Arugan's profileஅருகன்PhotosBlogListsMore Tools Help
    May 07

    எழுத்தாளர் அருகன் அவர்கள் வழங்கிய செவ்வியில்

    ARASIAL VIMARSANAM 01.MP3 கடந்த வருடத்தில் எழுத்தாளர் அருகன் அவர்கள் வழங்கிய செவ்வியில் இருந்து ஒரு பகுதியினை இங்கு வெளியிடுகின்றோம் இவர் போன்றோரின் கருத்துக்கள் சீர்தூக்கிப்பார்க்கக்கூடியன. ஒவ்வொருவரும் தமது சொந்த சிந்தனையினைத்தூண்ட வேண்டும் என்பது அவருடைய அவாவாகக்காணப்படுகின்றது. இதோ இதனை அழுத்தி அவருடைய செவ்வியின் ஒரு பகுதியினைக் கேட்கலாம்.
     
    October 07

    த.வி.பு. ன் தடையினை உடன் நீக்கவும் ஏற்பாடு

     
    (...) இவ்வாறான செயற்பாடுகள் தமிழினத்தின், மற்றும் தமிழ் மொழியின் உரிமைகள் புறக்கணிக்கப்படுகிறது என்பது புலனாகும். இதனை உலக நாட்டிற்கு எடுத்துக் காட்டி, எமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் இறைமையையும் பெற்றெடுப்பதுடன், எமது விடுதலைப் போராட்டம் உண்மையானது என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். இதன்மூலம் த.வி.பு. ன் தடையினை உடன் நீக்கவும் ஏற்பாடு செய்ய முடியும். (...)
    வெளிவரவிருக்கும் மலரும் மா தமிழீழம் என்னும் அருகனின் நாவலிலிருந்து...
    October 01

    தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும் அப்போதுதான் அது சீர்திருத்தப்படும் (Archchanai Ithalkal)

    தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும் அப்போதுதான் அது சீர்திருத்தப்படும் (Archchanai Ithalkal)

    “இயற்கையின் விந்தையினை வியப்பதற்குக்கூட

    “இயற்கையின் விந்தையினை வியப்பதற்குக்கூட
    எனக்கு வயதுபத்தாது,
    பலதடவை நான் பிறந்து வந்தாலும்
    அதற்கு அனுபவம் போதாது” (Ithuthana Millenniya Matram?!)

    “பூக்கள் மலர்ந்து புதுமணந்தந்து பூமியில்

    “பூக்கள் மலர்ந்து புதுமணந்தந்து பூமியில் விழுகிறது
    இயற்கை தன் செயற்கையால்  படிப்பினையைத் தருகிறது
    நான் இந்த பூமிக்கு எதனைத் தந்தேன்?” (Archchanai Ithalkal)

    இன்றைய உனது நிலை, நேற்றைய உனது சிந்தனைகளே !

    இன்றைய உனது நிலை, நேற்றைய உனது சிந்தனைகளே ! (Anupoothi)

    என் எண்ணங்களுக்குப் பசியெடுக்கிறது –

    “என் எண்ணங்களுக்குப் பசியெடுக்கிறது – அவை
    என் எழுத்துக்களையே உணவாய்க்கேட்கிறது” அருகன்- (Archchanai Ithalkal)
    September 30

    பல்லவி

    1
    இயேசு யெந்தன் தோழன்

    பல்லவி

    எந்தன் நண்பன் அவர்தான் -நல்ல நண்பன் அவர்தான்
    என்னை யென்றுங் கைவிடமாட்டார்

    அனுபல்லவி
    சொந்தம் மாறலாம் - நல்ல பந்தம் மாறலாம் மென்
    நேசரென்றும் மாறவேமாட்டார்
    நேசரென்றும் மாறவேமாட்டார்!!

    சரணம் (1)

    நல்லதும் தீயதும் மெல்லாம்; மறிவார் (2);-
    என்னை நன்மையிலே நடத்திடுவார்
    பொல்லாப்பு யென்னை யென்றும் மணுகாமல் -தன்
    கைகளினால் மூடிக்கொள்ளுவார்!!
    கைகளினால் மூடிக்கொள்ளுவார்!!  (எந்தன்..)

    சரணம் (2)

    நிழலாக நினைவாக கூடவருவார் (2)-
    பாவச் சேற்றில் லென்னை விடமாட்டார்
    வானம் பூமி யெல்லா முன் கையில்தருவார் - எனை
    வான்வீட்டி லிருக்கச் செய்வார்!!
    வான்வீட்டி லிருக்கச் செய்வார்!! (எந்தன்.. )

    சரணம் (3)

    அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேன் (2)
    தேவ தூதரிலும் மேலாக்கினார்
    இன்னாளி லென்னுயிரே பிரிந்தாலும் -என்
    நேசரென்னைப் பிரியவேமாட்டார்!!
    நேசரென்னைப் பிரியவேமாட்டார்!! (எந்தன்.. )

    அவருக்கும் இடங்கொடு

    பல்லவி

    இயேசு வல்லவர் ஆவி யுள்ளவர்
    பாரில் லுள்ளோரிலே அவரே நல்லவர் - (இயேசு..)

    அனு பல்லவி

    துன்பம் முன்னை ஓருபோதும் மணுகாது - அவரை
    ஸ்தோத்தரித்தால் இன்பம் மென்றும் விலகாது.. இயேசு..

    சரணம்

    உந்தன் நெஞ்செல்லாம்சுமையாக ச்சுமக்கின்றதா-அந்த
    நெஞ்சத்தில் அவருக்கும் இடங் கொடுப்பாய்
    பாரமெல்லாம் பஞ்சாக மாற்றிடுவார் – எந்த
    சோகமெல்லாம் துரும்பாக்கித் தூக்கியெறிவார்! (இயேசு.. ..)

