பதனை  நன்கு அறிவேன். எனவே, தலைமைப்பீடம் இதற்கு உந்துதல் கொடுத்து வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் தேவைகளுக்கும் சிரமங்களுக்கும் தீர்வுகாணக்கருத்தெடுக்கவும், இதன் மூலம் ஈழத்தில்  உள்ள மற்றைய உறவுகளுக்கு மேலும் உதவமுடியும் என்பதனையும், தமிழர்களின் தாயகத்தையும் திடப்படுத்தமுடியும் என்பதனையும் உறுதிப்படுத்துகிறேன்.
சிங்கள அரசு பல வரலாற்றூடாக, பெயர்களையெல்லாம் சாதூர்யமாக மாற்றுகிறது. அதாவது, செல் இறுதியில் அசைவினை மாற்றித் தமிழ்ப் பெயரையும், வேற்று மொழிப் பெயரையுங்கூட சிங்கள மொழிப்பெயராக மாற்றிவிடுகின்றனர். வவுனிய, பண்டாராவன்னிய, யாழ்ப்பாணய, என்று… பிரபாகரனின் செயற்பாடு சிறப்பாக இருந்தால், காலப்போக்கில் “பிரபாகரணய” என்று வி.பு.ன் தலைவரைக்கூட சிங்களவராக வரலாற்றில் மாற்றிவிடுவார்களோ? ஏன்று கூட எண்ணத் தோன்றுகிறது.  
இலங்கை அரசு, அரசியல் காய்களை மிகத்திறனாக நகர்த்திவருகிறது, மாகானங்களுக்கு ஜனநாயக தேர்தல் மூலம் முதல் அமைச்சர்களை நிர்ணகித்து, தனது அரசியல் திறனை உலகிற்குக்காட்டி, வி.பு. கட்டுப்பாட்டில் உள்ள பகுதியினை தீவிரவாத நடவடிக்கை என உறுதிப்படுத்த முனைகிறது.

எனவே விரைவில் அரசு, அரச சார்பில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரிகள், வி.பு., உலகச் சமாதான அக்கறையாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் மனித நேய அமைப்புக்கள் போன்றோர் இதில் அக்கறை காட்டவேண்டும் என்று விரும்புகிறேன். விரைவில் இச்சின்னஞ்சிறு தீவு, உலகின் அறிவும் திறமையும் போட்டிபோடும் இடங்களிலெல்லாம் இடம்பெறவேண்டும்.

இதற்கு “மலருமா?”, என்ற வினாவா, அல்லது “மலரும் மா!” என்ற மாபெரும் தமிழீழமாய் மிழிருமா,  அல்லது இருக்கும் வழங்களும் அழிக்கப்பட்டு மேலும் உயிர்கள் இழக்கப்பட்டு சுடுகாடாகுமா?...

காலம் என்றும் எங்கள் கையில் மட்டுமே!...
என்று இந்த நாவல் முடிவடைகின்றமை இன்றும் பொருந்தக்கூடிய தீர்க்க தரிசன நூலாகக்காணப்படுகின்றது. இத்தோடு அந்த நூலின் ஆசிரியரின் பக்கத்தகவலையும் தருகின்றேன்…

என் பக்கங்கள்

பொங்கு மலை எங்கிருந்து பொருமி வந்தாலும்
அங்கெல்லா மெங்கள் தமிழ் மணங் கமழுமையா!

கடந்த கால நடைமுறைகள் எமக்குக் கற்றுத்தந்த பாடம்தான் என்ன? இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வுகள், வெறுங்கனவுகளோ?!... என்று, எண்ணத்தோன்றுகின்றது.

இலங்கையில் தமிழர்களின் உயிர்ச் சேதத்தையோ, வாழ்க்கைச் சிதைவினையோ யாரும் எண்ணிப்பார்த்ததாக இல்லை.

அவரவர் தமது தேவைகளையும், இலாபத்தையும் காத்துக்கொள்வதோடு, தமக்கு முக்காடும் போட்டுக்கொள்கின்றனர்.

இலங்கை அன்னையின் இரத்தக்கறையும், வியர்வைத்துளியும் துடைக்கப்பட வேண்டுமென்றால், இரு பிரிவினரும் ஒரேயொரு கட்டமைப்புக்குள் வந்தாலொழிய பிளவுகள் தீர்க்கப்படப் போவதில்லை.

