Arugan's profileஅருகன்PhotosBlogListsMore Tools Help
    November 23

    நிலத்தில் விழுந்தும் மீசையில் மண்ஒட்டவில்லை!!! என்று சிங்களவர் கேலி செய்யாரோ?

    நிலத்தில் விழுந்தும் மீசையில் மண்ஒட்டவில்லை!!! என்று சிங்களவர் கேலி செய்யாரோ?
    யாரையோ கேவலப்படுத்துவதாக நினைத்து தமிழர்களுக்காக இன்றுவரை தம்முயிரைக் ஈந்த புலிகளின் அதி தூய  மதிப்பை இலங்கை அரசு கறைப்படுத்த எத்தணிக்கும் போது அதை மென்மேலும் தமிழர்களே ஆதரவாக செயற்படுவது தமிழர்களின் அறிவின்மையைக்காட்டுகின்றது. இது புலிகளைப் பெருமைப்படுத்துமா அல்லது, இலங்கை அரசை சிறுமைப்படுத்துமா… தமிழர்கள் மத்தியில் தற்பெருமை கொள்ளலாம் ஆனால் சட்டம் உண்மை சர்வதேசம் என்பதெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. தமிழர்களின் மூலை முடுக்கிலிருக்கும் அனைதஇது இணையமும் இலங்கை அரசின் கண்காணிப்பில் செல்லாது என்பது தங்கள் எண்ணம் போலும். வீரம் என்பது வேறு விவேகம் என்பது வேறு… இந்த செயல் வீரமா வீவேகமா???

    சர்வதேச அரசியலை தமிழ்ச் சிறுவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.

     

    வரவிருக்கும் மதிப்பிற்குரிய நாளினை எவ்வாறு நாம் பயன்படுத்தப்போகின்றோம் என்பதே அவசியம். எமக்கு விடுதலையும், சுபீட்ஷமும், எம்மை நாம் ஆழக்கூடிய அதிகாரமுமே எமக்கு வேண்டியது… சிங்களவனை அடிமைப்படுத்துவதோ அல்லது கேவலப்படுத்துவதோ அவசியமற்றது. குhரணம் தமிழீழம் அமையுமாயின் சிறீலங்க எமது விரோதியோ நண்பனோ எதுவாக இருந்தாலும் அது அயல்நாடு. சர்வதேச விஸ்தரிப்பிற்கு அது அவசியம் என்ற அடிப்படை நியமணங்களை   இப்போதிருந்தே தமிழர்களின் சிறு பிள்ளைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்

    பின்னுள்ள இந்த பகுதி தமிழ் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது...

     

    இதுபோலவே தமிழீழத்தின் வருங்கால 1000 ரூபா கட்சியளிக்கலாம்

    21 November, 2009 by admin

    தமிழீழம் ஒரு நாள் உருவாகும் போது, ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம் என அதிவின் வாசகர் ஒருவர் வரைந்து அனுப்பியுள்ளார். இது ஒரு கற்பனையாக இருந்தாலும் அவர் உணர்ச்சிகளிற்கு மரியாதை கொடுக்கின்றோம். மகிந்தவின் உருவப்படத்துடன் வெளியான 1000 ரூபா தாளை எமது மக்கள் எவ்வளவு தூரம் வெறுக்கின்றனர் என்பதற்க்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வரவிருக்கும் தமிழீழத்தின் 1000 ரூபா தாளை முன்னமே அறிவிக்கிறோம் என்ற தலைப்பில் வாசகர் ஒருவர் இப் புகைப்படத்தை எமக்கு அனுப்பிவைத்துள்ளார்.

    November 20

    புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!!

    4100212202_2fbb395c68_m புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!!     

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எப்போது பார்த்தாலும் கிழக்கின் பக்கமே தனது ஒழியை வீசுகின்றாரே வடக்கின் பக்கமோ அல்லது ஏனைய பக்கமோ அவரின் பார்வை குருடாக இருக்கின்றதோ!!!

    தேசிய நல்லிணக்க அமைச்சராக இருந்து, கிழக்கின் நல்லிணக்க அமைச்சராகப்பணியாற்றுகின்றாரோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. அமைச்சின் பதவியைவிட விசேடமாக எந்தத் தமிழனுக்கும் கிடைக்காத பெரும் சந்தர்ப்பம் அவருக்குக்கிடைத்துள்ளது.

    புலிகள் அமைப்பிலும் மிகப்பெரிய பொறுப்பு, இலங்கை அரசியல் கட்சியிலும் மிகப்பெரிய பொறுப்பு… பழைய புலி பதுங்குவது… மீண்டும் பாய்வதற்கோ? அல்லது,   தன்னைப் பக்குவப்படுத்துவதற்கோ!!! பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதே வேளையில் மகிந்தவின் அசைவுகளும் சும்மாயில்லை… ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தனது அடிகளை எடுத்துவைப்பதற்குள் அடுத்த தேர்தல் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வந்துவிட்டது, கானல் நீராகும் என்றிருந்த தேர்தலே கண்ணுக்கெட்டியது என்றால், நிலையில்லாத பதவி எத்தனைதூரம் நிலைக்கப்போகின்றது என்ற வினாவும் எழாமலில்லை…

    புலத்தில் புலிகளின் அசைவுகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருனாவை உதார்சீனப்படுத்துவதாகவும் அவரைப் பெருமைப்படுத்துவதில் இருந்தும் விலகியே வந்தவர்கள் தற்போது, என்ன செய்வதென்று அறியாது திண்டாடுகின்றார்கள்.

    நோர்வே தேர்தல் அவ்வளவுக்கு வெற்றியளிக்கவில்லை என்பதனைக்கூட மூடி மறைக்கப்பார்க்கின்றனர். அதாவது, வட்டுக்கோட்டைத்தீர்மானத்தை ஆதரித்த வாக்குகள் தற்போது நடைபெற்ற தேர்தலில் வந்து விளவில்லை என்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனினும், நோர்வே தனது போக்கை ஒருபுறம் செலுத்துவதாகவும் உருத்திர குமார் சார்ந்தோர் இன்னொருபுறம் நகர்த்துவதுபோன்றும் காணப்படுகின்றது.

    எது எப்படியாயினும். கருணாவின் போக்கில் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகள் தாமும் கால்பதிக்க முனைகின்றமை தாம் தமிழர்கள் பிரதிநிதியாகாவிட்டாலும், கருணாவை அந்த இடத்தில் வைக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டுவது தெரிகின்றது.
    ஆரம்பத்தில் இலங்கை அதிபரைக்கேவலப்படுத்தியவர்கள் தற்போது கட்டிப்பிடித்துத்துதி பாடி சமரசம் செய்கின்றார்கள். சிங்கள அதிகாரிகனளை வளைத்துபோட எத்தணிப்பவர்கள் தமிழ் அதிகாரிகளை கால் கழுவப்பார்க்கின்ற தமிழ் ஆhவலர்கள் தமக்கென இட்ட பெயர் தமிழ் தேசியவாதிகள்.


    இலங்கையில் சிறுபான்மை என்றொரு இனமே இல்லை என்பது அமைச்சர் கருணாவின் வெளிவார்த்தையாக இருக்கின்றது. இது உண்மையாக இருந்தாலும் சிங்கள கழுகுகள் நம்புவதற்கில்லை. பிரபாவால் திட்டமிடப்பட்ட அரசியல் திட்டம் என்னவென்பது கருணாவிற்கும், பிரபாவிற்கும், தமிழ் செல்வனுக்கும், அன்ரன் பாலசிங்கத்திற்கும் தான் வெளிச்சம் அதில் கருணாவைத்தவிர மற்றைய மூவரும் இப்போது சாட்சி செல்லப்போவதில்லை. இது எமக்கு எட்டிய அரசியலில்லை இலங்கை புலனாய்விற்கும் எட்டியிருக்கும் அதனால் எடுத்த எடுப்பிலேயே கருனா எதையும் தமிழர்களுக்குக்காட்டி விட முடியாது.

    அவ்வாறு கருணாவால் காட்டப்படுகின்ற விடயங்களும் புலத்தில் ஒழுங்காக வந்து சேர்வதில் புலிகளின் ஆதரவாளர்கள் தடுத்துசுவர்கட்டியிருக்கின்றார்கள்.

    பல வருடங்களாக தலைக்கணமின்றி தமிழர்கள் செயற்பட வேண்டும் என்பதனை அடித்துரைத்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காககத்தான் போனது. எனினும் இப்போது, செவிடாக இருந்தாலும் பராவாயில்லை குருடர்கள் போல் பேச்சுக்களை நடத்திப்பார்ப்போம் என்று கங்கணம் கட்டுகின்றனர். 

    அப்போதே  தந்தை செல்வா சென்ன வார்த்தை இன்றும் நிலைத்து நிற்கின்றது. தமிழர்களை இனி கடவுளாலும் காக்க முடியாது…
    கட்சிகள் அதிகரிக்கின்றனவேயொழிய, தமிழர்களின் வன்மை அதிகரிக்கவில்லை. யார் தலைமையினை ஏற்பது என்ற வினாவிற்கு பலர் விண்ணப்பிக்கின்றனர்… யார் தலைவராவதற்குத் தகுதியுண்டென்றால் அனைவரும் பின்நிற்கின்றனர் … நல்ல வேடிக்கை.
    இதோ  புதியதொரு தசாப்தம் உதயமாகின்றது… புதிய தலைமையில் புதிய ஈழம் நடைபயில்கின்றது பொறுத்திருங்கள் தைபிறந்தால் வழிபிறக்கும்… !!!

    November 19

    50வீதமல்ல 100வீதத்தமிழர்கள் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும்…

     

    50வீதமல்ல 100வீதத்தமிழர்கள் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும்…

      மிக்க மகிழ்ச்சி நோர்வே நாடுகடந்த அரசவை. காரணம் 2006ம் ஆண்டு என்னால் பரிந்துரை செய்யப்பட்ட திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தியிருப்பதற்கு. எனினும் இதில் ஒரு சில திட்டங்கள் பழுவுடையதாகக்காணப்படுகின்றது. அதனையும் திருத்திக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அதன் பகுதிகளுக்கான சில வரிகள் தரப்படுகின்றது.உலகத்தமிழர்களின் பின்னோக்கிய பாதையில் முன்னோக்கிச்செல்லும் தங்கள் போக்கிற்கு எனது பாராட்டுக்கள். எனினும் தமிழர்களின் ஆதரவில் தாங்கள் சொல்லும் 50வீத அனுமதி என்ற பொருள்தான் எனக்கு விழங்கவில்லை, தமிழர்கள் நோர்வேயில் எத்தனைபேர் வாழ்கின்றார்கள் என்ற தங்கள் கணக்கில் தவறுள்ளது, 5000என்ற அளவில் 50வீதத்தைக்கணிக்கின்றீர்கள் அது தவறான கணிப்பு என்பது தங்களுக்கே தெரியும். எனினும் தங்கள் 50 வீதத்தில் ஏன் மற்றவர்களின் கணிப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நாம் ஒரே இனம், தாங்கள் ஒரே அமைப்பு அப்படியிருந்தே தங்களுக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கும் போது, இலங்கை முழுதும் பார்க்கும்போது, எம்முடைய பலம் எமக்குள்ளே இல்லாது இருப்பதை தாங்கள் உணரவில்லையா??? எனவே தங்களின் செயற்பாட்டில் தமிழர்கள் முதலில் திருப்தியடையும் வரையில் தங்கள் சேவை அமோகமாக இருக்கவேண்டும். அதன்மூலம் 50வீதமல்ல 100வீதத்தமிழர்கள் தங்களுக்கு ஆதரவு தரவேண்டும். மேலும் வாசிக்க »

    October 21

    எமது மக்களின் விடுதலைக்காக தமது உயிரை இழந்த உண்மையான போராளிகள் எக்காரணங்கொண்டும் கேவலப்படுத்தப்படக்கூடாது.

    எமது மக்களின் விடுதலைக்காக தமது உயிரை இழந்த உண்மையான போராளிகள் எக்காரணங்கொண்டும் கேவலப்படுத்தப்படக்கூடாது.

    Maveerar புலத்தில் மக்கள் விழித்தெழாவிட்டால் புலத்திலும் இழப்புக்கள் ஏற்படலாம். மீண்டும் புலிகளின் ஆதரவாளர்கள் புலத்தில் புற்றீசல்போல் புறப்படுகின்றனர். புலிகளின் பெரைவைத்து இலாபமீட்டியோர் தற்போது வாழவழியின்றி மீண்டும் மக்களைச்சுரண்டவும், மக்கள்மத்தியில் பீதியைக்கிழப்பவும் தொடங்குகின்றனர்.

    இலங்கையில் தமிழர்களின் நிலையினை ஆதாரமாகக்காட்டி இலங்கைஅரசு ஒருபுறம் நிதியைத்திரட்டுகின்றது, மறுபுறம் புலிகளின் பழைய பெயரைச்சொல்லி, அதே தமிழர்களின் அபலநிலையினைக் காரணங்காட்டி தம்மை திடப்படுத்த வகைதேடுகின்றனர். ஊடகச்சாதனங்கள்மூலம் மக்களை மண்டைகழுவிவிடலாம் என்று ஒருபுறமும், புலிகளின்பால் இன்னும் பயம் மக்களிடம் இருக்கின்றது என்பதனைக்காட்டி மீண்டும் ஒரு கூட்டமைப்பினை அமைக்க இன்னொருபுறம், இளையோர் பெயரை முன்வைத்து போராட்டத்தை பின்வாயிலில் வளர்த்தெடுக்கலாம் என்பதில் மறுசாரார்,   இப்படிப்பலர் கங்கணம்கட்டுகின்றநிலை புலத்தில் தலைவிரித்தாடுகின்றது.

    இதற்கும் தலையாட்டும் சில தமிழர்களை வைத்துக்கொண்டு, அனைத்துத்தமிழர்களும் இதற்காதரவு என்று பூச்சாண்டிகாட்டுகின்றனர். எனினும் புலிகளின் பின்னணியோடு வளர்த்துவிடப்பட்ட பல்வேறு தமிழர்களும் பிறநாட்டவர்களும் தற்போது இனங்காணப்பட்டு வருகின்றமை மிகமுக்கியமாகக்குறிப்பிடப்படவேண்டடிதொன்று. புலிகளின் பெயரில் நிதிதிரட்டியோர் அவற்றை தமது சொந்த நிதியாகப் பயன்படுத்தியமையும், அவர்களின் பெயரில் சொத்துகளை உள்வாங்கியதும் தோண்டப்படவிருக்கின்றது.

    சிறியளவிலேனுஞ்சரி, பெரியளவிலேனுஞ்சரி தமிழர்களின் நிதிமுடக்கத்தை மேற்கொண்டோர்கள் விரைவில் அவற்றை சட்டப்படியான மாற்றங்களைச்செய்து கொள்ள ஆலோசனை வழங்கப்படுகின்றது. இவைபோன்ற நிலை மீண்டும் ஏற்படாதவாறு மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் புலிகளின் பெயரை தவறாகப்பயன்படுத்தி தம்மை திடப்படுத்துவோரை இனங்கண்டு கொள்ளவேண்டும் என்றும் கெட்கப்படுகின்றீர்கள்.

    புலிகளின் போராட்டம் தமிழர்களால் ஒருபோதும் கொச்சைப்படுத்தப்படக்கூடாது. ஒருசில தலைவர்களின் தவற்றாலும், ஆதரவாகச்செயற்பட்டோரின் தவறான நடவடிக்கைகளாலும் தற்போதைய பின்னடைவு இடம்பெற்றது என்பது உண்மையே எனினும் எமது மக்களின் விடுதலைக்காக தமது உயிரை இழந்த உண்மையான போராளிகள் எக்காரணங்கொண்டும் கேவலப்படுத்தப்படக்கூடாது. எனவே மக்கள் இனி நடக்கப்போகும் அனைத்து அரசியல் சமூக பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்.