    சரணம்

    நாங்கள் மந்தைக்கூட்டம் போலவே இருக்கின்றோம் - அவரே
    மேய்ப்பனாகி எம்மை என்றும் நடத்திடுவார்
    பச்சைப் புல்வெளியில் என்றென்றும் மேய்த்திடுவார் àஅன்பு
    பாசமுடன் எங்களுக்கு மோட்சந்தருவார்! (இயேசு.. ..

    இசையும் அவரே

    பல்லவி

    நாதா நீ என் நெஞ்சில்
    வா.. வா..-இயேசு

    அனு பல்லவி

    தினம் பாமாலை  நான்
    சு10ட்ட பா கொண்டு தா.. தா.. சாதா

    சரணம் (1)

    நீயன்றி ஒரு தொய்வம்
    என் வாழ்வில் ஏது..
    நீயின்றி என் வாழ்வில்
    ஒழி என்ன கூறு

    நான் பாடும் சரணங்கள் நீ தந்ததாகும்
    நீ கேட்டு மகிழத்தான் என் பாடல் ஊறும்

    இன்னொரு பிறவி என்றால் அன்றும்  உன்னைப் பாட
    வரம் இன்றே தருவாய் அருளைப் பொழிவாய்
    அடியேன் ..சரணம் சரணம் - நாதா

    சரணம் (2)

    நான் எந்தன் நெஞ்சோடு
    உனை ஏந்தும் நாளில்
    நீ யென்னைக் கண்ணோடு
    தினம் காப்பாய் தோழில்

    நினைக்காத மனம் என்றும் கனியாத காயே!
    மலராத மனம் என்றும் முணம் இல்லப் பூவே!

    மானிட பிறவி தந்தாய் மௌனத்தில் உன்னைக் கண்டேன்
    மறவேன் மறவேன் நானுன்னை மறவேன்
    தினமும் தருவேன் சரி கம பதநி - நாதா

    அடங்காத்தமிழர் நாம்

    பல்லவி

    அடங்காத தமிழன் இன்னும் அடிபணிந்து வாழ்வதா
    அகதி வாழ்வை எண்ணி யெண்ணி
    அடிமையாகிச் சாவதா!

    அனுபல்லவி

    துடிதுடிக்கும் பிஞ்சு நெஞ்சம் தூங்கவில்லை கொஞ்சநேரம்
    ஆறிப்போகும் காயம் மென்றும்
    ஆறிடுமா நெஞ்சின் பள்ளம்!.. .. ஆ..ஆ..ஆ..ஆஆ

    சரணம் 1

    ஈழத்தாயின் கருவறையில் கோளைகளே பிறப்பதில்லை
    வீரத்தாயின் பேரை யென்றும்
    வேடன் வந்தும் மழிப்பதில்லை!
    வேடம் போட்டு வெள்ளையினம்
    வேலிபோட்டுச் சென்றது கோடுபோட்டால் நின்றிடுமா
    காளைநெஞ்சம் அஞ்சிடுமா!
    அச்சம் மென்ற சொல்லைக் -- கூட
    துச்சமாக வெண்ணினேம்
    மிச்சம் முள்ள தொல்லையெ -- ல்லாம்
    சுட்டுப்போட முந்தினோம்!!
    ||அடங்கிப்போவேமோ||!! (அடங்காத.. ..)

    சரணம் 2

    சட்டதிட்டம் போட்டுவிட்டு சதிகள் நடம் மாடுதுபார்
    பிச்சை கேட்கும் கூட்டமங்கே
    கத்தித் தடம் போடுதுபார்!
    குள்ளநரிக் கூட்டம் வந்து
    எள்ளிநகை யாடுதுபார் கொள்ளி வைத்துத் தள்ளிப்போட
    கொட்டம் மின்றி யோடுது பார்!
    பித்தரென்றும் பேயரெ -- ன்றும்
    விட்டுவிடு ஓடுவார்
    பித்துக்கொண்ட பக்தரைப் -- போல்
    சுத்திச் சுத்தியாடுவார்!!
    ||அடங்கி ஓடுவார்||!! (அடங்காத.. ..)
    மக்ஸி,பலெர்மோ

    புலம் பெயர்ந்த பூக்கள்

    குயில் கூவும் ஓசைகள் கேட்கும் போது ஆசைகள் - கூவும்
    போது கூட்டம் கூடிக் கேட்போமா
    தமிழீழச் செல்வங்கள் பேசும் போது ஆசைகள் -கிள்ளை
    மொழியில் பேசச்சொல்லிக் கேட்போமா

    பூந் தோட்டம் நன்றாய்ப் பூக்காமல்
    கம கம நறுமணம் வீசிடுமா- பிள்ளைச்
    செல்வங்கள் நன்றாய்ப் பேசாமல்
    சரி கம பத நிச பாடிடுமா (குயில். . . . !)

