Arugan's profileஅருகன்PhotosBlogListsMore Tools Help
    August 16

    Tantissime persone a casa mia - F.J.Jennifer

     

    Tantissime persone a casa mia

     

     Il giorno 24-07-2009 è successo un fatto straordinario a casa mia. Di colpo si sono presentate tante persone dentro la mia abitazione. Per chiedere aiuto per riempire i fogli per richiedere i passaporti, soggiorni ecc… Alle ore 08:00 in punto abbiamo cominciato e così via fino alle ore 14:00, perché poi abbiamo fatto una pausa per mangiare. Dopo abbiamo ricominciato il lavoro e siamo andati avanti fino alle 19:00, ma peccato che alcuni dei presenti se ne sono dovuti andar via senza fare nulla; in quanto tutti i membri della UNGA erano stanchissimi di aver lavorato per 8 ore di fila.

     

    Embassy a casa mia

     

    Il giorno 25-07-2009 alle ore 08:00 c’erano tante persone davanti a casa mia, per fare tante cose come per esempio: richieste di passaporti, registrazioni di nascite ed altre cose ancora.  Inoltre, c’erano tanti poliziotti per sorvegliare la sicurezza.

    La mattina presto, dopo aver finito di vestirmi, ho guardato in giro per la casa e  ho pensato :-Ma ancora non è venuto nessuno? Per quale motivo? -

    A poco a poco ho capito tutto, che tutta la gente aspettava il proprio turno fuori.

    Io pur avendo 11 anni, volevo aiutare i ragazzi della UNGA, ma non sapevo in che modo potevo essere utile.

    Ma aspettando un po’  ho capito cosa fare; infatti, ho cominciato a dare una mano al signore che era addetto  a fare le fotocopie, ho risposto a tutte le chiamate telefoniche di mio zio MAXIMIN (ARUGAN) che è anche il responsabile della UNGA, e così via  ad aiutare fino alle 14:00 perché poi noi abbiamo fatto una piccola pausa pranzo e abbiamo ricominciato verso le  ore 16:00 e così  fino alle ore 21:00 di sera, ma anche dopo che noi avevamo finito di mangiare c’erano  due famiglie, una aveva chiesto se poteva collaborare con l’Unione il giorno dopo, invece l’altra per riempire soltanto un foglio.

     

    Embassy vicino alla mia chiesa

     

    Il giorno 26-07-2009 alle ore 10:30 vicino alla  chiesa S. Chiara c’erano tantissimi poliziotti e carabinieri di sicurezza e persone  per fare i passaporti, soggiorni ecc… in questo grande evento, ho partecipato pure io, aiutando sempre a fare le fotocopie di documenti importanti, moduli, ecc…

    Abbiamo fatto la pausa alle 14:00 e subito dopo abbiamo ricominciato. E così via fino alle ore 18:00 perché i funzionari dell’ambasciata dovevano rientrare a Roma.

    Qui tengo a precisare che quel giorno anche io ho fatto domanda del mio primo passaporto e per far ciò ho aspettato pazientemente il mio turno, pur avendo lavorato per UNGA.  Grazie ad UNGA mio padre ha risparmiato le spese di trasporto per Roma, la giornata di lavoro, ecc…

    Secondo me, quella giornata è stata bellissima, e vorrei ringraziare la UNGA e tutti quelli che mi hanno reso partecipe.

     

    Da: Florence Jails Jennifer

    July 07

    திருமதி ஷானா அவர்களே இத்தகுதிக்குரித்துடையவர்

     
    உலகத்தின் பாரிய திட்டங்களில் ஈழத் தமிழர்கள் நடமாடுகின்றமை, தமிழுக்கு மட்டும் பெருமையல்ல ஈழத்தமிழர்களுக்கே பெருமை. இத்தாலி மிகப்பெரிய தொழிற்சங்கத்தில் கடந்த 4வருடங்களாகப்பணியாற்றும்  ஈழத்துத்தமிழ்ப்பெண்மணி, இத்தாலியின் சட்டமாற்றங்கள்தொடர்பாக இத்தாலிய ஊடகத்தில் செவ்விவழங்கியபோது...  இவர் பலமொழிகளைச் சரளமாகப்பேசக்கூடிய திறன்வாய்ந்தவர் என்பதும், தமிழர்களுக்கும் பொதுத்தொண்டிலும் அதிக கவனம் உடையவர் என்பதும் அவருடைய சேவைகளில் இருந்து தெரியவருகின்றது. அத்துடன் பல மேடைகளில் நடனங்களை ஏற்றியவரும் பல கலைஞர்களை மேடையேற்றியவரும் என்ற பெருமையும் ஒருபுறம் உண்டு. அதுமட்டுமல்லாது, பல அரச கருத்தரங்கில் இவர் உரையாற்றியிருக்கின்றார். இவர் தொடர்பாக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் முன்பே வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தமிழர்களுக்கு இத்தாலி சட்டமாற்றங்களை அறிவித்து அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்கூட்டியே ஆலோசனைகளையும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யார் அவர்.... திருமதி ஷானா அவர்களே இத்தகுதிக்குரித்துடையவர்.
     