    வாக்கெடுப்பு என்றொரு பிரசாரம் இன்று ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றது. அதுகூட முறையாக இடம்பெறுவதாக இல்லை. திரைமறையில் தில்லாணா ஆடுகின்றனர். எதையும் முறையுடன் ஆரம்பித்தால் முழுவதிலும் பாதிமுடிந்ததற்குச்சமன். ஆனால் முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல் போலிக்குள்ளே வேலிபோடப்பார்க்கின்றனர் பலர். முதலில் மக்கள் கேள்விகேட்கப்பழகவேண்டும். அக்கேள்வி நீதியானதாகவும், ஆரோக்கியமாகதாகவும், நாகரீகமானதாகவும் இருக்கவேண்டும். அதற்குத்தக்கபதிலைத்தரக்கூடிய பொறுப்பாளர்கள் அமர்த்தப்படல்வேண்டும். தம்மால்  எடுத்த காரியத்தை திடமாக முடிக்கமுடியும் என்ற ஆதாரத்தை நிலைநாட்டியவர்களையே மக்கள் முன்கொணரவேண்டும். தொடர்ந்தும் தவறான போக்கிலும், சட்டத்திற்குப்புறம்பான போக்கிலும், மக்களைக்கொண்டுசெல்லக்கூடாது என்பதில் தலைமை நிலையாக இருக்கவேண்டும். குடந்த காலத்தில் திரு உருத்திர குமார் அவர்களுக்கு சில கேள்விகளைத் தொடுத்திருந்தது எமது தள வாசகர்களுக்குத்தெரியும் இதற்கு இன்றுகூட பதில் வரவில்லை என்றால் பாருங்களேன்.
    வாக்கெடுப்பு-  யாப்பு, யார், யாருக்காக, எவ்வாறு, காரணம், முடிவு, ஆதரவு, எதிர்காலம், நன்மை, மக்கள், நிலையான அலுவலகம், துணை அலுவலகம், தொடர்புகள், சட்டம், நிதி, சர்வதேசநியமணம், சர்வதேச அங்கிகாரம்,… இப்படி ஆயிரம் விடயங்கள் முதலில் தெளிவுபட வேண்டும். ஆதன்பின்னரே மக்களை நாடவேண்டும். ஆதன் அடிப்படையே தெரியாதவர்கள் எப்படி தேர்தலைநடாத்தி அதன்மூலம் நாடொன்றை நிர்வகிக்கமுடியும்?  இவ்வாறான கேள்விகளுக்கு யாரிடம் விடை தேடுவது? ஆரசியல் அறிவாளர்கள் அமைதியா இருக்கின்றனர் அது தெரியாதவர்கள் ஆடித்திரிகின்றனர்…

    October 03

    தமிழனின் தலைவிதி அவன் காலில் இருந்து மிதிபடுகின்றது…

    20090922_10 http://thesiyam.spaces.live.com/blog/cns!F5A015D012108A71!124.entry தமிழனின் தலைவிதி அவன் காலில் இருந்து மிதிபடுகின்றது… தமிழனின் தலைவிதி அவன் காலில் இருந்து மிதிபடுகின்றது… கையில் தேசத்தைக் கொடுத்தாலும், அதை காலில் பந்து போல் விளையாடிக் கொண்டிருக்கின்றான் தமிழன். பல வருடங்களாக உரிமை வேண்டி போராடினான், இப்போது உரிமைகளை பிரித்துக் கொடுத்திருக்கிறது இலங்கை அரசு. அதை பயன்படுத்தி மேலும் முன்னேறும் வழியை விடுத்து, “வக்கோல் பட்டறை நாய்” போன்று தன்னைத்தானே கேவலப்படுத்துகின்றான். அம்மானும் பிள்ளையானும், அம்மாவும் பிள்ளையைப்போல் நலமுடன் இருந்தாலும், அவர்களை “கொழுவிவிட்டுக் கூத்துப்பார்க்க” விரும்புவோர் பலருள்ளனர்.

    அது ஒரு பக்கம் இருக்க, ஒருநாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடியது ஊடகச்சாதனம். அதிலும் சிறந்த ஊடகவியலாளர்கள் அதில் உயிருள்ள எழுத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ள எழுத்தாளரை இனங்கண்டு அவர்களை பலப்படுத்தவேண்டியது அரசின் மற்றும் அரசியல்வாதிகளின் பொறுப்பும் ஆகும். http://www.kilakku.com/?p=3707 அழுத்திப்பார்க்கவும். கடந்த நாட்களில் எரிமலை இணையத்தில் ஒரு ஆக்கத்தைப்பார்த்தேன். இப்படியும் தமிழ் எழுத்தாளர்கள் இருக்கின்றார்களா? இதனையும் இணையத்தில் வெளியிடுகின்ற அளவிற்கு இணையம் கேவலமாகப் போய்விட்டதா? இவ்வாறான எழுத்துக்களால் உண்மையினைக்கூட நாசுக்காகச் சொல்ல முடியாதே எப்படி உயிருள்ள எழுத்துக்களை கொணருவது… பல மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கிழக்கின் முதலமைச்சர் தொடர்பாக கேவலமாக எழுதியிருந்தார்கள்… தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும் அப்போதுதான் அவைதிருத்தப்படும். ஆனால் அதனை தெரிவிப்பதற்கும் வார்த்தைப்பிரயோகங்களை வெளியிடுவதற்கும் சில முறைகள் இருக்கின்றன. கேவலமான வார்த்தைகளை கொட்டுவதற்கும் தமிழில் அழகிய முறை இருக்கின்றது.

    Karuna & Dacklas 01 உலகின் மொழிகளில் அதிக மதிப்புள்ள சொற்கள் அடங்கிய மொழி தமிழே! இது இப்படி இருக்க எரிமலை இணையம் ஒரு முதல் அமைச்சரை, தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அவதூறாக சித்தரிப்பது முறையற்றது. மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரை அவமதிப்பது, மக்களையே அவமதிப்பதாகும். இப்படியிருக்க தமிழர்கள் எப்படி ஜனநாயகத்தை ஏற்கப்போகின்றனர்? மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மகிந்த குற்றவாளி…!!! மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் குற்றவாளி…!!! தன்னைத்தானே தலைவராக முப்பது வருடங்களாக அறிமுகஞ்செய்த பிரபாகரன் குற்றவாளி…!!! இத்தனைகாலமும் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசுடன் இணைந்து செயற்பட்ட டக்ளஸ் குற்றவாளி…!!! அப்படியென்றால் யார்தான் சுற்றவாளி??? எப்போதுமே தமிழன் தமிழனை மதித்ததோ பாராட்டியதோ கிடையாது… அமைச்சராக இப்போது இருக்கும் கருணா இருபது வருடத்தில் செய்ததை பிள்ளையான் இரண்டுவருடத்தில் செய்துள்ளார். கருணா அமைப்பைவிட்டு பிரிந்து செயற்பட்டார், பிள்ளையான் அமைப்பில் இருந்தே செயற்பட்டார் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடில்லை… எல்லாம் குட்டையில் ஊறிய மட்டைதான்.

    Wakare_Police_c_circuit_bungalow_6 இதற்குள் எதற்கு தலைக்கணம்.? இலங்கை அரசு, ஆறுமாதத்தில் புலிகளின் கொட்டத்தை அடக்கியது ஆனால் அமைச்சரும், முதல் அமைச்சரும், எம்.பீக்களும் வருடக்கணக்கில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்…? சிங்கள அரசிலிருந்து, குறைகளைக் கண்டு அதை விவாதித்து தமிழர்களுக்கு உரிமையினைப் பெறுவதற்கு உதவிசெய்யுங்கள் என்றால், “வக்கோல் பட்டறை நாய்மாதிரி” தமிழர்கள் தமிழர்களை தாமும் ஆளாமல், மற்றைய தமிழர்களையும் ஆளவிடாமல், சிங்களவர்களையும் ஆளவிடாமல் உரிமைகள் சந்தையில் மிதிபடும் காகிதமாககிடக்கின்றது… தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள் அது வரவேற்கக்கூடியதே, உதாரணமாக இத்தாலியில் இருக்கும் இலங்கைத் தூதராலயத்தில் தமிழர்களுக்கு இடம்பெற்ற தவறுகளைச் சுட்டிக்காட்டி வெளியிடப்பட்ட அருகனின் நாவலால்தான் ( http://it.calameo.com/read/0000948120aaf09622d82 அழுத்திப்பார்க்கவும் )இன்று பல முன்னேற்றங்கள் றோம் தூதராலயத்தில் மாற்றப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது. அதற்காகத்தாறுமாறாக வார்த்தைப்பிரயோகங்கள் தமிழ் மொழிக்கு அழகல்ல… தமிழர்களுக்கும் அழகல்ல… இப்போது உயிர்ப்பயம் குறைந்து விட்டது, புலிகள் இருக்கும் போதும் புலிகளுடன் இருக்கும்போதும் இல்லாத செயற்பாடுகள் இப்போது அதிகரித்துள்ளன… அதனால்தான் நாய்கள் அடிக்கடி ஊளையிடுகின்றன… இந்த ஊளையிடல் புலிகள் இருந்த போது எங்கு போனது, கருணா புலிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டியபோது, கருணா குற்றவாளியாக மிதிக்கப்பட்டார்… ஆனால் இப்போது, கருணாவின் நிலை நியாயமாக இருக்கின்றபோது, அவரை மதிப்பதற்கு தன்மானம் விடவில்லை போலும்… அந்தகாரணத்தை வைத்துத்தான் பிள்ளையான் கருணாவை எதிர்த்து நிற்கின்றார். இன்று பிள்ளையான் இருக்கும் நிலை கருணாவின் திட்டத்தில் உருவானதே ஒழிய பிள்ளையானின் திட்டத்திலல்ல. ஒருவேளை கருணாவின் திட்டத்திற்கு பிள்ளையான் அன்று ஒத்துப்போகவில்லை என்றால் இன்று மண்ணோடு மண்ணாய்ப் போனவர்களில் ஒருவேளை அவரும் இருந்திருக்கலாம். தனக்கு பாதுகாவலனாய் இருந்தவனுக்கு நான் பணிந்து போவதா என்பதும் அமைப்பின்தைலைமையில் இருந்துவிட்டு, இப்போது தொண்டராக இருப்பதா? என்பது கருணாவின் தன்மானம்… இதில் ஒருவிடயம் முக்கியமானது… அதாவது, பிள்ளையானின் முதல் அமைச்சுப்பதவி மக்களின் வாக்குரிமையில் கிடைத்தது… அது கருணாவை நம்பியே போடப்பட்ட வாக்குகளே யொழிய பிள்ளையானுக்குரியதல்ல. கருணாவின் அமைச்சுப்பதவி மக்களின் வாக்குரிமையில் கிடைத்ததல்ல!!! ஆரசின் வாக்குறுதியில் கிடைத்தது. நாளை தேர்தல் இருவரின் தலைவிதியையும் நிர்ணயிக்கும் என்பது திண்ணம். அதற்காக கிடைத்ததைவைத்து மேலும் எம்மைப்பலப்படுத்த எத்தணிக்க வேண்டிய திட்டத்தை எழுத்தாளர்கள் ஆலோசனையாக வழங்க வேண்டுமேயொழிய உங்கள் விவாதத்தை ஏழனத்திற்குப் பயன்படுத்தக்கூடாது எழுத்தாள அன்பர்களே!!! “ஏரிமலை” ஆசிரியர் இதனை சீர்திருத்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றேன்.

    கருணாவிற்கு ஆதரவில்லாவிட்டாலும், பிள்ளையானைப் பற்றித்தப்பாக வந்தால் அதனை தலையில்தூக்கி ஆடுவது, கருணாவின் அன்பர்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு தமிழர்களைப்பற்றி கேவலப்படுத்தும்போது, ஆதரவாளரா எதிராளியா என்பதல்ல முக்கியம் தமிழன் என்ற ரீதியில் கொதிப்படைய வேண்டும் அதுவே தேசப்பற்று!!! தலையில் தூக்கிவைத்தாடிய தலைவர்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிய காலம் கண்முன்நின்று மறையவில்லை. இதில் ஆளாளுக்குத் தலைவர் என்றால் யார்தான் தொண்டன்? மக்களை காப்பதிலும்பார்க்க தமது உயிரையும் பதவியையும் காப்பதிலே அதிக காலத்தை தற்போதைய புதிய தலைவர்கள் மேற்கொள்ளுகின்றனர். இதில் டக்ளஸ் எவ்வளவோமேல்!!!

    இருந்தும் ஆளாளுக்கு இணைந்து செயற்பட வேண்டும் என்றின்றனரே “நான் இன்னாருடன் இணையத்தயார்” என்கின்ற வார்த்தை தமிழ் அரசியல் அமைப்புக்களில் எங்கே??? இதுதொடர்பாக எழுதுங்கள்… விஸ்தரிப்புக்கள் எப்படி அமையவேண்டும் என்று எழுதுங்கள்… உரிமைகளில் ஏற்படுகின்ற குறைபாடுகளை எப்படித்தீர்க்கலாம் என்று எழுதுங்கள்… அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திட்டங்களை எழுதுங்கள்… தமிழர்களின் இழப்புக்களை வரலாறாக எழுதுங்கள் … தமிழர்களின் சிறப்புக்களை நிலைத்திருக்க எழுதுங்கள்… தவறுகள் திருத்தும் வகையில் எழுதுங்கள்… எரிமலை ஆசிரியர் தனது தவறினைப்புரிந்து கொள்ளுமாயின் பிள்ளையானைப் போன்றோரும் திருந்திக்கொள்வார்கள். ஆசிரியர் இதனை மறுப்பாராயின் இவ்வெழுத்துக்களை பிள்ளையான் எப்படி ஏற்று திருத்த முனைவார்? தனது தவறைப்புரிந்து எப்படி அம்மானுடன் இணைந்து செயற்படுவார். தமிழர்கள் எப்போதுதான் நிம்மதியாக வாழ்வது? கேட்கும் தேசமே மிகக்குறுகியது, இருக்கும் மக்களோ மிகச்சொற்பமானது, ஆனால் நமக்குள் ஆயிரம் தலைவர்கள்… ஆயிரம் கட்சிகள்… ஆயிரம் பிளவுகள்… சிங்களவர்களிலும் பார்க்க எமக்குள்தான் பிரிவுகள் அதிகம். சிங்கள அரசியல் கட்சிகளிலும் பார்க்க தமிழர்களிடமே கட்சிகள் அதிகம். என்ன தேசமடா இது…!!!???- அருகன்.

    September 28

    இளங்கோவுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவமுடியுமா ?

    22 வயதுடைய இளங்கோவுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவமுடியுமா ?

     © 2009 Athirvu. All Rights Reserved. Nanri Athirvu.

    அன்பார்ந்த தமிழீழ மக்களே ! வவுனியா தடுப்பு முகாமில் அடைபட்டு பின்னர் இருதய சத்திரசிகிச்சைக்காக, கொழும்பு வந்திருக்கும் ஆனந்தராஜா இளங்கோ (வயது 22) விற்கு பணப்பற்றாக்குறை காரணமாக சத்திரசிகிச்சை நடைபெறவில்லை. அவரின் தாய் தந்தையர்கள் இன்னமும் வதை முகாமில் அடைபட்டு உள்ளனர். அவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ இளங்கோவின் சத்திர சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. ஆதாலால் இளங்கோ புலம்பெயர் உறவுகளிடன் உதவி நாடி நிற்கின்றார்.

    இருதய அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் நாட்களை எண்ணியபடி அங்கு ஒரு உயிர் ஊசலாடுகிறது. புலம்பெயர் தமிழர்களே உதவுங்கள். அவரை தடுப்பு முகாமில் இருந்து விடுதலைசெய்த பத்திரம், தேசிய அடையாள அட்டை, கொழும்பு அப்பலோ மருத்துவமனையின் சான்றிதழ், மற்றும் அவர் கைப்பட எழுதிய கடிதம் என்பன இதில் இணைக்கப்பட்டுள்ளது. எத்தனையே ஆயிரம் தமிழ் உறவுகளை நாம் யுத்தத்தில் பலிகொடுத்துவிட்டோம், இனியும் ஒரு தமிழனை இழக்க முடியுமா ??

    உதவி செய்ய விரும்புவோர் கீழ் காணும் எண்ணுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளவும்:0044 7529653715

























    உதவி செய்ய விரும்புவோர் கீழ் காணும் எண்ணுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளவும்:0044 7529653715

    கண்களால் கண்டவற்றை நம்பாமல் இருக்கமுடியும???!!!