    1
    அம்மாவைப் பார்த்து பிள்ளைகள் இங்கே
    அயஅஅய என்று அழைக்குது - அட
    அயஅஅல என்றும் அழைக்குது!
    அப்பாவைப் பார்த்து பிள்ளைகள் இங்கே
    pயிpய என்று அழைக்குது - அட
    pயிpல என்றும் அழைக்குது!
    தொலைஞ்சு தமிழ் தவிக்குது -அது
    தொலைவ நினைச்சு துடிக்குது! (2)
    சொல்லிக் கொடுத்தா பிள்ளை மனசு
    நெஞ்சில் பதிக்கும் வெள்ளை மனசு - (2)
    தெரிஞ்சிருந்தும் தாய் மொழிய பிரிந்து விடாதே! - நல்ல
    கதைகளோடு கவிதை சொல்ல மறந்துவிடாதே!
    (குயில். . . . )
    2
    ஐரோப்பா வுந்தன் தாய்நாடு இல்லை
    ஈழம் இங்கே இருக்குது - அது
    உன்னை நம்பிச் சிவக்குது
    லட்சத்தில் மூன்று தமிழ் வார்த்தை உண்டு
    லட்சியமாய் எடுத்திடு - அத
    கட்சிதமாய்ப் படித்திடு
    உறங்கிக் கடக்கும் உணர்விது - அந்த
    உறக்கங் கலைக்க உணவிது (2)
    நெஞ்சம் முழக்கு எண்ணப் பறவை
    வட்டம டிக்குஞ் சின்னப் பறவை (2)
    நச்சுக் களைகளை நீ முளையிலேயே கழைந்து விடு -இல்லை
    பலன் கொடுக்கும் பயிர் களையே மறந்து விடு
    (குயில் . . . . )

    1999ல் பாடல்களுக்கென புனையப்பட்டும் பயன்படுத்தாததை புடமிட்டுள்ளேன் - அருகன்.

    ஆறாத வடுக்கள்

    நெஞ்சம் பட்ட காயத்துக்குக்
    கட்டுப் போதுமா - என்
    வேதனையைத் தீர்க்க
    வொரு பாட்டுப் பாடம்மா

    பொல்லாத உலகமம்மா புண்பட்ட இதயமம்மா
    தாய்நாடு நோகுதம்மா தீயால வேகுதம்மா
    (நெஞ்சம். . . )

    பிஞ்சு உள்ளங்கள் சாகுதம்மா
    பிரிஞ்சு நெஞ்சங்கள் வாடுதம்மா
    அஞ்சி அஞ்சியே ஓடுதம்மா
    உடைஞ்ச ஓடம்போல் ஆடுதம்மா

    பஞ்சங்கள் கூடி
    பட்டினியால் வாடி
    நிம்மதியைத் தேடி
    பார் தன்னிலே ஓடி

    ஏதேதோ எண்ணங்களே எண்ணுதம்மா
    ஏராளம் மின்னல்களாய் மின்னுதம்மா
    (நெஞ்சம். . . . )

    தள்ளி உள்ளது செந்தமம்மா
    தன்னந்தனிமையாக ஏங்குதம்மா
    கண்ணில் வெள்ளமாய்ப் பாயுதம்மா
    கார்மேகம் து}விச்சென்ற து}றலம்மா

    கண்ணிலே விம்பம்
    காணவேண்டும் இன்பம்
    தீரவேண்டுந் துன்பம்
    கூட வேண்டும் சொந்தம்

    நட்சத்திலங்கள் மாலை ஆகுமம்மா
    வட்ட நிலாவின் வெண்மை தோன்றுமம்மா
    (நெஞ்சம் . . . )

    1999ல் பாடல்களுக்கென புனையப்பட்டும் பயன்படுத்தாததை புடமிட்டுள்ளேன் - அருகன்.

    வாழ்க்கையுந்தன் கரத்தில்

    ஓ.... ....
    ஓடக்காறா ஓடக்காறா - உன்
    ஓடம் இப்போ ஆடுதுபார்
    கொஞ்ச நாளாய் (2)

    நீPரும் ஆடவில்லை
    நிழலும் ஆடவில்லை
    ஓடம் ஆடுது பார் ஓடக்காறா
    ஏலேலோ .. ஓ... ஐலசா
                  (ஓ..ஓடக்காறா ..!)

    (1)
    பாராலும் ஆடவில்லை
    ஊராலும் ஆடவில்லை
    யாரலும் ஆடவில்லை ஓடக்காறா!

    அலையாலும் ஆடவில்லை
    புயலாலும் ஆடவில்லை
    உன்னாலே ஆடுதுபார் ஓடக்காறா!!

    துடுப்ப தொலைச்சு விட்டா
    துணைக்கு யாரும் இல்லை
    தவிக்கும் உன்னக் கொஞ்சம்
    தடுக்க ஆளும் இல்லை

    எல்ல தெரிஞ்சிருந்தா.... ...
    தொல்லை ஏதுமில்லை!!1

                   (ஓ.. ஓடக்காறா..)

    (2)

    நெஞ்சோடு ஈரமுண்டு
    தோளோடு வீரமுண்டு
    கண்ணோடு உறக்கம் என்ன ஓடக்காறா!

    கரையோடு சேரும் மட்டும்
    கலக்கம் உன்ன முட்டும்
    தயக்கம் தேவையில்ல ஓடக்காறா!

    கடலின் மீதிலும்
    அலையும் ஆடுது
    தினமும் ஓடுது
    கரையை நாடுது

    இதுவும் வாழ்க்கையின்... ... ..
    விளக்கம் போலது !!!

                     (ஓ... ...ஓடக்காறா)

    அவள் என்ஜீவன்

    உயிரே.........! உயிரின்உயிரே..........!
    உயிராய்............! உனையே நினைத்தேன்........!

    வெண்ணிலவா சு10ரியனா . . . . நீ சொல்....?
    மென் மலரா முள்நுனியா . . . நீ சொல்......?
    ஏன் என்னைக்கொல்ல நினைத்தாய்?
    வாள்வீச்சில் என்னைச்சரித்தாய்!!
    உயிரே.........! உயிரின்உயிரே..........!
    உயிராய்............! உனையே நினைத்தேன்........!