2003ல் வெளியிடப்பட்ட “அநுபூதி” என்னும் நூலில் குறிப்பிடும் “சாகடிக்கப்படும் சரித்திரம்” என்ற பகுதியில் தமிழரின் வரலாறு பற்றிச் சற்றுச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது.

மழுங்கடிக்கப்பட்ட சரித்திரத்தை மீட்டெடுக்கவேண்டிய கடப்பாடு யாருக்குண்டு? அநுப+தித்தனமான எழுத்தாளரை எப்படி இனங்கண்டு கொள்வது? இவையெல்லாம் தொடுக்கப்பட வேண்டிய வினாக்களல்ல செயற்பட வேண்டிய அனர்த்தங்கள்.

2006ல் நின்று பார்க்கும் பொழுது, இலங்கை அரசியல் வாதிகள் அரசியல் அறிவில் அநுபவம் மிக்கவர்களாகத் திகழ்கின்றனர் என்பது ஐயமில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளோ தாம்தான் அரசியலை நன்றாய்க் கற்றவர்கள் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலத்தை அதிகரித்ததும், உலகிற்கு வெளிக்காட்டியதும் சிங்கள இனவாதிகள் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கவ்வளவு உண்மை, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அரசியலைக் கற்றுக்கொடுத்த மேதாவிகளும் அவர்களென்பது.

ஆனால், தமிழீழவிடுதலைப்புலிகள் இராணுவ நடவடிக்கையில் அதிகம் பாராட்டக் கூடியவர்களாகவுள்ளார்கள். எனினும், அரசியலில், சிங்கள அரசியல் வாதிகள் தற்போது மாமேதைகளாகிவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் அரசியல், முஸ்லீம் அரசியல் மட்டுமல்லாது சிங்கள அரசியலிலும் பாடத்தைக் கற்பிக்கிறார்களே!!!

தமிழர்கள் பக்கம் ஒருவிடயத்தைப் பதித்தாகவேண்டும். அதாவது, தமிழீழ ஆதரவாளர்கள்-விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், இவற்றிற்கிடையில் வேறுபாடு உண்டா இல்லையா???

இந்த நூல் பலருடைய சிரசில் பாரத்தை ஏற்றப்போகிறது என்பது ஒருபுறம் இருக்க, எதிர்கால வரலாற்றுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் ஒரு சரித்திரக் கையேடாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழர்கள், ஈழம், வரலாறு, எதிர்காலம்... என்று பார்க்கும் போது, நிர்மாணத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் தமிழீழச் சமுகத்திற்கு, “எதிர்காலம்” எட்டிப்பார்க்கக்கூடிய ஆழத்தில் தென்படக்கூடாது என்பதிலும், நையாண்டித்தனமுடையதாக அமைந்து விடக்கூடாது என்பதிலும் கருத்தாய் இருக்க வேண்டும்.

இதில் தமிழ் நிலை தொடர்பாக பல்வேறு சிந்திக்கும் சிதறல்கள் திணிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், தமிழோ அல்லது அத்தமிழர்களோ, சரித்திரத்தில் புதியவர்களல்ல என்பதனை விளக்குவதற்கே!

விடுதலைப் புலிகளுடைய ஆரம்பகாலத்துப் போக்கும், அத்தலைமைத்துவத்தின் எண்ணத்திற்கும்,  தற்காலத்தில் அவர்கள் பெயரில் உலகநாடுகளில் ஈடுபடுபவர்களுடைய போக்கும் மீள்பரிசீலனை ஒன்றை  அவ்வமைப்பின் தலைமைத்துவத்தால் எடுக்கப்பட வேண்டும் என்பதனை இவ்வேடு  குறிப்பிட்டுக் காட்டுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து அவர்களின் பலத்தைக் குறைத்தும், அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியவர்களுக்கும் இதன்மூலம் கோரிக்கை விடப்படுகிறது. அவர்கள் எத்தகைய பங்களிப்பினை தமிழர்களின் நிரந்தர நிம்மதிக்காகச் செலுத்தப்போகிறார்கள் என்றும், தற்போதை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதுதொடர்பான தகவல் வினாவப்படுகிறது.