    BodyPart

    இலங்கையின் அரசியலில் தமிழர்களுக்கான காய்களை எப்படி நகர்த்தவேண்டும் என்ற விடயங்களை வெளிப்படையாகச்சொல்லமுடியாது.

    இங்குள்ள படத்திற்கும் இலங்கை அரசிற்கும் என்ன தொடர்பு, முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போட்டகதையாகவெல்லோ இருக்கு… என்று வாயைப்பிளப்பது தெரிகின்றது.

    இங்கு படத்தில் காணப்படுவது, கவர்ச்சிக்கண்களைக்கொண்டு நோக்கினால் அது உங்கள் முட்டாள்தனத்தையும் பகுத்துணராமையினையும், அறிவின்மையினையுங்காட்டுகின்றது. இத்தனைகாலமும், ஏமாற்றத்தில் மூழ்கித்திளைத்திருக்கும் தங்களுக்கு இதன் கருத்துப்புரியாமல்தான் இருக்கும். காரணம் எதையும் வெளிப்படையாக அறிய ஆவல்கொண்டவர்கள் நாம்.ஒவ்வொருவிடயத்தையும் பொறுமையாகவும் ஆழமாகவும் விவேகமாகவும் மேற்கொள்ளாவிட்டால், இப்படித்தான் கருத்துக்கள் தவறாகி முடிவுகள் வருவதற்குமுன்னமே எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிடுவீர்கள்.

    இது ஒரு கலைஞனின் கைவண்ணம். காமத்தோடுபார்ப்பவர்களுக்கு காமம், கலையோடு பார்ப்பவர்களுக்கு ஒரு கலை, ஆராய்ந்து பார்ப்போருக்குமட்டுமே அதன் பகுப்புகள் புரியும். 

    முன்னைய காலத்தில், அறிவாளிகள் இரகசியத்தன்மையினையும், தமக்கிடையே செய்திகளைப்பரிமாற்றவும் பயன்படுத்திய முறைதான் இக்கலை தொடர்பு வழி. உலகின் பல்வேறு இரகசியங்கள் அழிந்தமைக்கும் எமது அறியாமையே காரணம். இவைபோன்ற விடயங்களை அறியமுடியாதவர்கள் இவ்வாறான களஞ்சியங்களை வெறும் கிறுக்கல்களாக நினைத்து அழித்துவிட்டனர். இதற்கு நல்ல உதாரணம் “டாவின்சி” யிள் குறியீடுகள் இன்றும் அறியப்படாத ஓவியங்களாகவும் குறியீடுகளாகவும் காணப்படுகின்றமை.

    இவை வெறும் மீன்களின் அசைவுகளைக்கொண்டு அமைக்கப்பட்ட சித்திரக்கலையே தவிர காமக்காட்சியல்ல… இதுபோலவே தமிழர்களின் அரசியல் நகர்வையும் பக்குவமாக நகர்த்தாவிட்டால், மக்களின் தவறான கண்ணோட்டத்தால் நியாயமான போக்கும் விரையம் செய்யப்பட்டு கிடைக்கவிருக்கும் உரிமைகள்கூட கிடைக்காமல்போய்விடும். எனவே யார் மக்களின் தலைவன் என்பதனை கூர்ந்து ஆராய்ந்து அறியவேண்டுமெயொழிய வெறும் ஆயதபலத்தாலும், Nர்ப்பாட்டத்தாலும், கூச்சல்போடுவதாலும், நிரந்தரத்தலைவனாகமுடியாது.

    இங்கு இருவருக்கும் இடையில்இருக்கும் கறுப்பு வர்ணத்தின் பகுதிகளை மட்டும் பாருங்கள் அவைதான் உண்மையான உருவங்கள். வெளியில் தெரியும் வெள்ளை வர்ண மனிதஉருவங்கள் வெறுங்கண்துடைப்பே!!! சிலருக்கடையில் இருக்கும் உறவுகள் வெறும் கண்துடைப்பே! மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுகொண்டால் உயிர்கூட மிஞ்சாது அப்படியென்றால் உரிமை எப்படி மிஞ்சும்…?

    September 21

    இலங்கை அதிபரின் அரசியல்த் திட்டம், தமிழர்களை பிரித்து இலங்கையை ஆட்சி செய்வதே

    “இலங்கை அதிபரின் அரசியல்த் திட்டம், தமிழர்களை பிரித்து இலங்கையை ஆட்சி செய்வதே. அதாவது, கிழக்கு மாகானத்தை அதிகாரமற்ற முதலமைச்சர் பிள்ளையான் கையில் ஒருபுறமும், வடக்கை அமைச்சர் டக்ளசிடம் மறுபுறமும், கருணாவை மத்தியில் தனக்கருகே, தீவிரவாதத்தில் இருந்தவருக்கும் தலைமைப் பதவி கொடுத்துவைத்து, மறுவாழ்வு அளித்துக் கௌரவிக்கின்றேன் என்று மறுபுறமும், கூட்டணியினரை தமிழ் மக்களின் பெரும் பிரதிநிதி என்று அவர்களிடம் பேச்சுக்களை நடாத்தி நடுப்பகுதியிலும் இன்னொரு புறம், என்று பிரித்தாள முயற்சிக்கின்றார். இதற்கிடையில் இருக்கும் சிறிய தமிழ்க்கட்சிகளையும் அவ்வப்போது கண்காணித்து அவர்களையும் உசுப்பேத்துகின்றார். தமிழர்கள் பலம் அதிகரித்தால் அவர்கள் நாளை இலங்கையை ஆழக்கூடிய வாய்ப்புண்டென்று அவர் நன்கு அறிவார், இல்லை மிகப்பெரிய எதிர்க்கட்சியாகும் வாய்ப்புண்டு என்பது திண்ணம். இதற்கு இரண்டு வழிகளில் உற்றுநோக்கலாம். அதாவது, உன்று தமிழ் முஸ்லீம் மக்கள் மலையக மக்கள் போன்றோர் இணைந்தால், பலமுள்ள சிங்கள அரசியல் கட்சிகள் போல் பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான அங்கத்தவரைக்கொண்டிருக்கும். மற்றையது, சிங்கள கட்சிகள் பிரிந்து செயற்படுவது தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் இன்னொருபலமாகக்காணப்படுவது. 


    இலங்கை அரசில் தமிழர்களின் பலம் ஓங்கவேண்டும். இதன்மூலம் மட்டுமே தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும். கிழக்குமாகான முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பு மேலுமுள்ள தமிழ்க்கட்சிகள் முஸ்லீம் கட்சிகள் மலையகக்கட்சிகள் இணைந்து செயற்படவேண்டும். “உலகத் தமிழ்த் தேசிய ஒன்றியமாக” அக்கட்சி செயற்படவேண்டும். இதன்மூலம் தமிழர்களின் அரசியல் தந்திரம், இலங்கை அரசில் கால்பதிக்கவேண்டும். அதன்மூலம் மட்டுமே தமிழர்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்காக இலங்கை அடிப்படையாப்பில் கைவைக்கமுடியும் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.”
    இவ்வாறு பலவருடங்களாக எனது அடிப்படை ஆக்கங்களில் எழுதிவருவது வாசகர்களான உங்களுக்குத்தெரியும். இதனை தற்போது தமிழர் கூட்டமைப்பு நன்கு புரிந்து செயற்பட ஆரம்பித்துள்ளது. அதாவது, ஆரம்பத்தில் “மலருமா தமிழீழம்” என்ற நாலலூடாக தமிழர்களுக்கான பல வழிகளை எடுத்துரைத்ததினை புலத்திலிருந்து இயங்கும் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் கையாண்டமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அடுத்தகட்டமாக கூட்டமைப்பிற்கும், நாடுடந்த தமிழீழம் அமைக்கும் செயற்பாட்டிற்கும் வித்துட்ட வழிமுறைகளை ஆணித்தனமாகத்தெரிவித்த அந்த நூலில் தமிழர்களின் பலம் தொடர்பாகவும் பலவீனம் தொடர்பாகவும் திடமாக எழுதப்பட்டிருந்தது. இப்போது கூட்டமைப்பினர் முஸ்லீம் கட்சிகளை வால்பிடிப்பதில் இருந்து அத்திட்டத்தையும் கையான முனைகின்றனர். கையாள முனைவதுதொடர்பாக பெரிதாகப்பேச வரவில்லை அவர்கள் அதனைச்செய்யவேண்டும் என்பதற்காகவே பலதடவைகள் இணையத்தின்மூலமாகவும் வெளியிட்டேன். ஆனால் முஸ்லீம் கட்சிகள் இப்படியொரு வினாவை கேட்டால் கூட்டணியினரின் பதில் என்ன? அதாவது
    எம்மை இணையும்கடி கேட்கின்றீர்கள், முதலில் தமிழர்களான உங்களிடம் இருக்கும் பிளவினை மறந்து இணையாத  நீங்கள், ஒற்றுமையாக நிம்மதியாக அரசில் அங்கம்வகிக்கும் எங்களுடன்  எப்படி தொடர்ந் செயற்படுவீர்கள் என்று நம்புவது?
    இதற்கு கூட்டமைப்பினர் மூகஇகுடைந்து நிலத்தில் விழச்செல்வார்கள். சாக்குப்போக்காகப்பதில் சொன்னாலும் இது உண்மையான வினாவே. தமிழர்களின் போராட்டத்தில், தாம் போராட்டம் இல்லாமலே தம்முடைய இனத்திற்கு விடிவினை ஏற்படுத்துகின்றவர்கள் முஸ்லீம் மக்ககே என்றும் பலதடவைகள் எழுதியுள்ளேன்.   


    விரைவில் முஸலீம் மக்களிடம் கிழக்குமாகானம் பறிபோகும்… தமிழர்களின் போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு நிரந்தர தாய்நிலத்தை கொடுத்தது என்றால் அது மிகையில்லை. தமிழர்கள் தந்தை செல்வா சொன்னதுபோல் யாராலும் காக்கமுடியாத இனம்… காரணம் தமிழர்களுக்குப்பிரச்சனை சிங்கள அதிகாரிகளோ அல்லது இலங்கைச்சட்டமோ அல்லது வெளிநாடுகளோ அல்ல … அவர்களுடைய சிக்கல் அவர்களே!!!


    அரசில் அங்கம்வகித்தால் மட்டும் அரசியல்வாதிகளாகிவிடலாமா? புலிகள் ஆயதத்தால் போராடிய முறையினை தற்போது, கூட்டணியினர் அரசியலால் போராட முனைகின்றனரேயொழிய,  தமிழர்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் விடுதலைக்காகவும், மற்றும் இலங்கை அரசிடம் இருந்து தமிழர்களுக்குக்கிடைக்க வேண்டிய உரிமைகளுக்குhகவும் இயங்கவில்லை என்பது திண்ணம். ஏதோ இப்போதுதான் புதிய இனமாக தமிழர்கள் தோன்றியது போலும், தமிழ்க்கட்சிகள் இப்போதுதான் ஆரம்பித்தவை போன்றும் செயற்படுகின்றன…

    இன்னொரு முக்கிய விடயத்திற்காகவே இவ்வாக்கம் எழுதப்படுகின்றது. அதாவது, முன்பே எனது ஆக்கங்களில் எழுதிய விடயமேஇது… தமிழ் உலகத்தின் பலபாகங்களில் இருக்கின்றது… பல அரசினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது… சிலநாடுகளில் அரச மொழியாகவும் காணப்படுகின்றது… ஆனால் ஏன் தமிழர்களின் சார்பில் உலகரீதியிலும், நாடுகள்ரீதியிலும் பேசப்படும்போது, தமிழ் மொழி பேசப்படுவதில்லை? ஐ.நா. சபையில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை?...  தமிழ் வெறும் பேச்சுமொழியாக இருக்கும்மட்டும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை… அது எப்போது ஒரு இனத்தின் மொழியாக அமைகின்றதோ அப்போது, அதற்குத் தனி இடம் கிடைத்தே ஆகும்.  நடிகர் கமலகாசன் சிறந்த நடிகராக இருந்தும் அவருக்கு ஆஸ்கார்விருது கிடைக்கவில்லை, இளையராஜ சிறந்த இசையமைப்பாளராக இருந்தும் அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை… ஆனால் ரகுமான் அவர்களுக்கு விருது கிடைத்ததென்றால் அவர் வேற்றுமொழியில் தன்னைப்பிரபல்யப் படடுத்தியதே! எப்போது தமிழ் பிறநாட்டுமக்களிடத்திலும் புகுத்தப்படுகின்றதோ அப்போது, அது அதிகமாக கண்காணிக்கப்படுகின்ற இனமாகக்காணப்படும். திருக்குறள் தமிழில் கற்றோரிடத்தில் மட்டுமே தங்கிநிற்கின்றது, ஆனால் அது பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் அதன்மூலம் தமிழர்கள் வெளியில் வரவில்லை. காரணம் தமிழர்களுக்கு பிறநாட்டவர் கொடுக்கின்ற மதிப்பும் மரியாதையினையும் தமிழர்கள் கொடுப்பதில்லை. பிறநாட்டு மொழியில் இருப்பதனை தமிழில் மொழிபெயர்த்து பேர்வாங்க முன்வரும் அளவிற்கு, தமிழர்களின் படைப்பைப்பேசிப் பேர்வாங்க முன்வருவதில்லை…  தொடரும் (A)

    ஒரு பெண் ... அவளை தீவிரவாதியாக்கி, சிறைக்கு அனுப்பியது அவளின் தீவிரவாதச்செய்கை

    ஒரு பெண் அவளைக்குற்றவாளியாக்கியது ஒரு செயல் … இன்று அவள் மிகச்சிறப்பாக தனது கற்கையினை முடித்த பெண் என்ற சிறப்பைப் பெற்றாள். அவளை தீவிரவாதியாக்கி, சிறைக்கு அனுப்பியது அவளின் தீவிரவாதச்செய்கை அவள்வேறுயாருமல்ல முன்னாள் இந்தியப்பிரதமரை படுகொலை செய்யும்போது குற்றறவாளியாகக் கைது செய்யப்பட்டவர். இத்தகைய எத்தனைபேரை அறிவுடையோரை தமிழின வித்தினை இழந்துள்ளோம்… இரத்தம்சிந்தாமல் சமாதானம் இல்லை என்று பலஇடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறு என்பதனை எம்மால் நிரூபிக்கமுடியும் என்பதனை யாரும் நம்பலவில்லை. அதற்கான முயற்சியினையும் மேற்கொள்ள முன்வரவில்லை. இரத்தம் சிந்தவேண்டும் அது தனதாக இருக்கக்கூடாது என்பதில் தலைமை இருந்தால் எப்படி சமாதானம் கிடைக்கும்.  பலபோராட்டத்தை நடாத்தியபோதிலும் அமைதியே ஏற்றுக்கொள்ளக்கூடிய வெற்றியைக்கொடுக்கும். அமைதியால் இந்தியாவிநற்குச் சமாதானம் கிடைத்தபோது, இந்தியனாலேயே காந்தி அழிக்கப்படவில்லையா?உரிமைக்காகக்குரல்கொடுத்த தந்தை செல்வாவை கொலை செய்தது யார்?... தமிழர்களின் போராட்டத்தில் இழக்கப்பட்ட புத்திஜீவிகளின் எண்ணிக்கை வரையறுக்க முடியாதன… இழந்த உயிர்கள் மீட்கமுடியாதவை… இதில் கேவலம் என்னவென்றால் தமிழ் மொழி தமிழனிடத்தில் புலத்திலிருந்து தத்தளிப்பது. தமிழன் அமைதிக்காகப் போராடுகின்றான்… தமிழ்த்தெரிந்தோர் தமிழர்களுக்காக குரல்கொடுக்கின்றனராம்…!!!
    September 16

    பூனை இல்லாட்டி எலிக்குக்கொண்டாட்டம் அப்பு....

    சில இணையங்கள் இத்தகைய தகவல்களை வெளியிடுகின்றன. இவை எவ்வளவுதூரம் உண்மையென்று புரியவில்லை. இதற்கு தக்கபதிலை இங்கு குறிப்பிட்ட அமைப்பு வழங்கியே ஆகவேண்டுமஇ அத்துடன் தமிழ் மற்றைய அமைப்புக்களும் இலங்கை அரசும் இதற்குத் தக்கநடவடிக்கைகளை எடுத்தாகவேண்டும்.
     