    (1)

    அமுதம் என்றிருந்தேன் நஞ்சாய் . . . . .நீ திரிந்தாய்
    பறுவம் என்றிருந்தேன் மறைவாய்  . . . நீ யிருந்தாய்
    புல் வெளியா கல் நிலமா
    கலங்குதடி நெஞ்சம்
    செல் மொழியால் வில் தொடுத்தாய்
    சரிந்ததடி யங்கம்
    நான் இன்று நானாய் இல்லை (யே)
    நாள் ஒன்றும் நாளாய் இல்லை (யே)
    உடல் உண்டு உயிராய் இல்லை (யே)
    நீ வந்து புகுந்து கொண்டால் புதிதாய் நான் பிறப்பேன்.!
    உயிரே.........! உயிரின்உயிரே..........!
    உயிராய்............! உனையே நினைத்தேன்........!

    (2)

    இன்பம் என்றிருந்தேன் துன்பம்  . . . . . நீ தந்தாய்....!
    பகலா யுனைநினைத்தேன் இருளாய் . . . .நீ வந்தாய்
    வல்லினமா ..? மெல்லினமா..? நீயிருந்தா லென்ன..?
    வாய் மொழியால் நல் மொழியாய்
    நீ விடுத்தாலென்ன..? வான் மீது ஒழியே யில்லை....!
    வாழ்வேடு தெளிவேயில்லை.....!
    வாழ்த்துக்கள் வரவேயில்லை...!
    என்னுடன் நீயினைந்து கொண்டால்
    எரிந்திடுமே ஸ்பரிசம்...!
    உயிரே.........! உயிரின்உயிரே..........!
    உயிராய்............!  உனையே நினைத்தேன்........!

    அவள்என்காதலி

    இனியவளே இனியவளே
    இன்மொழி வார்த்தைகள் செல்லாய் ...!
    என்னுடல் தீயில் வேகிடுதே
    காற்றே து}துபோய் செல்லாய்..!

    மூன்றாம் பிறையின் நெத்தியிலே
    முத்தாம் நீர்த்துளி மத்தியிலே
    சித்தம் நித்தம் சிக்கிடுதே.. .. .. கேளாய்..!
    மேகம் து}வும் து}றலிலே
    மோகம் கொண்டு நீ நனைய
    தாகம் கொண்ட என்னுயிரே .. .. .. கேளாய்..!
                                  (இனியவளே)

    (1)
    கண்கள் இரண்டும் மூடுமிங்கே
    நெஞ்சம் ஒண்றைத் தேடுமெங்கோ  .. .. ஓடி
    து}ங்கும் போதும் ஏங்குதிங்கே
    து}து போகத் து}ண்டுதிங்கே .. .. .. போடி

    ஆண்டவன் கூடவே
    ஆண்களாய் தோண்றினால்
    ஆடவள் தான் கூடத்தேவையே
    அண்று போல் இன்றுமே
    இன்று போல் என்றுமே
    தேவை கொள்ள இந்தப் பாவையே..!
    உன்னைக் கண்டு கொண்ட பின்னே
    என்னைக் கொண்டு செல்லும் பெண்ணே
    நம்மைக் கண்டு வண்டு முன்னே
    காதல் கொண்டு பூவின் பின்னெ..!

                                     (இனியவளே)
    (2)
    அச்சம் என்ற ஆணியிலே
    சிக்கிக் கொண்ட சேலையிங்கே -- --  சேதம்
    மிச்சம் இங்கே நணமது
    செல்லிக் கொள்ளா ஆசை இங்கே -- --மீதம்

    பண்பாடு எண்றுமே
    பாரம் மெண் றாணால்
    பாசத்தில் வேசங்கள் தோண்றுமே
    கனவிலும் நினைவிலும்
    கண்களின் திரை யிலுங்
    காண்பதெல்லாம் உந்தன் கனலே ..!
    உந்தன் கூந்தல் கண்டு கெண்டே
    தோகை ஆட்டம் போடும் வந்தே
    உந்தன் தோள்கள் கண்டு கொண்டே
    சோலைப் பூக்கள் ஆகும் செண்டே .. !
                                     (இனியவளே)

    நீயில்லாத உறக்கத்திற்கு ஒரு தாலாட்டு!

    என்னைத் தாலாட்டி நான் து}ங்க
    ஆரிரரோ பாடுகின்றேன்
    து}ங்கா விழி இரண்டும் வாடியிருக்க
    காலைவரை ஏங்குகிறேன்

    உன் பெயரைச் சொல்லிநான் வாழ்கின்றேன்
    நீயில்லாமல் (தனியே) வாடினேன்  - தேடினேனே
    உனைத் தேடினேனே - வாடினேனே
    தினம் வாடினேனே (என்னைத். . . . . . . .
             (1)     
    நீயெங்கு சென்றாய் இதயத்தைத்திருடி
    நான் மட்டும் நின்றேன் தனிமையை வருடி (2)

    உனை தினம் நினைத்து நான் தரும் சுருதி
    காற் றுன்னில் வந்து தொடும் எனக் கருதி

    மனமே உனைத்தானே என்னாளும் நினைத்தே வாடுதடி
    மலராய் என்மேலே இன்னாள் வரை மணமாய் வீசுதடி
    கார் முகிலாகி விழி பெய்தது
    கண்ணே உன் பெயர் பதில் சொல்லுது  (என்னைத். . . . ..
             (2) 
    நீசெய்த மாயங்கள் காயங்களாகி
    காளை யென் நெஞ்சினைச் சோகங்களாக்கி (2)

    நான் செய்த காதலும் காலங்களாகி
    நாளைய மண்ணில் காவியமாகி

    போர்க் களமானதடி உன் பார்வை தீச்சுடரானதம்மா
    ஊர்வலம் போகுதடி என் மூச்சு வேருடன் வேகுதம்மா
    கானல் நீராய்க் கதை சொல்லுது
    பெண்ணே உன் முகம் தினம் வெல்லுது  ( என்னைத் . . . . .