உலக நாடுகளில் தமிழர்களுக்கு ஒரு தரத்தை நிர்மாணித்துள்ள போதிலும் அவற்றை மறைத்து வட்டம் ஒன்றைப் போட்டுவிட்டு அதற்குள் குத்துக்கரணம் போடுகின்றனர் சிலர். இவ்வாறான பல்வேறுபட்ட விடிவு நோக்கிய கருத்துக்கள் உட்திணிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களால், தற்போது கோரப்படும் தமிழீழப்பகுதிக்குமட்டுமல்ல இலங்கை முழுவதிற்குமே உரியவர்கள் என்பதனையும் இது எடுத்துக்காட்டத் தவறவில்லை. விஜயனின் காலத்தின்பின்னரே ஆரியரின் ஆதிக்கம் ஏற்பட்டது என்பதனையும், தமிழ் எத்தகைய சிறப்புடையது என்பதனையும் தமிழர்களின் - திராவிடனின் ஆரம்பகால நிலைக்கும் இந்நூல் கொண்டு சென்று விடுகிறது.

இவ்வாறான வரலாற்றுத்தகவல் அடங்கிய நூல் ஒன்றைப்புனைவதன் சிரமம் எவ்வளவு என்பதனை கற்றோரும் விமர்சகரும் அறிவர். எனினும் வாசகர்களுக்கும் எதிர்காலச்சந்ததிக்கும் இது ஒரு சிறந்த தகவலாக அமையவேண்டும் என்று விரும்புகிறேன்.

தமிழர்களுக்கு நிலையான வாழ்வு நோக்கிய பாதையின் கடினம், தமிழர்களின் எதிர்காலச் சந்ததியினரைப் பாதிப்புக்குள்ளாக்கி விடக்கூடாது என்பதனையும் அணுகுண்டின் பாதிப்போடு ஒப்பிட்டு எச்சரிக்கையும் செய்கிறது. இதன்மூலம் விரைவில் நிம்மதிப்பெருமூச்சினை நோக்கி ஓடவேண்டுவே இவ்வேடு எச்சரிக்கை செய்கிறது.

இவ்வேடு புனையப்படுவதற்கு 2005காலப்பகுதி தொட்டு 2008வரையிலான காலப்பகுதி தேவைப்பட்டது. அரசில் அங்கம் வகிப்போரோஇ பலமாக இருக்கும் அமைப்புகளோஇ தனிநபர்களோஇ நிதி ஆதரவிலும் சரிஇ அல்லது இலக்கிய ரீதியில் வெளியீட்டு ஆதரவிலுஞ்சரி முன்னுரிமை வழங்காமையும் இதன் வெளியீட்டுப்பின்வாங்கலுக்கு முக்கிய காரணம் எனலாம். எனினும் பிரதி செய்வதற்கும் வெளியிடுவதற்கும் போதிய நிதி இல்லாமையால் இணையத்தின் மூலமே பெரும்பாலும் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டது.

தற்காலத்தில் இதற்கு ஆதரவு, அறிவுடையோரிடையே முன்நிலை வகிக்கும் என்பது திண்ணமே! இலக்கியம், இலக்கணம் என்றும், சங்ககாலம் சங்கம் மருவிய காலம் என்றும் மக்களைக் குழப்பாமலும், புணரியல் வாக்கியங்களை அமைக்காமலும் சாதாரண மக்கள் தொட்டு கற்றோர்வரை வாசிக்கக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இது பயனுள்ள கையேடாக அமையும் என்று நம்புகிறேன்.     

இதற்கு வித்திட்ட அடிப்படைத் தொன்மையான நூல்களுக்கும், ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் நன்றிகலந்த வணக்கம்.

அடுத்த வெளியீட்டில் சந்திக்கும் சந்தர்ப்பத்தில்...
மேலும் இதுதொடர்பான ஆக்கங்கள் தொடரும்!!!

February 05

முக்கிய செய்திகள் 5/2/2010

முக்கிய செய்திகள்

தப்பிச்சென்ற இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பம்:இராணுவப் பேச்சாளர்
2/5/2010
Full story
/ விரிவாக

பொதுத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது? விரைவில் தீர்மானம் : சதாசிவம்
2/5/2010 
Full story
/ விரிவாக

மன்னார் மீனவர்கள் தொழிலில் ஈடுபட எவ்வித கட்டுப்பாடுமில்லை : அமைச்சர் றிசாத்
2/5/2010 
Full story
/ விரிவாக

வடக்கு, கிழக்கு அரசியல் தீர்வு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம்
2/5/2010 
Full story
/ விரிவாக

கூட்டமைப்பு,ஜே.வி.பி. ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சிப்போம்:ஐ.தே.க
2/5/2010
Full story
/ விரிவாக