    "வவுனியா செட்டிகுளம் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுடன் மக்களாக பதுங்கியிருந்த புலிகளை காப்பாற்றிய ஈரோஸ் இயக்கத்தினர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கியிருந்த புலிகளை 5 இலட்சம்இ 10 இலட்சம், மூன்று இலட்சம் என்று புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு முகாம்களில் பதுங்கியுள்ள புலிகளை காப்பாற்றும் பணியில் ஈரோஸ் இயக்கத்தினர் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வருவது இன்று அம்பலத்திற்கு வந்துள்ளது.இன்றையதினம் வவுனியா குருமண்காடு பகுதியில் அமைந்துள்ள ஈரோஸ் காரியாலயத்தில் வைத்து இடைத்தங்கல் முகாமில் இருந்து கடத்திவரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து மேலும் நால்வர் செட்டிகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குருமண்காடு காரியாலயத்தின் ஈரோஸ் தலைவர் தற்போது தலைமறைவாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவர்கள் ஒருவரை வெளியே கொண்டுவருவதற்காக 3 இலட்சம் ரூபான என்ற வீதத்தில் இரண்டு பேரிடம் 6 இலட்சம் ரூபாவை ஈரோஸ் இயக்கம் பெற்றுள்ளது. வவுனியாவில் இடம்பெறும் களவு, கொள்ளை, கப்பம், வரி வசூலிப்பு என்று பல்வேறு விதத்தில் தமிழ்மக்களை சுறண்டி பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈரோஸ் இயக்கம் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
    ஈரோஸ் இயக்கத்தினரின் துணையுடனேயே புலிகளின் பாப்பாஇ தீபன்இ திருநாவுக்கரசு போன்ற புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் வெளியே தப்பியோடியுள்ளதாகவும்இ இதனை தொடர்ந்து இடைத்தங்கல் முகாம் மக்கள் ஈரோஸ் இயக்கத்தினர் மீது விசனமடைந்துள்ளதுடன்இ எதுவுமே குற்றம் செய்யாத நாங்கள் முகாம்களில் வாட வன்னியில் எம்மை துண்புறுத்தியும், எமது பிள்ளைகளை பலிக்கடாவாக்கியும் குற்றவாளிகளாக்கியும் வந்த புலிகளை தண்டனையில் இருந்து பாதுகாத்து வரும் ஈரோஸ் இயக்கத்தினர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதுடன் இவ்வாறானவர்கள் இனிமேல் இந்த பக்கம் வரட்டுக்கும் என்ற ஆதங்கத்தில் இருக்கின்றனர்.

    முகாம்களில் இருந்த புலிகளை காப்பாற்றி பணம் சேகரிப்பது இதுவரை யார் என்று தெரியாமல் பலர் மீதும் சந்தேகம் கொண்ட எமக்கு இன்றுதான் உண்மை தெரிந்துள்ளது. இனிமேல் இந்த முகாமுக்குள் ஈரோஸ் இயக்கத்தினர் வரட்டும் நாம் அவற்றை கவனித்து கொள்கின்றோம் என்று, புலிகளிடம் பிள்ளையை பறிகொடுத்த பெற்றோர் ஆதங்கப்பட்டதை காணமுடிந்தது. இடைத்தங்கல் முகாமில் இருந்து 10,000க்கு மேற்பட்டோர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கணிசமானவர்கள் புலிகளின் முக்கியஸ்தர்கள் ஆவர், இவர்களை இந்த ஈரோஸ் இயக்கத்தினரே கடத்திச்சென்று வெளியேற்றி பணம் சம்பாதித்துள்ளது அம்பலமாகியுள்ளது."
    நன்றி இதுதொடர்பாக வெளியிட்ட இணையங்கள்.
    September 14

    இறுதிக்கட்டப்போரில் நடந்தது என்ன? இனி நடக்கவேண்டியவைதான் என்ன

    இறுதிக்கட்டப்போரில் நடந்தது என்ன? இனி நடக்கவேண்டியவைதான் என்ன
     
    உங்களுக்கு நன்றாய்த்தெரியும் புலிகளின் ஆயுதப்பலமும்? அவர்களின் தலைமைக்கு இருந்த கட்டுப்பாடும்? பிடிவாதமும். தமக்கு இழப்புஏற்படும்போது? தாம் கைது செய்யப்படும்போது? அவர்கள் சைனட் அருந்திவிடுவார்கள். அல்லது இருக்கும் ஆயுதங்களால் தம்மை அழித்தும் எதிரியை பாதிப்புக்குள்ளும் ஆக்கிவிடுவார்கள். அப்படியிருக்க புலிகளின் பலர் எப்படி அரசிடம் பிடிபட்டனர்டூ அவழகளின் சைனட் சேயலிடிந்துவிட்டதா அல்லது சயனட்டுக்குப்பதிலாக வேறு எதனையும் இத்தனைகாலமும் வைத்திருந்தனரா?
    புலிகளின் தலைவரி தலைமைக்கு பங்கம் விளையிக்க பிரபாகரன் ஒருபோதும் சம்மதித்திருக்க மாட்டார். இது இப்படி இருக்க இன்றுவரை பிரபாகரனின் மரணம்தொடர்பாக இலங்கை அரசுகாட்டிவரும் இரகசியத்தன்மை பிரபாகரனின் சாவில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அத்தோடு? முற்றுமுழுதாக புலிகளின் கட்டுப்பாட்டை பிடிக்கும்போது? அனைத்துத் தடைகளையும் தாண்டியே இராணுவம் கால்பதித்திருக்கும் எனவே? அப்போதே அரைவாசிக்கும்மேல் மிதிவெடிகள் மற்றும் புதைத்துள்ள பல விடயங்களை அறிந்திருப்பார்கள்.
    எனவே இங்கும் சந்தேகத்தைக் கிழப்புகின்றது. புலிகளிடம் இருந்த நிலக்கீழ் அறைகளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அவைபோன்ற பல இன்னும் இராணுவத்தின் கைகளில் அகப்படாமல் இருக்கின்றது. அதனைக் காணும் வரையில் பிரபாகரணின் மரணம் இரகசியமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    எராளமான கேள்விகள் காணப்பட்டாலும்? புலிகளின் உறுப்பினர்களை கைதுசெய்தது எப்படிட? ஏன் அவர்கள் சைனட்அருந்தவில்லை? இல்லை சைனட் என்ன செயலிழந்து விட்டதா? இல்லை புலிகளின் உறுப்பினர் முன்பே தப்பியோடியதால் மிஞ்சிய மக்களை சில தலைவர்கள் புலிகளாக ஆயுதங்களை கொடுத்து போராட வைத்தனரா…
    அதற்கும்மேலாக இராணுவத்தினர் நச்சுவாயுவினை பயன்படுத்தி புலிகளை சுயநினைவு இழக்கச்செய்து கைதுசெய்தனரா…
    இப்படி சிந்திக்கும்போது இறுதிக்கட்டத்தில் இராணுவம் போராளிகளை மயக்கக்கூடிய வாயுவைப்பயன்படுத்தி அவர்களை சுயநினைவை திடீரென அகற்றியிருக்க வேண்டும். இதனால்மட்டுமே அவர்களை சிறைப்படுத்த அவர்களால் முடிந்திருக்கிறது.
    இல்லாவிட்டால் அவர்களை பிணமாகவே எடுத்திருப்பார்கள். எப்படி உயிருடன் பிடித்தார்கள்ளா? இதன் காரணத்தால்தான் போர்நடந்த இடத்திற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. போர் முடிந்த பிறகுகூட பலகாரணங்களை காட்டி அங்கு செல்வதனை அரசு தடுத்ததற்குக்காரணம்? வாயுக்களின் செயலிழப்பிற்காகக் காத்திருக்கின்றமையே என்று தெளிவாகின்றது. மட்டுமல்லாது? தப்பி ஆங்காங்கே மறைந்து மிஞ்சியிருக்கும் புலி உறுப்பினர்கள் உணவின்றி வியாதிக்கு மருந்தின்றி தாமாகவே இறக்க நேரிடும் வரையில் காத்திருக்கின்றனர் என்றுகூட எண்ணத்தோன்றுகின்றது.
    புலிகளின் தலைவர்? ஏற்கனவே "அருகன்" எழுதியதுபோல் நிலக்கீழ் அறையில் பிரபாகரனாலும்? சில புலித் தலைவர்களாலும் எத்தனைவருடம் வாழமுடியும்? எப்படியும் இருக்கும் தற்காப்புப் பொருட்கள் முடிவடைந்து வெளியில் வரவேண்டும் அல்லது தாமாகவே இறக்கவேண்டும்.   
    அரசின் பக்கம் பார்த்தால்? முப்பது வருட கட்டுப்பாட்டை சிலமாதங்களுக்குள் முடித்த அரசாங்கத்தால்? தமது தனிக்கட்டுப்பாட்டில் சிலநாட்களில் ஏன் அப்பிரதேசங்களை புனரமைப்புச் செய்யமுடியவில்லை என்ற கேள்வி எழாமலில்லை.
    பிரபாகரன் தொடர்பாக மட்டுமன்றி புலிகளின் சொத்துதொடர்பாகவும் வெளிவருகின்ற தகவலே? புலத்தில் வாழும் புலிகளின் ஆதரவாளர்களை செயற்பட வைத்துக் கொண்டிருக்கின்றது. என்றால் அது மிகையில்லை. பிரபாகரனின் மரணந்தொடர்பாக, அரசு இறுதி தகவல்களை உரியமுறையில் வழங்கினால் மட்டுமே,  புலத்தில் புலிகளின் செயற்பாட்டில் பாரிய மாறுதல்கள் ஏற்பட்டுவிடும் வாய்ப்புண்டு.
    மேலும் புலத்தில் இலங்கை அரசின் செயற்பாட்டிற்கு எதிராகக் கூச்சல் போடுவோர்கள்? தமிழர்களின் பின்னடைவுகளுக்குக் கைகோடுப்பதிலும்பார்க்க? முகாம்களில் இருப்பவர்களை வெளியில் விடவேண்டும் என்று கோருவதற்கும் காரணமில்லாமலில்லை. புலிகளில் ஏராளம்பேர் கைதாகியுள்ள நிலையில் அவர்களின் கையிலே தலைவரின் மரணந்தொடர்பாகவும், இறுதிக்கட்டத்தில் நடந்தஉண்மைகள் தொடர்பாகவும் அறிய கூடியதாக மட்டுமே இருப்பதால் அக்கறை அவர்கள்பால் அதிகமாகக் காணப்படுகின்றது. இதன்காரணமே அரசும் அவர்களை தடுத்துவைத்திருக்கின்றது என்பதும் உண்மையே!
    புலிகள் தம்மைத்திடப்படுத்தும் அளவிற்கு மக்களுக்கு உரிமைகளைக் கொடுத்தார்களா என்றால் அது வினாவாகக் காணப்படுகின்றது. 
    பிரபாகரனின் திட்டம் இப்போதும் தோல்வியடையவில்லை. போர் முறைதோல்வியடையும் பட்சத்தில் அரசியல்முறையினைப் பயன்படுத்தவே அம்மானை இவ்வழிக்கக்கு அனுப்பிவைத்தார் என்றே எண்ணர்தோறுகின்றது. இதனை அரசிற்கு நேரடியாகத்தெரிவிக்க முடியாது. அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் தற்போது உள்ள நிலைக்கு அம்மான் வந்திருக்கவே முடியாது. உலகத்தின் பார்வை புலிகளிடத்தில் பதிந்ததை நன்கு அறிந்த பிரபாகரன் தனக்கு அடுத்ததாக நிலையான உரிமையினைப் பெற்றுக்கொடுப்பதற்கான முழுத்தகுதியும் அம்மானுக்கு இருப்பது கண்மே அவரை இச்செயற்பாட்டிற்கு நியமித்தார்.
    மேதகு  அம்மான் அவர்களின் அடிகள் பலப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழர்கள் அவரின் பாதைகளை நன்கு புரியத் தொடங்கிவிட்டார்கள். இன்று அரச கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் தமக்கு வேண்டிய அனைத்து நலன்களையும் படிப்படியாகப் பெற்றுக் கொள்வதற்கு அம்மானின் சிறப்புப்பாதை வடிp சமைத்துத்தருகின்றது. கடந்த நாட்களில் தமிழர்கள் அபிவிருத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் எமது தமிழர்களின் நல்வழியை தொளிவுபடுத்தியிருக்கின்றது.
    மக்கள் தமக்குஏற்பட்ட கசப்புகளை மறப்பதற்கு இவ்வாறான நிகழ்வுகள் அவசியமாகின்றது. இதே நிலை அனைத்துத்தமிழர்களிடத்திலும் சென்று சேரவேண்டும் என்பதே அம்மான் அவர்களின் குறிக்கோளாக இருக்கின்றது nபுர்லமு;. அதற்காகவே அவருடன் இணைந்து சேவைகளை மேற்கொண்டுவருகின்றனர் மற்றைய உறுப்பினர்கள். எனவே அம்மானுடன் பிளவுகளை ஏற்படுத்த எத்தணிப்போர் தமது தவறான போக்கினை விடுத்து ஒருங்கிணைந்து செயற்படமுன்வரவேண்டும்.
    தமிழர்களுக்கொரு இளைய தலைவர் தேவையாக இருக்கின்றது. அது அனுபவமும், அரசியலும், ஆதரவும், பலமும், இருப்பதோடு குறிப்பாக மக்கள்நலன் மட்டுமே முன்நிறுத்தக்கூடிய மனிதனாக இருக்கவேண்டும். அது அம்மானுக்கு நிறையவே இருக்கிறது என்பதனை அவர் உறுதிப்படுத்தி வருகின்றார். மென்மேலும் அவரின் பாதைகள் செம்மைப்பட தமிழர்கள் மேலும் அவருக்குப் பக்கதுணையாக இருக்கவேண்டும்.
    அவரின் அடிகளே, தண்டனைக்குரியவர்களாகக் கருதப்பட்டவர்களுக்கும் பொதுமன்னிப்பு என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டு மீண்டும் சமுதாயத்தில் அடியெடுக்க அவரின் பங்களிப்பு மிக அதிகமாகக்காணப்படுகின்றது… அவரின் பாதை தவறும் சந்தர்ப்பத்தில் அவருக்கெதிராகக்குரல்கொடுக்க கஸ்டம் தமிழர்களுக்கு ஏற்படப்போவதில்லை... இல்லையா????
     
    September 12

    தமிழர்களுக்கான புதிய மறுமலர்ச்சியை நோக்கிய பாதையில்

    தமிழர்களுக்கான புதிய மறுமலர்ச்சியை நோக்கிய பாதையில் எமது அற்புதமான அடிகள். இத்தளமானது கடந்த சில மணித்தியாலங்களாக பதிவேற்றம் செய்வதில் தாமதங்கள் ஏற்பட்டமைக்கு, இத்தாலியில் புதிதாக வீசா கொடுப்பதில் அதிக அக்கறை செலுத்தி வருவதால் எமது பார்வை அதிகமாக அதில் திணிக்கப்பட்டுள்ளமை காரணம் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். எனினும் தங்கள் வினாக்களுக்கான பதில்களை காலதாமதமின்றி எமது ஆசிரியர் குழாம் அனுப்பிவைப்பார்கள் அதில் எந்தவித தாமதமும் ஏற்படாது.
    September 08

    புலிகளை தோற்கடிக்க வழிகாட்டிய முரளிதரன் தேசிய வீரராக கருதப்பட வேண்டும்

    தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வழிகாட்டிய அமைச்சர் முரளிதரன் தேசிய வீரராக கருதப்படு வேண்டும் என ஆளும் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
    முரளிதரனின் வழிகாட்டுதல்களும், அறிவுரைகளும் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெறாவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கப்பதில் சிக்கல் நிலை உருவாகியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
     
    ஹபராதுவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
     
    வரலாற்று சிறப்பு மிக்க இராணுவ வெற்றிகளை ஈட்டுவதற்கு முரளிதரன் வழங்கிய பங்களிப்பு அளப்பரியதென அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    September 01

    ஏய் விஜெய்! அரசியலில் ஆரம்பமே அதிரடியென்றால், பின்னால் ஆப்புவிழாமல் இருந்தால் சரி...!!!