    உனக்காக ஒருபாடல்.

    வாணவில்லே தரையில் வந்துஉடைந்து கிடக்குமா
    வீட்டுக்குள்ளே ஒளிந்திருந்தால் வெளிச்சந் தெரியுமா
    கண்ணே நீ காகிதமா காற்றில் லுன்னை வீசட்டுமா 
    கண்ணாடி ஓவியாய் உடைந்தாய் உன்னைக் கொட்டட்டுமா
    (1)
    அன்பாய் நீ வந்தாய் யவை யெல்லாம் பொய்யா
    பொய்யாய் யவை போனால் லென் னுயிர்தான் மெய்யா
    சொன்னாய் யந்த வார்த்தை யவை யெல்லாங் கதையா
    சோகம் மென் வாழ்க்கை யினி சொர்க்கம் பிழையா

    சொற்கத்தை யுன்னாலே கண்டுநான் நன்றுதான்
    சோகத்தை விட்டுத்தான் னிருந்தேன்
    சொல்லாமல் விட்டுத்தான் மின்னலாய் யின்றுநீ
    சென்றதால்த் தீயினில் லெரிந்தேன்

    எரிகின்ற உடலில்
    சிதைகின்ற மனதில்
    மழையெனப் பொழிந்தால்
    மலரும் முல்லையடி
    என் மனசும் வெள்ளையடி
    உன் மௌனந் தொல்லையடி ( வாணவில்லுந். . .. . . .  )
    (2)
    சஞ்சை நீதந்தால் அதை யுண்பேன் னமிர்தம்
    வஞ்சம் நீதந்தால் லென் நெஞ்சம் மிருகம்
    கொஞ்சம் மின்னுங் கொஞ்சம் மென்னுயிரு மிஞ்சும்
    தஞ்சம் உன் நெஞ்சம் பஞ்சில் தாடி மஞ்சம்

    தாய்க்குப் பின் தாரமே யென்றுதான் சொன்னாரே
    தாயாக உன்னைநான் நினைத்தேன்
    சேயாக என்னைநீ யெண்ணாமல் தள்ளியே
    சேறாக அள்ளியே யெறிந்தாய்

    எனக்கொரு துணைவி
    துணைக்கொரு மனைவி
    நீ யில்லை யடியே 
    நான் நுந்தன் பிள்ளையடி
    தினம் நாடும் முந்தன் மடி
    உயிர் தேடும் முந்தனடி  (வாணவில்லுந். . . . )

    கடவுள் வாழ்த்து

    கடவுள் வாழ்த்து

    பல நதியின் திசைகள் கடலைச் சேரும்
    பல பூக்களின் மென்மை மாலையில் கூடும்
    ஸ்வரங்களின் சங்கமம் வரங்களில் ஆகும்
    வந்தவை யாவும் இறைவனின் வாழ்த்துக்கள் ஆகும்.. . ஆ. .ஆ. .
    01
    இசையின் ஓசைகள் அசையும் - அது
    அசையும் போது இதயம் அசையும்
    அதை ஒதுக்காதே என்றும் வெறுக்காதே

    ஓடுகின்ற குருதியில் ஒருதுளியேனும்
    பாடுகின்ற பாடலில் ஆடிவந்து சேரும்
    வாழுகின்ற வாழ்க்கையில் வலிவந்து சேரும்
    பாடலதைக் கேட்க அது எங்கோ ஓடும்.

    யார் தந்த பாடலிது
    அவன்தந்த பாடலுக்கு
    அள்ளித் தெளித்தேன்
    ஆயிரம் ஆயிரம் பூவிது
    02
    மனிதம் மண்ணிலே பிறக்கும் - அது
    பிறக்கும் முன்னே இசை அங்கு இருக்கும்
    அது காற்றோடும் பெரும் கடலோடும் சென்று கலக்காதோ

    இசை யோடு இறைவன் இணைந்துதான் இருப்பான்
    இதயத்தின் உள்ளே உறைந்துதான் கிடப்பான்
    இசை யோடு இறைவன் இணைந்துதான் இருப்பான்
    இதயத்தின் உள்ளே உறைந்துதான் கிடப்பான்

    இனம் மொழி வேறின்றி
    காலை மாலை ஏதன்றி
    பேதமில்லையே
    இசையிலே மிதப்பேன்

    September 24

    Discussione su ஆண்மீகமும் ஆரோக்கிய வாழ்வும்

     

    Citazione

    ஆண்மீகமும் ஆரோக்கிய வாழ்வும்

    mEg+jp E}hypy; ,Ue;J...   

    உறங்காத கடமை

    விம்பமாக  வெளிவருகின்ற வார்த்தைகளை எழுத்துருக் கொடுத்து நடமாட உங்களிடம் ஒப்படைப்பது என் பணி. அதில் நர்த்தனம் ஆடுவதும், எள்ளி நகையாடுவதும், உங்கள் தொனி.

    இது சரி, இது தவறு, என்பதைச் சிந்திப்பதற்காக நேரம் விரயம் செய்வதிலும் பார்க்க, எது தேவை- எதுதேவையற்றது, என்பதைச் சிந்திக்கச் செய்தல் நலமாகத்தோன்றுகிறது.

    Anupoothiஇது தேவை என்பதை நான் நிர்ணயித்துக்கொண்டேன் எனக்குள். அது சாத்தியமாவதற்குஎவற்றையெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் செய்துகொள்ள முனைந்து விட்டேன்.