நாளை அல்லது 10 ஆம் திகதி சபை கலைக்கப்பட்டு ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல்?
2/5/2010
Full story
/ விரிவாக

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,753 கைதிகள் விடுதலை
2/4/2010

Full story / விரிவாக

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் : அறிக்கை காலதாமதம் குறித்துக் கேள்வி
2/4/2010 12:46:58 PM
Full story
/ விரிவாக

மன்னார் பொலிஸ் நிலையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு(பட இணைப்பு)
2/4/2010 12:35:45 PM
Full story
/ விரிவாக

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
2/4/2010 12:14:17 PM
Full story
/ விரிவாக

Read News in English

மேலும் செய்திகள்

February 04

தமிழர்களின் “சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலீச குடியரசு”

ஈழம் மலரும் போது தமிழ் வாடிவிட்டால்? என்ன செய்வது….!!!

Arugan 2008ல் அருகனின் “மலருமா தமிழீழம்” நாவலின் எழுதப்பட்ட குறைபாடுகள் அதிபர் மகிந்தவால் படிப்படியாக நிவர்த்திசெய்யப்படுகின்றன….

“அடிதடி 15”
முப்பது வருடப் போராட்டம்

தமிழர்களின் “சுதந்திர தமிழீழ ஜனநாயக சோசலீச குடியரசு” நோக்கிய பேராட்டத்தின் தன்மையினைப்பார்க்கும் போது, பல்வேறு கேள்விகள் உதயமாகின்றது.

போராட்டம்
ஈழ மண்ணுக்காகவா?
ஈழ மண்ணின் மைந்தர்களுக்காகவா?
ஈழ விடுதலைக்காகவா?
த.ஈ.வி.பு. அமைப்பிற்காகவா?
தமிழ் மொழிக்காகவா?

ஈழம் மலரும் போது தமிழ் வாடிவிட்டால்? என்ன செய்வது.

மேலே காட்டப்பட்ட மனித உரிமை தொடர்பான விடையத்தைப் பாருங்கள் அது படிவம் எடுக்கப்பட்டு வாசிப்பதற்கு கடினமான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. யார் சீர்செய்வார்?. உலகத்தில் தமிழ் சிறகடித்துப் பறக்கிறது. ஆனால் தமிழர்கள் அதன் சிறகிற்கு பலங்கொடுக்க முன்னரவில்லை. பேருக்கு தமிழ்ப் போராட்டம். இப்படி எடுத்துரைக்கும் என்மீது கோபப்படுவதற்குப் பதிலாக தவறுகளைச் சீர் செய்யுங்கள். சீர் செய்வோருக்கு ஆதரவு அளியுங்கள் முரட்டுப் பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

“இதற்கிடையில் மாபெரும் தமிழ் விடுதலைப் போராட்டத்தின் தலைவராக (இன்று) 2008வரையில் மதிக்கப்படுகிற திரு வே.பிரபாகரன் அவர்களைப்பற்றிய ஒரு கட்டுரைதொடர்பான, தொலைக்காட்சி விமர்சனத்தில் தகவல்கள் தவறுதலாகப் புனையப்பட்டிருந்தது. இவை வரலாற்றில் உண்மைகளையும் பொய்களாக மாற்றிவிடக்கூடியன. அவர் பல்கலைக்கழகப்பட்டதாரி என்றும் வேறு சிலவிடையங்களும் தவறுதலாகப் பரினாமித்தது. அவர் கடைசியாகக்கற்ற கல்வி 10 வரைதான். ஆனால் அவர் பட்டதாரிக்குமேலான அனுபவத்தை அனர்த்த அறிவிலிருந்து கற்றுக்கொண்டார். என்றால், அது மிகையாகாது. மேலும் வாசிக்க »

February 03

இலங்கையில் தமிழர்களின் நிலை தொடர்பான - அருகன்

இலங்கையில் தமிழர்களின் நிலை தொடர்பான - அருகன்
மலருமா தமிழீழம் என்னும் நாவலில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை இலங்கை அரசு தற்போது நிறைவேற்ற எத்தணிப்பதனை எமது ஒன்றியம் பாராட்டுகின்றது. இந்த ஆரம்பம் படிப்படியாக முன்னேறி தமிழர்களுக்கான முழு உரிமையும் கிடைக்க தற்போதைய அரசு ஆவண செய்ய வேண்டுகின்றோம்.
 
 

Video

 

Video

 

Video

 

Video

 

Video

 

Video

 

Video