    ஈழத் தமிழர்களை ஏமாற்ற நினைக்கும் நடிகர் விஜய்
    பிரசுரித்த திகதி : 29 Aug 2009

    சமீபத்தில் தனது ரசிகர் மன்றங்களை ஒரு அரசியல் கட்சி அலுவலகங்கள் செயல்படுவதுபோல மாற்றியமைத்த நடிகர் விஜய், அரசியலில் இறங்கக் கூடும் என இந்தியப் பத்திரிகைகள் எதிர்வு கூறியிருந்தன. அதற்கமைவாக அவர் அரசியலில் களமிறங்கத் திட்டமிட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் அவர் டெல்லிசென்று ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவிய மத்திய அரசான காங்கிரஸ் கட்சியுடன் இவர் கூட்டுச்சேர நினைப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், ஆத்திரமடையச் செய்துள்ளது.

    இந்தியாவில் தயாராகும் பல தமிழ்ப் படங்கள் ஜரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஆபிரிக்க நாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்களால் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பணம், மேலதிகமாகச் சம்பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக நடிகர் விஜயின் சம்பளமும் கணிசமான அளவு உயர்த்தப்பட்டது. தற்போது தமிழ் நாட்டில் 10 கோடிக்கு எடுக்கப்படும் படத்தை தயாரிப்பாளர்கள் 20 கோடி கூடச்  செலவழித்து எடுக்கத் தயாராக உள்ளனர், காரணம் புலம்பெயர் தமிழர்கள் மூலம் பணம் கிடைக்கும் என்ற காரணம்.

    இப்படி இளிச்சவாய் கூட்டமாக தமிழன் இருக்க, தமிழன் தலையிலேயே தமிழன் முளகாய் அரைக்கு நிலைதோன்றியுள்ளது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கலாம், தேர்தலில் நிற்கலாம், முதலமைச்சர் கூட ஆகலாம். ஆனால் அதற்காக தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் காலடியில் ஏன் விழவேண்டும் ? இவருக்கு என்ன வேறு எந்தக் கட்சியும் கிடைக்கவில்லையா ? ஈழ விடுதலையை ஆதரிக்கும் பல கட்சிகள் ஏலவே தமிழ் நாட்டில் பல இருக்கின்றன, அவற்றுடன் இணையாவிட்டாலும் பரவாயில்லை தமிழனைக் காட்டிக்கொடுத்த சோணியாவுடன் ஏன் கூட்டுச் சேரவேண்டும்.

    மானமுள்ள எந்தத் தமிழனும் இவரை மன்னிக்கமாட்டான். குறிப்பாக வேதனையில் மிதந்துகொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்கள் இவரை மன்னிக்கவே மாட்டார்கள்.
    நடிகர் விஜய் நடித்து வெளிவரும் படங்களை புலம்பெயர் தமிழர்களும், ஈழ விடுதலை உணர்வாளர்களும் உடனே புறக்கணிக்கவேண்டும். தமிழராக இருந்து தமிழினத்திற்கு துரோகம் செய்வேரை வரலாறு மன்னிக்காது.

    இது குறித்து இதுவரை நடிகர் விஜய் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விழக்கம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.


    தொடக்கப் பக்கம் செல்ல Nanri Athirvu
    August 31

    நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி உருத்திரகுமார் அவர்கள் விளக்கமளித்துள்ளார்

    நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய கேள்வி பதில்

     

     பிரசுரித்த திகதி : 31 Aug 2009

     

     

    நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக சட்டவல்லுனர் உருத்திரகுமார் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதன் முழு வடிவமும் PDF வடிவில்

    இங்கே அழுத்தவும்  Naukadantha thamileela Arasu.pdf

    August 27

    தமிழர்களுக்கு தனியொரு தேசத்தைக் கொடுப்பதிலும் வேறு எவ்வழியினையும் மதிப்பின் மகிந்த அவர்கள் வழங்கமுடியாது.

         இங்கு காட்டப்பட்டுள்ள வீடியோவானது பிரித்தானியாவில் வெளியாகும் தொலைக்காட்சியில் (பிரசுரித்த திகதி : 25 Aug 2009) காட்டப்பட்டுள்ளது. இதனை மனபலம் இல்லாதவர்களும், கற்பிணி, மற்றும் பலவீனமுள்ளவர்களும் பார்ப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதில் இருக்கும் தகவல்களுக்கான பதிலினை இலங்கை அரசு வெளியிட்டே ஆகவேண்டும். இது உண்மையாயில் இதற்கு பதிலினை தருவதாகின் தமிழீழப் போராட்டத்திற்கான முடிவினை தமிழர்களுக்கு தனியொரு தேசத்தைக் கொடுப்பதிலும் வேறு எவ்வழியினையும் மதிப்பின் மகிந்த அவர்கள் வழங்கமுடியாது.

    இலங்கையின் தனி உரிமையுடைய ஆரம்ப இனமான தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் தேசத்தை கொடுக்கவேண்டும். எத்தகைய இராணுவக் காரணத்தைக்காட்டியும் தடைபோடுவது தகாதது. இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசு எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் சமஉரிமைஉண்டு.

    தகாதமுறையில் இன அழிப்பினை கொடுராமாக மனிதநேயத்தை தாக்கியதற்கு இலங்கை அரசு தீர்வை முன்வைத்தே ஆகவேண்டும்.

    புலிகளை அழிப்பது என்பது ஒருவகை, அவர்கள் தமிழர்களின் உரிமைக்காகப்போராடியவர்கள் அவர்களின் போராட்ட முறை ஜனநாயக இறைமையுடைய அரசிற்குப் தவறாகஇருக்கலாம் அதனைச்சீர்செய்யவேண்டியது அரசின் கடன். ஆனால் அதனை அரசு கையாளும் முறை இனி இவ்வாறான தவறான பாதைக்கு மக்களை கொண்டுசெல்லாததாக அமையவேண்டும். அவர்களை தகாதமுறையில் தீர்ப்புவழங்கியமை இனப்படுகொலைக்கான காரணமாக மாறுகின்றது எனவே, இலங்கை அரசு இதற்கான பதிலை யாப்புமாற்றத்தின் மூலம் தமிழர்களுக்கு தனி உரிமையினை வழங்கியாகவேண்டும். 

    இப்போது இலங்கையில் ஜனநாயகஆட்சி நடைபெறுகின்றமையால் தமிழர்களுக்கான முடிவினைத் தமிழர்களிடம் சர்வதேச வாக்கெடுப்பின்மூலம் அவர்களின் முடிவினை அறியவேண்டும். அவர்களின் முடிவின்பால் இதற்குத்தீர்வு காணப்படல் வேண்டும். 

    இலங்கைத்தாயின் தேசப்பற்றும் தமிழ் இனப்பற்றுமுடைய தமிழன்- அருகன்.

    August 23

    தமிழர்களின் வினாவும் உருத்திர குமாரின் செயற்குழு அறிக்கையும்

    LTTE8 புலிகளின் இரண்டாம் புதிய தலைவர்- திரு  நெடியவன் அவர்களுக்கு … தங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ செயற்கு ழுவிற்கும் தொடர்பென்ன???  மேலும் திரு உருத்திரகுமார் அவர்களின் அறிக்கைக்காக எனது வினாவினை சர்வதேச ரீதியில் இருந்து வினாவுகின்றேன்

    அறிக்கை - நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான முன்னேற்பாட்டுச் செயற்குழு: வி. உருத்திரகுமாரன்
    [ஜ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2009, 01:15.23 PM GMT +1005:30 ]

    மானிடம் பேணும் சட்ட நெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்றுமுழுதாக மீறிஇ கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாய பூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது.

    தமிழர்களின் வினா - சட்டத்திற்குப்புறம்பாக விமானங்கள், கப்பல்கள், கனரக ஆயுதங்களை வைத்திருந்ததும், சட்டத்திற்குப்புறம்பாக மக்களுக்குத் தண்டனை வழங்கியதும் நாட்டின் சொத்துக்களை நாசமாக்கியதும், நாட்டின்தலைவர்களை கொலை செய்ததும், மற்றும் வெளிப்படையாக தங்களுக்கான யாப்பினை (உட்கட்டுமானம் வெளிக்கட்டுமானம்) ஜனநாயகரீதியில் மேற்கொள்ளாமை, நாட்டின் இறைமைக்கு மாறாக தூண்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டமை… இவைபோன்ற அனைத்தும் தங்கள் அமைப்பின் செயற்பாடே!!!  -

    அறிக்கை -  வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

    3806503398_535e3f525b_m தமிழர்களின் வினா -  தவறான கருத்து, முழுஉலகமுமே  தீவிரவாதத்தை ஒழித்த இலங்கை அரசு என்று பாராட்டுகின்றதோடு, தத்தம் நாட்டில் இருக்கும் போராட்ட அமைப்புக்களையும் முடிவுக்குக்கொண்டுவர கங்கணம் கட்டுவதற்கு தயாராகியுள்ளது… (22-08-2009ல் நைஜேரியாவில் போராட்ட அமைப்பு ஆயதங்களை கையளித்தமை குறிப்பிடத்தக்கது) மக்கள் அழிக்கப்பட்டது  உண்மையே! அம்மக்கள் அழிவிற்கு புலிகள் மக்களை கேடயமாகப்பயன்படுத்தியதன் காரணத்தாலே அவ்வழிவு ஏற்பட்டது என்று அனைத்து அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. அழிக்கப்பட்ட மக்கள் மக்களாகக்கருதப்படாமல் புலிகளாகவே கருதப்படுகின்றமை இன்னொரு வகை, அதாவது, இராணுவம் காலக்கேடுகொடுத்தும் மக்களை அரசகட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதிக்காததும் புலிகளின் தவறாக பல மக்கள்மத்தியிலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. கிட்லரிக் காலத்திற்கு கொண்டுசெல்ல விரும்புகின்றேன்… கிட்லர் போரினை நடாத்தும் போது போராளியாக நடாத்தவில்லை இறைமையுள்ள நாட்டின் பெயரிலே நடாத்தியதும் மேலும் உள்ளாட்டில்மட்டுமல்ல வெளிநாடுகளுடனும் போரின்மூலம் அழிவினை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல் புலிகளின் ஆதிக்கம் போராட்டஅமைப்பாக இல்லாது, அரசின் ஆதிக்கத்தில்   பங்காளராக இப்போர் ஏற்பட்டிருந்தால் இதன்பாதிப்பு உலக நாடுகளுக்குப் புரிந்திருக்கும். நீதியும் கிடைத்திருக்கும்.

    அறிக்கை - குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போராயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக்குண்டுகளினாலும் 30,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

    satha தமிழர்களின் வினா - எப்போது, சாதாரண ஆயுதங்களால் ஒரு போராட்ட அமைப்பை தோற்கடிக்க அரசால் முடியாது போகின்றபோது, ஒரு அரசு எவ்வழியால் அவ்வமைப்பை  ஒடுக்கமுடியுமோ அவ்வழியைப்பயன்படுத்தியாகும். உதாரணம் அமேரிக்கா ஜப்பான் மீது பிரயோகிக்கப்பட்ட அணுகுண்டுப்பிரயோகம். அது போன்று பல நாடுகளில் இவ்வாறான போக்குக் காணப்பட்டாலும், இது ஒன்றே உதாரணத்திற்குப் போதுமானது. இது நாட்டுடன் நாடுமோதும் போது நிகழ்ந்தவை. ஆனால் உள்நாட்டில் சட்டத்திற்குப்புறம்பாக ஆயுத நடவடிக்கையில், குழு ஒன்று ஈடுபட்டிருக்கும்போது, அரசிலும்பார்க்க பலத்த ஆயுதங்களை அப் போராட்ட அமைப்புக் கொண்டிருந்தால்?.... தன்னால் முடியாவிட்டால் மற்றைய அரசுகளுடன் இணைந்து அதனை எதிர்ப்பதற்கு அல்லது அழிப்பதற்கு இடமுண்டு. மற்றைய அரசுகளும் தம்முடைய எல்லை நலன்களைக்கருத்தில் கொண்டும் தனது இறைமைக்கு பங்கம் வரக்கூடும் என்ற ரீதியிலும் இவ்வாறான செயற்பாட்டிற்கு உதவ இடமுண்டு. பயங்கரவாத அழிப்பு என்று ஆரம்பித்தபின்னர் போரை இடைவெளிவிட்டு எதிரியை பலமடையச்செய்ய எந்த முட்டாள் இடங்கொடுப்பான்… விளையாட்டுத்தனமாக “அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும்” என்ற வார்த்தை சிரிப்பை ஏற்படுத்துகின்றது. 

    அறிக்கை - இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடு சார்ந்த நிறுவனங்களும்இ பன்னாட்டு அரச நிறுவனங்களும்இ செய்தியாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ் தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியற்சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாகவுள்ளது.

    nallur தமிழர்களின் வினா - நாம் நமக்குத் தேவையானவற்றை மட்டும் தூக்கிப்பிடித்துக்கொண்டு மற்றவைகளைக் கோட்டைவிடுகின்றோம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடுகின்றோம். கிழக்குமாகானத்தில் இராணுவ ஆட்சி என்று வெளியில் நீங்கள் சொல்லுவது பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது… அங்கு ஒரு முதல் அமைச்சர் இருக்கிறார், அமைச்சின் விஸ்தரிப்புக்கள் இடம்பெறுகின்றது. மக்கள் மகிழ்ச்சியாக விழாக்களில் பங்குபெறுகின்றனர் இனமொழிவேறுபாடின்றி அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன… முன்புபோல் அரசியல் படுகொலைகள் இல்லை, இனங்களுக்குள் பிளவுகள் இல்லை, மக்கள் தமது தேவைகளை அமைச்சின் மூலம் பெற்றுக் கொள்கின்றனர். மேலும் 20ஆயிரத்திற்கும் மேல் புலிகள் கைதாக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது, இதற்கிடையில் வன்னடைப்பு என்றபதம் வண்செயல் செய்தவர்களை மென்சிறையில் வைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற அச்சம் பாதுகாப்புக்கருதி வாராமல்இல்லை… புலத்தில் வீதிப்போராட்டங்களில் இறங்கிய தமிழர்களுக்கே காவலதிகாரிகள் தடியடி மேற்கொண்டனர்  மட்டுமல்லாது, மறியலிலும் வைத்தனர் என்றால், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளை இனங்காணும்நடவடிக்கையில் ஒரு அரசு எத்தகைய செயற்பாட்டை மேற்கொள்ளும்???   நிரந்தரமாக ஜனநாயகத்திற்குத்திரும்பும் வரை அதில் தெளிவுதெரியும்வரை அரசு இரணுவ ஆக்கிரமிப்பை விலக்காது என்பது வரலாறு காட்டிய பாடம். ஜேர்மனில் அமேரிக்க இராணுவம் 2ம் உலக யுத்தத்தின் பின்னும் அங்கு தனது கண்காணிப்பைச் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அமேரிக்க, இத்தாலிய, பிரித்தானிய இராணுவம் பலநாடுகளில் தமது ஆதிக்கத்தைச் செலுத்துகின்றமை தெரிந்தவிடயமே!!!

    அறிக்கை - ஸ்ரீலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்த நிகழ்வாயுள்ளது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டுவருகின்றது.
    இலங்கைத தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாய பூர்வமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமைவெளியும் அழிந்துபோயுள்ளது.

    mafia4 தமிழர்களின் வினா - இலங்கையில் தென்பகுதியில் பல சிங்கள அரச அதிகாரிகள் தற்போது சிறைப்படுத்தப் பட்டுள்ளார்கள், இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், காரணம் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு வழங்கியமைக்காக என்றால் சந்தேகப்படக்கூடிய தமிழர்களை எப்படி நம்புவார்கள்???    கொலனாவ குண்டுவெடிப்பு எங்கு நடந்தது, விமானநிலய குண்டுவெடிப்பு எங்குநடந்தது, அரச தலைவர்களின் அரசியல் படுகொலைகள் எங்குநடந்தது… இதற்கு சிங்களவர்களா அடிப்படைக்காரணம்??? சிங்களவர்களும் காரணமாக அத்திவாரமிட்டவர்கள் யார்??? இப்படியிருக்க நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்க எப்படி இறைமை பொறுத்துப் போகும். உரிமைகளைக் கேட்பது நியாயமானது, அதற்கு அரசில் அங்கம்வகிக்கும் தமிழ் அரசியல்வாதிகளைப்பலப்படுத்தி சட்டத்தின்மூலம் ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்ளவேண்டும்.தமிழர்களின் அழிவில் அதிகரிக்கும் முஸ்லீம் இனத்தவர் இலகுவாக தமது தேவைகளை எப்படி பூர்த்திசெய்கின்றனர்… மலையகத்தமிழர்கள் தங்கள் அரசியல் பலத்தை அதிகரிக்கவில்லையா???...