    இலக்கியப்பணியில் தமிழ் மொழியாம் தாய்மொழிக்கும், பரந்துள்ள எம் முறவுகளின் கலாசார விம்பங்களை நினைவுறுத்துவதிலும், அடியேனால் இயன்றளவு முயன்றுகொண்டிருப்பேன்.

    இது என் கடமை.!   

    மொழியால். . . . ? நான் இந்து !

    மதத்தால். . . . . ? நான் கிறீஸ்தவன்!

    என்ன ? . . . .  குழப்பமாக இருக்கிறதா?

    இந்துமதத்தை ஒரு மதமாகக் கருதுவதிலும் பார்க்க, தமிழ் மொழியின் பிறப்பிடமாகக்கருதுவதே சாலச்சிறப்பாக இருக்கிறது. குறுமுனிஅகத்தியர், முருகக்கடவுள், இவர்களின் பிறப்பிடமாகக் கருதுகிறேன்.

    அவர்கள் பாண்டித்துவ மேதைகள். தேவ பாசையாக தமிழ் மொழியைக் கருதுகிறேன்.

    புத்தபகவான் பேசிய பாழி மொழி அருகிவிட்டது. இயேசு பகவான் பேசிய கீபுறு, அராமைக், எபிரேய மொழிகள்மருகிவிட்டது, இப்படி அக்காலத்துமொழிகள்பலவும்அழிந்துவிட்டபோதிலும் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்தோன்றிய தமிழ் மொழி இன்றும் புதுப் பொலிவுடன் நிலையாய் நிற்கிறது என்றால்!

    அது தேவ பாசையே,!!

    எனது கருத்துக்களில் இந்து மதச்சாரல் அடிப்படையோ, கிறீஸ்துவின் மதத்து}றல் சொரிவதையோ, பௌத்த மதத்தருவி வழிவதையோ, கண்டு மதவாதியாகக் கருதிவிடக்கூடாது என்பதற்காகவே இதனைக்கூறி விவரிக்க வேண்டியதாயிருந்தது.

    நான் நடந்த பாதைகள் மிகவும் சிறியதே. ஆனால் ஆங்காங்கே பல சந்திகள் இருந்தன. அதனால் பலதரப்பட்டோரைச் சந்திக்க நேர்ந்தது இனிக்கடக்கப்போகும் பாதையின் து}ரம் எவ்வளவோ?

    நானறியேன்.

    வேதங்களோடு வாழ்க்கைக்கு என்ன தொடர்பு என்று எண்ணத் தோன்றியதன் விளைவே உங்களுடன் எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நட்பு.

    உறவுகள் என்பது மனிதனுடைய இஸ்டத்தின் நிமித்தமன்றி கடவுளுடைய திட்டத்தில் உதயமாகிறது, இல்லையா?

    தாய் தந்தை, கணவன் மனைவி, உடன் பிறப்புக்கள் ......... இது போன்றே, ஒரு எழுத்தாளனுக்கும் ஏராளமான வாசகர்களுக்கும்  இடையிலான மாபெரும் நட்பு. அதாவது, எனக்கும் உங்களுக்கும் உள்ள நட்பு.

    ஆக, நாங்கள் மிக நெருங்கி விட்டோம். இனி உறவுகள் என்று உங்களை அழைப்பதில் தடையில்லைதானே!

    ஒவ்வொரு மதங்களும் ஒவ்வொரு கடவுளைக் குறிப்பிடுகின்றது.

    கடவுள் என்பது கிடைப்பதற்கு, பார்ப்பதற்கு, தொட்டு உணருவதற்கு, ...... ....... இப்படிப்பட்ட அரிதான, ஆனால் அப்பாற்பட்ட ஒரு சக்தி என்று இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்.

    நடைமுறையுடன் பார்க்கின் பஞ்சப10தங்களின் செயற்பாட்டிற்கு அப்பாற்பட்டும், பஞ்சப10தங்களைக் கட்டுப்படுத்தியும் இயங்கும் ஒரு மாபெரும் சக்தி என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

    இதுபற்றி “பிரபஞ்சம்” என்னுங் கட்டுரை ஒன்றைப் பல வருடங்களுக்கு முன் அதாவது, பாடசாலைக் காலங்களில் எழுதினேன். அது பலத்த வரவேற்பிற்கும் சர்ச்சைக்கும் உள்ளானது. அதன் பிரதி உங்களிடங் கிடைக்கச் செய்யாதது உங்கள் துர்ரதிஸ்டமே! என்று எண்ணத் தோன்றுகிறது.

    “மனிதன் பஞ்சப10தங்களுக்குக் கட்டுப்பட்டவனும் அந்தப் பஞ்சபூதங்களால் ஆனவன் என்றும், பஞ்சப10தங்களின் ஒன்றிணைந்த செயற்பாடே மனிதன் என்றும்,  மனிதனுடைய மரணத்தின் போது அவை மீண்டும் பிரிகையடைந்து பஞ்சப10தங்களுடனே இணைந்துவிடுகிறது, இது ஒரு சுற்றோட்டச் செயற்பாடு” என்பன பற்றியே அந்தத்தொடர் அமைந்தது.

    இத்தகைய ஆழமான சிந்தனைகளை இப்போது அலசுவதிலும் பார்க்க, இன்று எத்தகைய சிந்தனை மனிதனை மேம்படுத்துகிறது என்பதையும், மதத்தின் வழியில் மனிதனின் வாழ்க்கை எப்படி இணைகின்றது என்பதை முன்னோக்கிப் பார்ப்போமா?!

    காரணகாரியமுண்டு
    இன்று வானோங்கி ஏராளமான இந்து, கிறீஸ்தவ ஆலயங்கள்.