    அறிக்கை - மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிராபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். திரு யோசப் பரராசசிங்கம் (2005), திரு நடராசா ரவிராஜ் (2006), திரு க. ந. சிவநேசன் (2008) ஆகிய தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர் கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

    தமிழர்களின் வினா - அரசியல் படுகொலைகளுக்குக் காரணம் யார்??? துரையப்பாவின் படுகொலையில் ஆரம்பித்ததே இந்த கொலைகள்… இப்போதும் ஜனாதிபதிக்கான அரசியல் படுகொலைகளுக்கு புலிகளால் திட்டமிடப்பட்டனர்  என்று கைதுகள், போர் முடிவின்போது நடந்ததை மறக்கமுடியாது…   

    அறிக்கை - இவை தவிர இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புஇ தேர்தல்; தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும்இ புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமைஇ மற்றும் தொடர்ந்து போரினால் பாரிய அளவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எண்ணுக்கணக்கில் குறுகச் செய்துள்ளது. இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கியுள்ளது.

    இந்நிலையில் ஸ்ரீலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமானஇ பயன்தருவகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை. இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமேயில்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

    Paralumanram SRL தமிழர்களின் வினா - ஆரம்பத்தில் இருந்தே தேர்தலை புறக்கணித்த புலிகள் மக்களையும் அதில் பங்குபெறுவதை தடுத்து வந்தனர் என்ற குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை, மேலும் இலங்கை அரசில் தமிழர்கள் இல்லையென்றால் தங்களின் விவாதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே! ஆனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்… அமைச்சர்கள் இருக்கின்றனர்… மற்றும் அனைத்து அதிகாரிகளும் இருக்கின்றனர். தற்போது நடந்த தேர்தல் ஜனநாயகத்தை பிரதிபலித்துள்ளது. இப்படியிருக்க தமிழ் அரசியல் கட்சிகளை அணுகாது தான்தோன்றித்தனமாக முன்புபோலவே சர்வாதிகாரப்போக்கில் முடிவுகளை எடுத்து,  மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரச அங்கத்தினருக்கு மதிப்பளிக்காமை மக்களையே அவமதிப்பதாகக் கருதமுடிகின்றது.

    அறிக்கை - ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழீழத்தவர்களும் தற்பொழுதிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Pசழஎளைழையெட வுசயளெயெவழையெட புழஎநசnஅநவெ ழக வுயஅடை நுநடயஅ) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான மிகமுக்கிய பணியெனக் கருதுகின்றார்கள்.

    தமிழர்களின் வினா - அப்படியென்றால் ஏற்கனவே தமிழீழ மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரச தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ் அமைச்சர்களையும், முதலமைச்சரையும் என்ன செய்வது? தமிழர்களின் வாக்குரிமைக்கு விடையென்ன? அவர்களால் தெரியப்பட்டவர்கள் என்ன செய்வது,? நாடுகடந்த தமிழீழத்திற்காக ஏன் சர்வதேச ரீதியில் தமிழர்களிடம் ஜனநாயக ரீதியில் வாக்கெடுப்பினை நடாத்தி இத்திட்டத்தை மக்கள் ஏற்கின்றார்களா என்ற வினா எழுப்பப்படவில்லை. ஒரு நாட்டின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்கின்ற செயலாக சர்வதேசம் இதனைப்பார்க்காதா? 1945 வரை நாடே அற்ற நிலையில் இருந்தவர்கள், இஸ்ரேல் தேசத்தை உருவாக்கினர் … அவர்கள்நிலைவேறு நம்முடைய நிலைவேறு… இங்கு நமக்கென்று நாடு உண்டு, நமக்கென்று உரிமைகள் உண்டு அவ்வுரிமைகளில் நிறைவு இல்லை அதனால் அதற்காகப் போராடுகின்றோம் என்பது பொருத்தமானது… வரவேற்கக்கூடியதும். ஆனால் ஒரு நாட்டின் தேசிய கடவுச்சீட்டினை வைத்துக்கொண்டு, பிறிதொரு தேசியத்திற்காக  தகாதமுறையில் சிரமிப்பது முறையானதோ???   

    அறிக்கை - சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும்இ சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க்குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும்; குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ரைள உழபநளெ அடிப்படை சட்டநெறித் தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும். இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்ட பூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு சர்வதேச சட்டமரபுநெறிகள் இடம் தருகின்றன.

    Karuna & Dacklas 01 தமிழர்களின் வினா - இதே தமிழீழ கொள்கைக்காகப் பல போராட்டக் குழுக்கள் அப்போதிருந்து இயங்கிவந்தது , அவர்களை ஒழித்து அழித்து, மேற்குறிப்பிட்ட ஆயுத பலத்தைப்பிரயோகித்து, சித்திரவதை, மக்களைக்கடத்தல், சிறுவர்களை கடத்தல், அரசியற்தலைவர்களை கொலைசெய்தல் போன்ற பலசெயற்பாட்டால் தம்மை நிலைநிறுத்தியதற்கு இன்னும் எந்தவித பதிலும் புலிகளால் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஜனநாயகரீதியில் தம்மை ஈடுபடுத்த முனைகின்றன தமிழ் குழுக்களையும் கட்சிகளையும் நினைவில் கொள்ளவேண்டும். அவர்கள் யாவரையும் விலக்கி எப்படி ஒரு தனியமைப்பாக, நாடுகடந்த தமிழீழத்தை கட்டமைக்க உருத்திரகுமார் தலைமையில் நடவடிக்கை எடுக்கமுடியும்.? அனைத்து போராட்ட அமைப்பின் அல்லது தமிழ் ஜனநாயக அமைப்புக்களின் ஒப்புதலில் இச்செயற்பாடு இடம்பெற்றாலாவது ஓரளவிற்கு இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இச்செயற்பாடு, ஒதுக்கிவைக்கப்பட்ட பணத்தை மேலதிக செலவினைக்காட்டவும், இத்தனைகாலமும் வேறு உழைப்பின்றி வாழ்ந்தோரால் தொழில் புரிவதில் ஏற்படவிருக்கும் சிரமத்தை நிறுத்தவும், மக்கள்மத்தியில் இன்னமும் தம்முடைய செயற்பாடு நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது என்பதனை உறுதிப்படுத்தவும் இரு மாறுபட்ட கருத்தில், புலிகளின் புலனாய்வு ஒருபுறமும், கேபியை சார்ந்தோர் ஒருபுறமும், நெடியவன் தலைமையில் இன்னொரு புறமுமாக பிளவுகள் ஏற்பட்டதோடு, ஆங்காங்கே நிதிகளைத்திரட்டியோர் நிதி முடக்கத்தில் ஈடுபட்டுள்ளமையும் அறியக்கூடியதாக இருக்கின்றது. புலிகள் திருப்பிக் கொடுக்கப்படும் அடிப்படையில் கூட நிதிகளைத்திரட்டினார்கள் அவற்றிற்கு இப்போது ஆப்புத்தான்….  

    அறிக்கை - இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையிலமைந்தவையாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களைஇ பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    CAY6F2X9CAZMDKTVCALMO6QNCAN3OZ98CARV9K9GCAHSJC7VCAIPP3BICAAA8ESKCAN8X1PRCAR6XYSLCAVXHDCZCAULG66OCAPMWSFRCAP99F70CAM4SV2OCAK240IACAQ0KFHICAACWQD7 தமிழர்களின் வினா- ஏற்கனவே அரசிற்கும் புலிகளுக்கும் பல பேச்சுவார்த்தைகளும் முடிவுகளும் ஒப்புதல் அளிக்கப்பட்டும் அதை புலிகள் மீறியதும் கைவிட்டு மீண்டும் சர்வாதிகாரப் போக்கிற்குச் சென்று, இத்தனை இழப்பிற்குப்பின்  ஜனநாயகத்திற்குப் போகின்றோம் என்றால், ஏன்இந்த முப்பது வருட இழப்பு? மேலும் ஜனநாயக கொள்கையில் புலிகளிடம் இருந்து பிரிந்த கருணாவை ஏன் துரொகி என்று புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டது? அப்படிப்பார்க்கும் போது தற்போது புலிகள் தேசத் துரோகிகளாகவும், மக்களை வைத்துப் பந்தாடிய நாசதாரிகளாகவும் அல்லவா இருக்கின்றனர். தமிழ்ச்செல்வன் வெளிநாடுகளுக்குப் பேச்சுவார்த்தைக்கு வரும்போது கள்ளக்கடவுச்சீட்டிலா, தமிழீழக்கடவுச்சீட்டிலா அல்லது இலங்கைக்கடவுச்சீட்டிலா பிரயாணஞ்செய்தார்?...     அப்படியென்றால் எமது தேசியம் எது??? … எனவே தேசியத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் பார்க்க எமக்கு இலங்கை அரசிடம் இருந்து சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவே முக்கியம் தேசியத்தைப்பற்றி பிறகுபார்ப்போம். முதலில் எமக்கு அரசிடம் இருந்து உரிமைகள் சிங்களவர்களைப்போல் கிடைக்க ஜனநாயக ரீதியில் போராடுகின்ற அமைப்புக்களுக்கு புலிகள் ஆதரவு வழங்கட்டும். தற்போதைய ஆளுங்கட்சியில் எதிர்க்கட்சியினர் இணையும் செயற்பாடு, ஜனநாயகப்போக்கிற்குச் செல்ல எத்தணிக்கும் புலிகளுக்கு ஒருபாடமாக எடுத்துக்கொள்ளலாம்.

    அறிக்கை - 1. 1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும்இ 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும்இ பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும்இ 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய
    தமிழர் ஓர் தேசிய இனம்
    வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்
    ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை
    போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது

    தமிழர்களின் வினா - மக்களை ஒன்றிணைப்பது இருக்கட்டும், முதலில் தமிழ் அரசியல் கட்சிகளையும் தமிழ் தலைவர்களையும் தமிழ் அமைப்புக்களையும் ஒன்றிணையுங்கள். மக்கள் தானாகவே இணைவார்கள். அப்போது மேற்குறிப்பிட்ட உரிமைகளில் குறைபாடு எங்கிருக்கின்றதோ அங்கு மாற்றத்தை ஏற்படுத்தலாம். 

    அறிக்கை - 2. 2001ம் ஆண்டு, 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத்தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.

    sri_telo1 தமிழர்களின் வினா - தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏன் உருவாகவேண்டும்? அப்படி ஒரு தேசிய கூட்டமைப்பு உருவாகியபின்னும் வேறு கட்சிகள் காணப்படுவதற்குக்காரணம்??? அதே கூட்டமைப்புடன் நாடுகடந்த தமிழீழ செயற்பாட்டின் தலைமை செயற்படாது, உருத்திரகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது ஏன்???  பிரபாகரனுக்கடுத்த தலைமைக்குத் தகுதியுடைய அம்மானின் கருத்துக்குச்செவிசாய்க்காதது ஏன்? மீண்டும் மீண்டும் தவறின்மேல் தவறுசெய்து மக்களுக்கு அழிவினை ஏற்படுத்துவதற்குப்பதிலாக அரசுடன் ஒத்துபோய் மக்களைக்காக்கும் அம்மானுடன் ஒரு சமரசம் மேற்கொள்ளாதது ஏன்??? தன்னுடைய பிரிவின்போது, புலிகள்  அவருக்கு எதிராக போர்தொடுத்த போது கூட, மோதலுக்கு இடங்கொடுத்து தனது போராளிகளையும், புலிகளின் போராளிகளையும் இழக்காது விலகிக்கொண்டதிலிருந்து பலவிடயங்கள் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறதே!!! இதைக்கூட ஊகிக்காத தாங்கள் எப்படி எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றீர்கள்???

    அறிக்கை - 3.  சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.

    120px-Coat_of_arms_of_Sri_Lanka_svg தமிழர்களின் வினா - இதில் உங்களை நிறுத்தி, வரலாற்றைப்புகுத்த விரும்புகின்றேன்… சிங்கள தேசம் என்ற வார்த்தை தவறானது… சிங்களதேசம் என்ற ஒன்று இல்லவே இல்லை… இலங்கை தமிழர்களுக்குச் சொந்தம் அது முழுதும் அவர்களுடைய தேசம்… தமிழர்களாகிய நாம்தான் விஜயனுக்கு தங்க இடமும் கொடுத்து அரசாட்சியையும் கொடுத்தோம்… நீங்களே வெளியுலகிற்கு தவறான வரலாற்கைக் கொடுக்காதீர்கள்.! ஜனநாயகத்தின்பின் ஏற்படுத்தப்பட்ட தவறினால்தான் எமக்குக்கிடைக்க வேண்டிய உரிமையில் குறைவைஏற்படுத்த அன்றைய சிங்கள ஆட்சியாளர்கள் முடிவெடுத்தனர். அதன்விலைவே இலங்கையின் யாப்பில் தவறுகள் இடம்பெற்றுள்ளது அவற்றைத்திருத்தினால் மட்டும் போதும், தமிழீழம் தானாகவே கிடைத்துவிடும்.   

    அறிக்கை - 4.  உலகனைத்தும் பரவி வாழும் ஈழத்தமிழர் மத்தியில் பன்னாட்டு மதிப்பினைப்பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப் பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும்; தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.

    தமிழர்களின் வினா - பிரித்தானிய அரசபரம்பரைக்கே கல்விகற்பித்த தமிழர்கள்பரம்பரைநாம், எம்மிடம் இல்லாத அறிவா பன்னாட்டு மதிப்பினைப்பெற்ற நிறுவனத்திடம் இருக்கப்போகின்றது? நோர்வே ஆதரவு வழங்கியும் சமாதானத்திற்கு ஒத்துக்கொள்ளாத தலைவனைக் கொண்ட தாங்களா இன்னொருவனை நம்பி தமிழீழத்தை அமைக்கப்போகின்றீர்கள்… வெளிநாட்டு அரசுகளுக்கே அரசியல் கற்பிக்கும் தமிழர்களை விட்டு புதிதாக எங்கு போகின்றீர்கள் தமிழீழத்தை அமைப்பதற்கு???...  30 வருட தமிழீழத்திற்கு போராட்ட முறையினை மாற்றச்சொல்லி கருணா அறிவித்தும் செவிசாய்க்காத தாங்கள் இன்னொருவரை நம்புவீர்கள்!!!...

    அறிக்கை - 5.  ஈழத்தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும்இ நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

    தமிழர்களின் வினா - உலகத்தில் இருக்கும் தமிழ் அமைப்புக்கள் என்கின்றீர்கள் அதில் தங்கள் அமைப்பின் பாகங்கள் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கின்றன… வேறு பொதுத் தமிழ் அமைப்புக்களின் பெயர்கள் எங்கே??? இங்கே நெடுமாறன் எதற்கு??? வைகோ எதற்கு??? அவர்கள் இந்திய மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளட்டும் எமக்கு ஆதரவுதரட்டும் அது போதும்…

    அறிக்கை  - 6.  அரசுகளுடனும், பல்அரசுகள்சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

    தமிழர்களின் வினா - இத்தனைகாலமும் ஒரு தனி அரசாட்சிபுரியும் இலங்கை அரசுடனே ஒத்துப்போக முடியாதவர்கள், பல் அரசு சார்ந்த நிறுவனங்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதமுடியும் என்பதனை நாம் எப்படி நம்பமுடியும்???

    அறிக்கை - 7.  உலகெங்கும் பரவிவாழும் ஈழத்தமிழரின் சமூகஇ பொருண்மியஇ பண்பாட்டு மேம்பாடுகளைத்
    துரிதப்படுத்தல்.

    தமிழர்களின் வினா - இத்தனைகாலமும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகம் இல்லாமல் இல்லை, திடீரென துரிதப்படுத்த எத்தணிப்பதிலும் பார்க்க ஏற்கனவே கலை கலாசார நிகழ்வுகள் தங்கள் அமைப்பையுந்தாண்டி நடந்துகொண்டுதான் இருக்கின்றது அவற்றிற்கு ஆதரவுகொடுங்கள் அது தானாகவே வழரும்… தங்களையும் மீறி பிற அமைப்புக்களில் இருக்கும் தமிழர்களையும் பாராட்டுங்கள் பரிசு வழங்குங்கள் கௌரவியுங்கள்  தமிழர்களின் பொருண்மிய மேம்பாட்டு தானாக உயரும்.

    அறிக்கை  -   தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கெதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லீம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

    தமிழர்களின் வினா- தமிழீழப் பகுதியில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியமை இன்னமும் முஸ்லீம்மக்கள் மத்தியில் நிலைத்திருக்கின்றது, அமைச்சர் முரளிதரன் அவர்கள் முஸ்லீம் மக்களுக்கு தகுந்த அதிகாரங்களை வழங்கி வருகின்றார்… நீங்கள் திட்டம் போடுகின்றீர்கள்… எது சாத்தியமானது? திட்டமா அல்லது  செயலா???

    அறிக்கை - 9.  வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன் பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.

    இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக பன்னாட்டு அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.

    தமிழர்களின் வினா - உள்நாட்டில் வெளிநாட்டில் அரசு அரசாசார்பற்ற அமைப்புக்களுடன் நேரடித்தொடர்பு முதலில் பலப்படவேண்டும்.

    அறிக்கை - இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத்தழிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள்  மீதான வன்முறை சித்திர வதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற் கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.

    தமிழர்களின் வினா - புலிகளுக்கு ஆதரவானவர்களைத்தவிர முன்னைய புலிகள் உறுப்பினர்களும் மற்றைய தமிழர்களும் இலங்கையில் தற்போது நலன்களை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்… விரைவில் அனைத்து இடத்திலும் பதுங்கியிருக்கும் புலிகள் செயலிழக்கும்வரை தமிழர்களை அரசு மீழக்குடியேற்றுவதை மேற்கொள்ளாது என்பது சாதாரண மக்களாலே உணரமுடியும்போது மீண்டும்  மீண்டும் மேற்குறிப்பிடுவது போல், சிங்கள அரசு என்று இனிசுட்டிக்காட்டுவது பொருத்தமற்றது என்று எண்ணத்தோன்றுகின்றது…காரணம் அரசில் இருக்கும் தமிழர்கள் சிங்களவர்கள் அல்லவே!!! மேலும் பல அமைச்சர்கள் எமது தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும். அதிகாரமுடைய அமைச்சுக்கள் தமிழர்களின் கரங்களில் வரவேண்டும் அதற்காக புலிகளின் ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும்.

    அறிக்கை - தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியிலுள்ள அமைப்புகளுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச் செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவியரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உபகுழுக்களை கொண்டியங்கும். இச் செயற்பாட்டுக்குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.
    இச் செயற்பாட்டுக்குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா) பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா) பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா) பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்) கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா) வைத்தியக்கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா) கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா) சட்ட அறிஞர் கரன் பார்க்கர்(அமெரிக்கா) திரு செல்வா சிவராசா(அவுஸ்திரேலியா) திரு போல் வில்லியம்ஸ் (நெதர்லாந்து) பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்) ஆகியோர் இவ் ஆலோசனைக்குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

    தமிழர்களின் வினா - படித்தவர்கள் மட்டும் அறிவாளிகள் என்றால்!, முன்னைய தமிழரசுக்கட்சியில் இருந்தவர்களும், தற்போதுதமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்களும் யார்? இதற்கும்மேலாக பிரபாகரனின் கல்வி தரம் என்ன???

    அறிக்கை - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

    இக்குழு 2009ம் ஆணடு  மார்கழி மாதம் 31ம்; திகதி வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக் குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும். இத் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம். மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி:  info@govtamileelam.org

    New-Logo3தமிழர்களின் வினா - இந்த மின்னஞ்சல் செயலுடையாதா இதனை நிர்வகிப்பதற்கு யாரும் நியமிக்கப்பட்டுள்ளனரா? இம்மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பப்படுமா???

    அறிக்கை - விசுவநாதன் உருத்திரகுமாரன் – இணைப்பாளர் - 16.06.2009

    தமிழர்களின் வினா - இவை அனைத்திற்கும் தாங்கள் தக்க பதிலைத் தரும் பட்சத்தில் சர்வதேசம் திரும்பிப் பார்க்கக்கூடிய வேறு அறிவுடைய, சட்டத்திற்குட்பட்ட, ஏற்றுக்கொள்ளக்கூடிய  பல நடவடிக்கைகளை  தங்களுக்கு அறிவிக்கத்தயாராக இருக்கின்றோம்.  – 10 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுக்கான அபிவிருத்தி நோக்கில் இயங்கிவரும்; “புதிய தலைமுறை ஒன்றியம்” 23-08-2009

    August 19

    புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்…

    புதிய மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்…
    காலத்திற்குக்காலம் எமது செயற்பாடுகளையும் கொள்கைகளையும் சீர்செய்யவேண்டும் என்பதனை அரசியல் நீரோமட்டத்தில் நன்கு புரிந்துவைத்திருக்கின்றனர் சிறீ தமிழீழவிடுதலை இயக்கம். இந்த அடிப்படையில் கடந்த 10ம் திகதியில் இருந்து தமது தமிழ் மக்களின் சமகால அரசியல் திசைவழி என்னும்கணிப்பில் அமைப்பின் பெயரை “புதிய தாயகம்” எனப்பெயர்மாற்றியுள்ளனர். கடந்த காலங்களில் சில விடயங்களை உடும்புப்பிடியாகப்பிடித்துவைத்திருந்த எமக்கு இவர்கள் தக்கபாடத்தினைக்கற்றுத்தருகின்றார்கள். எனினும் இவர்கள் மக்களின் அபிலாசைகளை தீர்க்கும் செயற்பாட்டில் எத்தகைய பங்களிப்பினை இனிச்செய்யப்போகின்றார்கள் என்பதனைப்பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
     
    தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றெடுக்கவும் ஒவ்வொரு தமிழனும் சுதந்திரமாகவாழும் போக்கினைக்கொண்டிருக்கவும் தங்கள் செயற்பாடு முன்னெடுக்கப்பட எமது ஒன்றியம் புலத்தில் இருந்து வாழ்த்தினைத்தெரிவிக்கின்றது.
    புதிய தாயகம் அமைப்பின் பொதுக்கூட்ட அறிக்கையில் இருந்து…PDF
    August 10

    வரலாற்றை திடப்படுத்துங்கள் தமிழர்களின் பெருமைக்குரிய காரியத்தை பாராட்டுங்கள்

     

    இத்தனைகாலமும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஈடுபட்டவர்கள், மேற்கொண்ட பொதுச் சேவைகளில் பொதுச் சேவை இருந்ததோ இல்லையோ பொது வருமானம் இருந்தது. அதாவது, பொது ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட வருமானச் செயற்பாடு நின்றபாடில்லை. மதத்தின் பெயரில் தொலைக்காட்சி சேவைகளை நடாத்துவோர்களே அச்சேவையினை இலவசமாக மேற்கொள்கின்றனர்.

    image கடந்த காலங்களில் பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு பல்வேறு  imageஉண்மைத் தகவல்களை வழங்கினேன். அதற்கு ஆதாரங்கள்கூட சமர்ப்பித்தேன் ஆனால் அது வெளிவரவில்லை. பின்பு அவர்களுக்கு ஒரு ஆலோசனை வழங்கினேன். அது என்னவென்றால், தங்களுடைய தொலைக் காட்சிச் சேவையினை பல தமிழர்கள் புலத்தில் இருந்து பார்க்கின்றமையால் தங்கள் தொலைக் காட்சியினை மக்களுக்கு இலவசமாக வழங்குமாறும், தங்களுக்குத் தேவையான நிதியினை வேறுவழியால் திரட்டிக்கொள்வதற்கு வழிசமைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது என்பதனையும் தெளிவு படுத்தினேன்.
    இவ்வாறு தாங்கள் இலவசமாக தொலைக்காட்சிச் சேவையினை நடாத்துவதால், இலங்கை அரசு தமிழர்களுக்கு வழங்காத சர்வதேச தமிழ்ச் சேவையினைத் தாங்கள்  வழங்குவீர்களேயானால், அச்சேவை அடிமட்டத் தமிழர்களுக்கும் போய்ச்சேரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்காத உரிமைகளை எடுத்துக்காட்டி இப்போராட்டத்திற்கான நடவடிக்கைகளின் இழப்புகளைத் தவிர்க்க முடியும் என்பதனையும் தெரியப்படுத்தினேன். அதை அவர்கள் தமது கொள்கைக்குமாறுபட்ட கருத்தினைத் தெரிவிப்பதாக எண்ணி புறந்தள்ளிவிட்டனர். ஆனால் image தற்போது பல தொலைக்காட்சித் தளங்கள் இலவசமாக இயங்குகின்றமையால் தமது நிலை அப்பாவித்தனமாக போனதன் காரணத்தால் தாமும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    இதே செயற்பாட்டைத்தானே முன்பு அறிவுறுத்தினேன். ஏன் அவற்றின் நன்மைகளை ஏற்க மறுக்கின்றனர்.
    பல தமிழ் சேவைகள் தனித்தனியே இயங்குவதற்குப்பதிலாக, தனித்தனிப்பெறுமதி உடைய அட்டைகளை விற்பதற்குப்பதிலாக ஒரே அட்டையாக குறைந்த விலையில் சாதாரண மக்களும் சேவையினைப் பொற்றுக்கொள்ளும் வகையில் அனைத்து ஊடகச்சாதனங்களும் இணைந்து இருந்து, பொது பங்களிப்பினைச் செய்தால் என்ன?
    அரசியல் கட்சிகளிலும் இணைந்து செயற்பட விருப்பம்இல்லை, பொதுச் சேவைகளிலும் இணைந்து imageசெயற்பட விருப்பம் இல்லை,  நாட்டை மட்டும் எப்படி ஒன்று சேர்ந்து ஆட்சி செய்யமுடியும்.

    இத்தாலியில் முதன்முதலாக   நாவல் ஒன்றை வெளியிட்ட ஒரு எழுத்தாளன். அதனை விமர்சிப்பதற்கு அப்போது சிறப்பு விருந்தினராக அவ்வெழுத்தாளனால் புலிகள் அமைப்பின் சார்பில் ஒருவரை கௌரவித்து அழைக்கப்பட்டது. 172 பக்கமுடைய ஒரு நூலை உருவாக்க தனிநபர் ஒருவருக்கு எத்தகைய நிதிச்சிக்கல் இருக்கும,; எத்தனை சிரமங்கள் வேலைப்பழு இருந்திருக்கும் அவற்றையுந் தாண்டி அதனை, அவர்களின் அல்லது வேறு அமைப்பின் அனுசரணை இல்லாது வெளியிடுவதென்றால் சாதாரண விடயமல்ல. எனினும் அது வெளியிடப்பட்டது. அதற்கு அவர்கள்சார்பில் விமர்சனமும் செய்யப்பட்டது. அதில் விமர்சித்தவர், இந்த எழுத்தாளன் தம்மைப்பற்றி என்ன எழுதியுள்ளான் என்று பார்த்துவாருங்கள் என்று அனுப்பப்பட்டதாகவும், நூலில் தேசவிடுதலைக்கா மரணித்தவர்களை பாராட்டி எழுதியிருந்ததை அறிந்தும் இன்றுவரை அந்த எழுத்தாளனை  சிறப்பித்ததாக இல்லை. இந்த வெளியீடு 2003ல் இடம்பெற்றது . அதன்பின்னர் அந்த எழுத்தாளன் இத்தாலியில் இருந்து இன்றுவரை அதாவது 2009ல் பல நூல்களை வெளியிட்டிருந்தும் அந்த எழுத்தாளனையோ அவரின் நூல்களையோ, தமிழீழ அரசை அமைக்க போராடிய அமைப்பு கண்டுகொள்ளாதது, தமிழர்களின் சொத்தினையும்  மற்றும் வரலாற்றினையும்  புதைக்கின்ற, அழிக்கின்ற செயல் என்பது கற்றோருக்கு நன்கு தெரிந்தவிடயம்.

    அந்த எழுத்தாளனுடைய நாவல் ஒன்று இத்தாலிமொழியில் மாற்றப்பட்டதும் அதற்கு இத்தாலி அரசின்சார்பில் பாராட்டுகிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த எழுத்தாளன் வேறு யாருமல்ல வெந்த அனுபவங்களுடன் இதை எழுதிக்கொண்டிருக்கும் நானேதான்.

    “நல்லதோர் வீணைசெய்து அதை நலங்கெட புழதியில் எறிவதுண்டோ???”

    இத்தாலியில் வாழ்பவர்களுக்குத்தெரியும்,  எனது பொதுச் சேவைகள்பற்றி. கடந்த பத்துவருடத்திற்கும்மேல் எனது சேவை மூலம் ஏராளம் தமிழர்கள் மட்டுமன்றி வேற்றுநாட்டவரும் பலனடைந்துள்ளனர்.  இதற்கு என்னுடன் பலத்த அரணாக நின்று இன்றுவரை ஊக்கம் கொடுத்துவரும் எனது மனைவியை மதித்துப்பாராட்டாமல் இருக்க முடியாது. நண்பர்கள் பலர் வந்துபோனர், ஆனால் தொடர்ச்சியாக எனது வெற்றிகளிலும் எனக்கேற்பட்ட எதிர்ப்புகளிலும் எனக்குக்கை கொடுத்த அவர்களுக்குத் தமிழர்கள் சார்பில் தலைவணங்குகின்றேன். எனக்கு ஏற்பட்ட அறிவுப்பசிக்கும் பொதுச்சேவைத் துடிப்பிற்கும் பல பின்னடைவுகளை ஏற்படுத்தியதோடு அதனைமுறியடிக்க அவமானங்களையும் வதந்திகளையும் அமைப்பாகச் செயற்பட்டோர் மேற்கொண்டதன் விளைவே இன்று “புதிய தலைமுறை ஒன்றியம்” என்ற அலுவலகம் இத்தாலியின் பலபாகங்களிலும் செயற்படக்காரணம். எனவே எம்மை உதார்சீனப்படுத்திய அமைப்பிற்கும், ஊடகங்களுக்கும் எமக்கு எதிர்ப்பினைத்தூண்டிவிட்ட தமிழர்களுக்கும், வஞ்சகவலை வீசிய நண்பர்களுக்கும் எமது ஒன்றியத்தின் மூலமும் எனது மூலமும் நன்மையினைப் பெற்றநூற்றுக்கணக்கானவர்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

    இதனை இங்கு தெரிவிப்பதற்குக் காரணம் உண்டு, எமக்கு வேண்டியது விடுதலை என்றால், அது எமது எதிரியால் கிடைத்தாலும் அதனை மக்கள் பலரின் நன்மை கருதி பெற்றுக் கொண்டே ஆகவேண்டும். இங்கு தற்பெருமைக்கு இடமில்லை. அதேபோன்று திறனும், அறிவும், முயற்சியும், விவேகமும், ஆழுமையும் உள்ளவர்கள் எதிரியாக இருந்தாலும் அவர்களைப்பாராட்டி கௌரவித்தே ஆகவேண்டும். அப்படியென்றால் எமது உறவுகளுக்கு…?!  எமது எதிரி என்பதற்காக அவனுடைய திறமையினை குறைத்து மதிப்பிடுதலோ ஏழனஞ்செய்தலோ தகாதது.

    கருணாவின் சாதனைகள் விடுதலைப்புலிகளுடன் இருக்கும்போது பாராட்டிற்குரியதும் பெருமைக்குரியதும் என்றால், அதில் இருந்து பிரிந்ததன்பின்னர் அப்பாராட்டுக்கள் மறக்கப்படக்கூடியதல்ல மறுக்கப்படக்கூடியதுமல்ல. பாரட்டுக்கள் எப்போதும் பாராட்டுக்களே!!!     …. தொடரும் …

    August 09

    கே.பி புலிகள் ஆதரவாளர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டாரா???