    அவற்றின் வேலைப்பாடுகள் ஆகா,!. . .  சொல்லில் அடக்கிவிட முடியாது. அவற்றின் பெறுமதி அளவிட முடியாது. அவற்றின் கால அளவு வரலாற்றுப் பின்னணி என்பன சிறப்புடன் விளங்குகின்றது.

    இவை ஒரு புறம் இருக்க, இன்னும் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருப்பிட வசதியின்றி, அதோ..... அந்தப் பிள்ளை அலைகிறது.

    ஆதரவுக்காக அது கையை நீட்டினால் அதன் கையில் ஒரு செப்பு, அல்லது வெள்ளி நாணயம் (காசு).

    அது அவனுடைய எந்தத் தேவையினைப் பூர்த்தி செய்யப் போதுமானது?

    ஆலயங்களில் நாளாந்தம் ஏற்படும் மொத்த செலவினைக் கணக்கிட்டால்,! அவற்றால் பல்லாயிரம் அபலங்களைப் போக்கி விடலாம்.

    அதற்காக ஆலயங்களையும், அவற்றின் செயற்பாட்டையும் குறை கூறவில்லை. வானளாவிய ஆலயங்கள், அதன் நோக்கம், அவை அவ்வளவு பிரமாண்டமாக அன்று கட்டப்பட்டதற்கான காரணம் என்ன என்று என்றாவது சிந்தித்ததுண்டா?

    அன்று அதன் தேவை அவசியமானது: சரியா தவறா என்பதல்ல சிந்திக்க வேண்டியவை தேவையா தேவையற்றவையா  என்பதே இப்போது வேண்டியவை. இன்று அதன் தேவை எத்தகையது என்பதே இன்றைய நிலையில் அவசியமானது.

    அவற்றை எத்தகைய முறையில் கையாளலாம் என்பதே அவசியமானவை!.

    இன்று அதிகளவான சுமைகளைப் பக்குவமாக, சாதாரணமாகத் து}க்கக் கூடிய இயந்திரங்கள் உண்டு. கட்டிடங்களை அப்படியே பெயர்த்து இருக்கும் இடத்தில் இருந்து இன்னோர் இடதிற்கு இடம் நகர்த்தக் கூடிய தொழில் நுட்பமும் உண்டு.

    இதில் எந்தச் சேதமும் கட்டிடத்திற்கு ஏற்படாத வகையில், மேலும் நினைத்த மாத்திரத்தில் நு}றுக்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட கட்டிடங்களை நிமிடத்தில் தரை மட்டமாகத் தகர்த்து விடும் வல்லமையும் உண்டு,

    குறைந்த நாட்களில் நு}றுக்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட பெரும் கட்டிடங்களைத் தகர்க்கப்பட்ட அதே இடத்தில் கட்டி முடிக்கக்கூடிய வசதியும் உண்டு.

    இவைகள் எல்லாம் இன்று சிறப்பாகச் சொல்லிக் கொள்ளக் கூடிய ஒரு விடயமாக எனக்குத் தோன்றவில்லை. அதற்குக் காரணமும் உண்டு.

    அன்றைய காலங்களில் பல நு}று வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு பிரமாண்டமாக நிற்கும் கோவில்களை இன்று உற்று நோக்கும் போது, பார்ப்பவர்கள் மூக்கில் விரலை வைக்கத் தோன்றுகிறது. வாயைப் பிளந்து அடிக்கடி விழிகளைப் பிதுக்கியும் புருவங்களை மேலும் கீழுமாக அசைத்தும், ஆச்சரியப்படத் தோன்றுகிறது. இல்லையா?

    அந்தக் காலத்தில் கணக்கிடக் கணணி இல்லை, சுமைகளை இலாவகமாகத் து}க்குவதற்கு கிறைன் (சுமை து}க்கி) இல்லை இப்படிப் பிரமாண்டமான கலையம்சம் பொருந்திய கட்டிடக் கலையினை எப்படிச் சாமர்த்தியமாகக் கட்டி முடித்தார்கள்.?

    அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்று: கடந்த காலங்களில் நான் இந்தியா சென்ற போது தஞ்சாவூர் (தமிழ் நாட்டில்) பிரதேசத்தில் உள்ள தஞ்சைப் பெரிய கோவிலைப் பார்த்துப் பிரமித்தேன். ராஜராஜசோழ மன்னன் கட்டுவித்த ஆலயமது. அதில் கலையம்சம் ஏராளமாக இருந்தது.

    இப்படிப்பட்ட பிரமாண்டமான கட்டிடங்கள் கடவுளுக்காகக் கட்டப் பட்டதா?

    “ வானம் எனக்குச் சிங்காசனம்
    பூமி எனக்குப் பாதப்படி ” இது வேதாகம வாசகம்.

    இப்படி இருக்க, கடவுளுக்கு எப்படி அதனைக் கட்ட முடியும். மாறாக கடவுளுடைய பேரைச் சொல்லி மக்கள் ஒருமனப்பட்டு ஒன்று கூடவும், அவர்கள் உடல் நலன்களைப் பாதுகாக்கவும், மனித நேய செயற்பாடுகளை ஊக்குவிக்கவும், குற்றமுள்ள இதயங்களைக் கழுவிச் சுத்திகரிக்கவும், முக்கியமாக பாது காப்புக்காகவுமே அவைகள் கட்டப் பட்டது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையா?!

    ஆம், அப்போதும் போர்ச் சூழல் தான். ஆலயங்களில் தஞ்சம் புகுவோரை விரோதிகள் தாக்க மாட்டார்கள். அப்படித் தாக்கினாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவைகள் பிரமாண்டமாக அமைந்திருக்கும்.

    மேலும் மனங்கள் சங்கடப்படும் போது மனமகிழ்ச்சி தரும் சிற்பக் கலைகள், ஓவியக் கலைகள், கவிதைகள் போன்றனவும் அந்த ஆலயப் பகுதிகளில் காணப்படும்.

    அது ஒரு கலைஞர் ஒன்றுகூடும் இடமாகவும் அக்காலங்களில் அமைந்திருந்தது.

    இன்று மட்டுமல்ல, அன்றும் மக்கள் போர்ச் சூழலால் புண்பட்டகாலமே. அன்று மட்டுமல்ல என்றும் இதுவே நிலை என்று எண்ணத்தோன்றும் அளவிற்கு உள்ளது இன்றைய நிலை!

    அன்றைய சூழலில் அபயந்தரும் இடமாகவும், அபாயத்தில் இருந்து விடுவிக்க ஆறுதல் தரும் தளமாகவும், மக்கள் குடும்பம், குடும்பமாக ஒன்று கூடி ஒருமனப் பட்டு ஒன்று கூடும் நிலமாகவும் . . .  இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். அன்று அவை அவசியமாக இருந்தது.

    ஆக, ஆரம்ப காலம் ஒரு காரணத்தோடே காணப்பட்டது. அண்மைக் காலமோ அலங்கோலமாகக் கிடக்கிறது.

    சில ஆலயங்களுக்குப் போனால் இனம் புரியாத நிம்மதி. யாருடனும் பேசத் தோன்றுவதில்லை. ஏதும் சிந்திக்கவும் தோன்றுவதில்லை சற்று நேரம் அப்படியே இருந்து விடத் தோன்றும். சரி போகலாம் என்று எழும்பும் போது தான் நீண்ட நேரம் விரயமானது விளங்கும். “நேரம் போனதே தெரியவில்லை” என்று புறப்படத் தோன்றும். ஆனால் மனதுக்குள் ஒரு நிம்மதி . . . . ! ஒரு அமைதி . . . . ! ஒரு ஆறுதல்.

    எனக்குத் தெரிந்த, என்னால் உணர்ந்த அந்தப் பாஷையூர் அந்தோனியார் ஆலயமும், ஆச்சிரமம் ஆலயமும், நினைவில் நீங்காதவை! இரண்டு ஆலயங்களுக்கும் நான் தனிமையில் போவேன். திருப்பலி இல்லாத நேரங்களில் அமைதியாக இருந்து விட்டு வருவேன் - பெரும் திருப்தியோடு!

    மனதில் சஞ்சலம் இருக்கும் போது அங்கே போனால் அன்னையின் மடியில் படுத்து உறங்க அன்னையின் விரல்கள் தலை கோதி விடுவது போல், இடையிடையே வந்து தீண்டும் கடல் காற்று அந்த அந்தோனியார் கோவிலில் எனக்குக் கிடைக்கும். அது ஒரு தனிச் சுகம். அப்படியே நீண்ட நேரம் கழித்து விடுவேன். அங்கு இருக்கும் போது சுரூபங்களை ரசிப்பதில்லை, வந்து போகும் மனிதர்களைப் பார்ப்பதில்லை அமைதியாய் விழிகளை மூடி இருக்கையில் அமர்ந்து விடுவேன். அதில் ஒரு பெரும் நிம்மதி.

    இதுதான் ரிசிகளும், மகான்களும் செய்யும் தியானம் என்று எண்ணத் தோன்றும்.

    நோய்வாய்ப்பட்டவன் வைத்தியனைத் தேடுவதுபோல் எனது மனவருத்தத்திற்கு, துன்பம், சஞ்சலம் வரும்போது எனக்கு அது ஒரு நல்ல வைத்தியசாலை.

    அமைதியாய் இருப்பதே நல்ல மருத்துவம்.

    இத்தகைய ஆலயங்களைக் கொண்ட மதங்களின் செயற்பாடு மனிதர்களின் ஆரோக்கியத்திற்குச் சொல்லும் வழிகளை அலசுவதே இந்தப் பகுதியின் நோக்கம்.

          “நோயற்ற வாழ்வே, குறையற்ற செல்வம்” இல்லையா!
    காரணம் புரிந்து காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதே எனது உள்ளக் கிளறல்.

    யாரும் ஏதாவது செய்யும் போது அதற்கான காரணங்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மதங்கள் சொல்லும் வழிபாட்டிலும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கத்தான்செய்கிறது.அதன்அர்த்தத்தைப் புரிந்து கொண்டோமேயானால் அவற்றை அதி சிரத்தையுடனும்,அவற்றின் பக்குவத்துடனும்,செய்ய நாமாகவே முனைந்து விடுவோம். அதை அறிந்துதான் “ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்று மொழி உண்டு. அதன் காரணத்தை அறியாமல் போனதனால் இன்றைய இளஞ் சமுதாயம் இப்படியும் சொல்கிறது.
       “ஆலயம் தொழுவது
             வேலை மினக்கேடு”  என்று சொல்வது சிரிப்பாக உள்ளது!

    இன்றில் இருந்து ஒவ்வொரு மதவழிபாட்டிலும் என்ன காரணம் உண்டு, அவை மனிதனின் ஆரோக்கியத்திற்கு வழங்கும் பங்களிப்பு என்ன என்பதனை அலசுவீர்களா?

    மதவழிபாடுகளை மேற்கொள்ளும்போது பலவகையான செயற்பாடுகளை நாம் செயற்படுத்த வேண்டியுள்ளது. அவற்றைப் பற்றிய விடயத்தை அடுத்த பகுதியில் ஒவ்வொரு பகுதியாக ஆராய்வோம்.

    njhlUk;...