     

    தமிழ் மக்களின் பணதில் தனது வாழ்க்கையினைச் செலுத்தியோர் எத்தனையோ பேர் திகைப்பில் இன்று காணப்படுகின்றனர். அத்தோடு புலிகளின் பெயரைச் சொல்லித்தம்மைத் திடப்படுத்தியவர்கள் இனி தமது நடை உடை பாவனைகளை மாற்றியாகவேண்டும். மக்களின் எதிர்பார்ப்பு என்பது வேறு, மக்களின் உரிமை என்பது வேறு, மக்களுக்காய் தம்மை அர்ப்பணித்து தமது உயிரை இழந்த ஆயிரக்கணக்கானோரை பலிகொடுத்த செயல் சுயநலப்போக்குடையதாக மாற்றமடைந்துள்ளது. கே.பி. யின் செயலால் மேலும் தமிழர்களின் மிஞ்சியிருந்த நம்பிக்கையும் போய்விட்டது என்றால் அது மிகையில்லை.

    கேபி பிடிபடக்காரணம் அவருடைய கவனக்குறைச்சலா அல்லது இலங்கை புலநாய்வுத்துறையின் முயற்சியா அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் கேபியை தலைவராக்கவிரும்பாதவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டாரா? இதற்கான பதில் அடுத்து வெளிவரவிருக்கிறது தொடர்ந்தும் எமது இணையத்தைப்பாருங்கள்.

    பிரபாபின் இறுதிக்கட்ட அறிக்கைகள் எங்கே??? பிபாவின் மரணத்தில் சதி இடம்பெஙற்றமைக்குக் காரணம் கேபியா??? 81ம் ஆண்டுக்குமுன்னர் பிரபாவுடன் மிகநெருக்கமாக இருந்தவர்களில் கருணாவும் கேபியுமாவார்கள் அன்றாடம் இறப்பினைக்கண்டு கொண்டமக்கள் இப்போது நிம்மதியான ஒளியினை எதிர்பார்க்கின்றார்கள் என்றால் அது கருணா என்ற தனிமனிதனால்தான்.

    இத்தாலியில் புலிகளுக்கு ஆதரவானவர்களைப் புலநாய்வுத்துறையினர் கைதுசெய்தபோது, தமிழ் தேசவிடுதலைக்காக நமது பங்களிப்பு என்ற ரீதியில் பிடிபட்டவர்கள் தமது தலைமைத்துவங்களைக் காட்டிக்கொடுப்பில் அவர்கள் ஈடுபடவில்லை.

    ஆனால் தலைமைக்கு ஆசைப்படுவோர் தமது மக்களை ஆதரவற்றுக் கைவிட்டநிலையில்,  காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டடிருப்பது தமிழினத்தின் கேவலத்தைக்காட்டுகின்றது. இலங்கை அரசிற்கு ஒரு அறிவித்தலை விட விரும்புகின்றேன். தமிழர்களின் அபிவிருத்திக்கு புலிகளின் ஆதரவில் திரட்டப்பட்ட நிதி அனைத்தையும் சேர்த்தாலே பாதி துன்பத்தை துடைக்கமுடியும். கேபி யிடம் இருக்கும் தொகைப்பணத்தின் விபரத்தினையும், மேலும் உலகம்முழுதும் பரவிக்கிடக்கும் பெருந்தொகையான பணத்தையும் திரட்டினாலே மக்களின் பாதிப்பினை ஈடுசெய்யும் பெரும் பாரம் குறைந்துவிடும்.


    சாதாரண அமைப்புக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கலைநிகழ்ச்சிகள், அறிவுரீதியிலான செயற்பாடுகளால் தமக்கு வேண்டிய நிதிகளைத்திரட்ட முயன்றாலும் அது போதாமல் இருக்கும்போது, உலகளாவிய ரீதியில் தொழில் அற்றநிலையிலும் புலிகளால் வாழமுடிகின்றது என்றால்???


    புலிகள் தொடர்பாக தத்துவ எழுத்தாளர் என்று (UNGA) “புதிய தலைமுறை ஒன்றியத்தால்” பெருமைப்படுத்தப்பட்ட அருகனின் அவர்களின் 2006ல் “மலருமா தமிழீழம்”  என்ற நாவலில்  இதுதொடர்பான பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. அதன் பகுதி பின்வருகின்றது …

    அருகனின் “இலங்கையின் போராட்ட காலத்தையும் அதன் இழப்புக்களையும் கணக்கிட்டுப் பார்த்தால், தமிழீழப் போராட்டத்திற்காக இருபக்கத்திலும் இழப்பு அளவுக்கு மீறியதாகவே காணப்படுகிறது. பொருட்சேதங்களை விட்டுவிடுவோம், உயிர்ச்சேதங்களைத் தொட்டுப்பாருங்கள். எமக்குள்ளே கருத்து வேறுபாட்டில் இழக்கப்பட்ட உயிர்கள், அதிலும் இழக்கப்பட்ட புத்தி ஜீவிகளை ஒப்பிட்டுப் பாருங்கள்…!

    “சந்தர்ப்பங்களும் சாமர்த்தியங்களும் சாய்ந்து கொடுக்காத போது, உண்மையும், அறிவும் பலன் குன்றிப் போகிறது.”

    ஒரு சென்ரி மீற்றர்  கோடு ஒன்றைப் போட்டு விட்டு அதனைத் தீண்டாமல் அக்கோட்டினைப் பெரிதாக்கு என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் அரைசென்ரிமீற்றர் கோடு போட்டாராம். மற்றைய கோடு போடுமட்டும் முன்னைய கோடு சிறிதாகத்தான் இருந்தது; இன்னொன்றோடு ஒப்பிடும் போதுதான் அதன் தன்மை புலப்படுகிறது. அது போலத்தான் உலகத்தில் ஏராளம் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    ஆரம்ப காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வோர் தேசத்துரோகிகள் என்று கருதப்பட்டு கவிதைகள் பல வெளிவரக்கண்டேன்; அவற்றிற்குப் பாராட்டும் கொடுத்துப் பட்டமும் கொடுத்தார்கள். ஆனால், அக்காலத்தில் இருந்தே எனது கவிதைகளில் வெளிநாட்டுக்குச் செல்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்கள் சந்ததிதான் ஈழத்திற்கு மிஞ்சப்போகிறது என்றும், வெளிநாடுகளில் இருந்தே எமது வரலாற்றைச் சித்தரியுங்கள் என பல்வேறு கவிதைகள் கட்டுரைகள் எழுதினேன்; அப்போது அது மதிக்கப்படவில்லை. (இருவது வருடத்திற்கும் முன்னர்)

    இப்போது நிலமை எப்படிப்போகிறது…

    வெளிநாடுகளில் இருந்து குவிகின்ற பணம் தான் போராட்டபின்னணிக்கான வியாபாரத்தைத் தோற்றுவித்துள்ளது.

    பல்வேறு இயக்க அமைப்புக்கள் தோன்றுவதை அக்காலத்தில் இருந்தே பலம் பொருந்திய இயக்க அமைப்புக்கள் எதிர்த்து வந்தன. ஆனால், பல்வேறு தொடர்புச் சாதன இலாப அமைப்புக்கள் தோன்றிவருவதையும், அவை மக்களுக்கு வழங்கிவரும் தொடர்புச் செய்திகள் அதிக செலவில் அமைந்த போதிலும், அவற்றைக் கண்டிக்கவோ அல்லது ஒண்றிணைத்து நல்ல சேவையாகத் தொகுத்து வழங்கவோ ஏன் இவ்வமைப்புக்கள்  முன்வரவில்லை.    

    “சிறு சிக்கலற்ற விடையத்திலே ஒத்துப் போகாதவர்,
    எப்படி பெருஞ்சிக்கலான விடையத்தில் ஒத்துப்போவார்”

    எவ்வளவோ கஸ்டப்பட்டு அசாதாரணமாக, நாட்டுச் சூழல் காரணமாகவோ, குடும்பச் சிக்கல் காரணமாகவோ ஒருவன் வெளிநாட்டுக்குள் புகுந்து, அவன் சிறையில் அன்னியன் கையில் அகப்பட்டுக் கிடக்கிறான். இதனைக் காரணமாக வைத்து அமைப்புக்களின் சார்பில் உள்ளவர்கள் அவர்களை வெளியில் எடுத்து விடுவதாகச் சொல்லி பேரம் பேசுகிறார்கள். அகப்பட்டுக் கிடப்பவர்களை பயமுறுத்தி அவர்களை, புரியாத மொழிக்குள் இருக்கும் காரணத்தால், திண்டாட வைக்கிறார்கள். சாதாரணமாக அந்நபரை வெளியில் விட்டதும் இவர் வெளியில் வந்ததற்குத் தான்தான் காரணம் என்று சொல்லி 1000€ கறந்து விடுகிறார்கள். இது அமைப்பின் கணக்க்குள் போய்ச் சேருவதில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. அமைப்பும் இது போன்ற பல தவறுகளைக் கண்டு கொள்வதில்லை. காரணம், அவரைப்போன்று செயற்படுவதற்கு இன்னொருவர் கிடைக்கவல்லவா வேண்டும்.

    சரி, ஒரு முக்கிய விடையத்திற்கு வருவோம் தமிழீழம் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இல்லை தமிழீழத் தனிப் பிரகண்டணம் செய்யப்பட்டதாக வைத்துக் கொள்வோம். உலகரீதியில் அதற்கு ஏற்படும் மாற்றங்களையும் உலகரீதியில் அவை அமைப்பதற்குள்ள சட்டங்களையும் பார்க்கும் முன் ….

    வீதாசாரத்தில் உலக ரீதியில் தமிழர்களைப் பார்க்கும் போது, இலங்கையில் உள்ள தமிழர்களிலும்பார்க்க அதிகமாக வருங்காலங்களில் புலத்தில் அமைந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற அளவிற்குப் போகிறவேளையில், தமிழர்களுக்கான அதாவது, ஈழத்ததூதராலயம் என்ற ரீதியில், திழீழவிடுதலைப்புலிகள் ஏற்படுத்தப் போகவிருக்கும் அலுவலகங்களைப் பற்றி யாராவது சிந்தித்ததுண்டா? எமது தேவைகளுக்கு இலங்கை அரசிடம் நாடி நின்றது போல் இனி எங்கு போவது? கடவுச் சீட்டுக்கள், விசாக்கள், மற்றும் ஆவணங்கள்… இவற்றிற்கு நாம் கட்டவேண்டிய கொடுப்பனவுகள் இலங்கை அரசிற்குக் கொடுத்ததை விடக் குறைவாகவா கொடுக்கப் போகிறோம்?... இதற்கான தகுதிவாய்ந்த அதிகாரிகளை வேற்றுநாட்டவரிடம் இருந்தா கடன் கேட்கப்போகிறார்கள்?...

    இலங்கை அரசிடம் இருந்து மீட்டு, நம்மை நாமே கேவலப்படுத்தப் போகிறோமா? அல்லது, இலங்கை அரசு வழங்கிவந்த சேவைகளிலும் பார்க்க பன்மடங்கு புனரமைக்கப்பட்டு கிடைக்கப்போகிறதா? இதையும் பொறுத்திருந்து பார்ப்போம் என்று நையாண்டிச் சாட்டுச் சொல்லும் மக்கள்மத்தியில் எதைச் சொன்னாலும் எடுபடப் போவதில்லை.

    வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் கொஞ்சநெஞ்ச கஷ்டங்களாபட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இவற்றையெல்லாம் யார் தீர்ப்பது? தமிழர்களுக்காகவும் தமிழீழத்திற்காகவும் போராட்டத்தில் முன்னணியில் நின்று, இப்போராட்டத்திற்கு மக்களின் பங்களிப்பைக் கேட்டு கொள்ளும் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்கள் தாம் கேட்கவேண்டும். இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நீதி, உலக ரீதியில் இருக்கும் தமிழர்களுக்கு ஒரு நீதியா?

    “உயிர், என்னதான் செய்தாலும் மனிதநேயத்தின்  முன் ஒன்றுதானே!”

    ஆரம்பத்தில் பல இடங்களில் தமிழர்களின் வளர்ச்சியினைப் பாராட்டியிருக்கிறேன். எனினும், நாம் வளர்கிறோம் என்றும், எமக்கு மக்கள் பலம் அதிகம் என்ற வைராக்கியத்திலும், நாம் வேறுநாட்டுச் சட்ட திட்டங்களுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதனை வெளிநாட்டில் இருப்போர் மறந்து விடக்கூடாது. அதன் கவனக்குறைச்சல் மேலும் தமிழர்களின் வாழ்விற்குப்பங்கம் விளைத்தாலும் விளைக்கலாம்.

    ஒரு முறை இத்தாலியில் இருக்கும் ஒரு சேவை அமைப்புடன், தமிழீழத்திற்காகப் போராடும் அமைப்புச் சார்ந்த முக்கிய பிரமுகர் சிலரும் ஒன்று கூடலில் இருந்த போது, தமிழர்களுக்கென தமிழர்களிடம் இருந்து பணம் திரட்டுவது தொடர்பாக பேசப்பட்டபோது அந்த இடத்தில் எழுந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

    “தமிழீழத்தில் இருக்கும் கஸ்டப்பட்ட மக்களுக்காக நீங்கள் இவ்வளவு அக்கறையுடன் செயற்படுவது பாராட்டக் கூடியது. எனினும், இங்கிருக்கும் ஒருசிலர் (இத்தாலியில்) அவர்களைப் போல் சிரமப்படுகின்றனரே அவர்களுக்கு…?” என்று இத்தாலியில் உள்ள சேவை அமைப்புக் கேட்டபோது;
    “அது அவர்களின் தலையெழுத்து- அவரவர் தேடிக்கொண்டது, நாங்கள் அங்கிருப்பவர்களைத்தான் பார்ப்போம்” என்று பிரமுகர் சார்பில் வந்தவர் அருவெறுப்புடன் பதில் சொன்னார்.

    “இங்கிருப்பவர்கள் நல்லா இருந்தால் தானே அவர்கள் மூலமாய் மற்றவர்களுக்கு உதவமுடியும்” என்று மீண்டும் கேட்டபோது…

    “அது எங்கட வேலையில்லை” என்று சம்மந்தமில்லாது எதையோ பேசத்தொடங்கினார் அவர்.

    இவர்களை நம்பி எப்படி தமிழீழத்தை ஒப்படைப்பது?
    இவர்களை நம்பி எப்படி ஆவணங்களை ஒப்படைப்பது?
    இவர்களை நம்பி எப்படி அதிகாரங்களை ஒப்படைப்பது?
    இவர்களை நம்பி எப்படி அலுவலகங்களை ஒப்படைப்பது?...

    இவர்களா வருங்காலத்தில் து}தராலயங்களில் அமரப் போகின்றனர்?
    இவர்களா ஆவணங்களில் ஒப்பமிடப் போகின்றனர்?
    இவர்களை நம்பியா 30 வருத்திற்கும் மேற்பட்ட போராட்டம் இடம் பெற்றது?
    இவர்களை நம்பியா எமது உறவுகளைப் பறிகொடுத்தோம்?

    தமிழீழ விடுதலைப் புலிகளுக்கென்று தமிழீழத்தில் தனி கௌரவம் கொடுக்கப்படும் போது இவ்வாறானவர்களினால், அந்த கௌரவத்தில் கறை விழுந்து விடாதா?

    இத்தாலியில் உள்ள ஒரு சில கேவலமான எம்மவரின் வாழ்க்கை முறையினை முறையிட விரும்புகிறேன். காரணம் இவை சீர் செய்யப்படவேண்டும் என்பதற்காக…

    (இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் சின்னங்கள் நல்லதொரு எடுத்துக் காட்டுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன என்பதனைக் கருத்திற் கொள்க.)”
    என்று அந்த நாவல் செல்கின்றது. எனவே இந்த நாவல் தவறான பாதையில் சென்றுகொண்டிருந்த புலிகளின் புலத்து ஆதரவாளர்களுக்கு தலைவலியாக இருந்தது. எனவே இந்நாவலை புறந்தள்ளினர். இந்நாவலின் பகுதிகளை ஏற்றிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் அவர்கள்கையில் என்பது திண்ணம். – தொடரும்.