    தற்போது மிகப்பிரபல்யமாகப்பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தாலிழய சட்டமாற்றம் தொடர்பாக அவர் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியை இங்கே காணலாம்.  
     
    தகவல் ஒன்றிய வெளியீட்டு சிறப்புப்பிரிவு
    June 26

    மைக்கேல் ஜாக்சன் காலமானார்!!????

    ஜாக்சனின் மரணம்

    பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் காலமானார் !!

    பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் இருதய கோளாறு நோயால் சமீப காலமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று (26) வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் அவர் இறந்து விட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டிஎம்இசட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையும் அவரது இறப்பை உறுதி செய்துள்ளது. மருத்துவமனையின் முன்பு அவரது ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளனர். ஜாக்சனின் மரணம், அவரது ரசிகர்களை மீளாத சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

    March 13

    தொழில் அற்றோர்களுக்கு புதிய உதவித்தொகை

    இத்தாலியில் தொழில் அற்றோர்களுக்கு புதிய உதவித்தொகையினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது இதுதொடர்பாக மேலதிகத் தொடர்பு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம்.
    February 14

    CGIL ஏற்பாடுசெய்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கில் மக்கள்

    இத்தாலி அரசின் சட்டங்கள் வெளிநாட்டவர்களை பாதிப்பது தொடர்பாகவும், தற்போது தொழில் வாய்ப்புக்களில் உள்ள பின்னடைவுகள் தொடர்பாகவும் ஊதியம் போன்ற பல்வேறு விடயங்களுக்காக றோம் நகரில் 13-02-2009ல் தொழிற்சங்கமான CGIL   ஏற்பாடுசெய்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கில் மக்கள் மங்குகொண்டனர்  

    January 08

    தவிர்க்கமுடியாத காரணத்தால்

    தவிர்க்கமுடியாத காரணத்தால் சில நாட்களாக எமது இணையம் வெளியீடுகள் எதையும் மேற்கொள்ளாததையிட்டு வருந்துகின்றோம். கடந்த காலத்தில் இத்தாலி அரசினால் வெளியிடப்பட்ட சட்டத்தின் செயற்பாடுகள் எமது வேலையினை அதிகரித்ததன் காரணம் எம்மை இச்செயற்பாட்டில் பின்னடையச் செய்தது. எனினும் விடுபட்ட பின்னடைவுகளை மீண்டும் தொடருவோம்.
    இவ்வருடத்தில் அனைவருக்கம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு தொடர்கின்றோம்.
    November 17

    தமிழர்களின் அழிவில் வேடிக்கைகள்…

     
    தமிழர்களின் அழிவில் வேடிக்கைகள்…

    விளம்பரபோராட்டம்
    தமிழீழ போராட்டத்தை இத்தனை காலமும் அரசியல் வாதிகளே பயன்படுத்தினர் தற்போது தனிநபர், நடிகர்கள், வியாபாரிகள், திருடர்கள், அமைப்புக்கள் என்று ஆளாளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். துமிழகத்தில் நடக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் பார்க்க ஈழத்தமிழர்களின் நலன்கருதி தமிழகத்துத்தமிழர்கள் cinema_actors-1நடக்கின்றனர் என்று மகிழ்ச்சியுடன் பார்த்தால், அது தமது பிரபல்யத்திற்கு LTTE_021008-1காட்டப்படும் ஆராதனை போன்று காணப்படுகிறது. சேர்க்கப்பட்ட நிதிகளும் உணவுப்பொருட்களும் என்ன ஆனது? இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு எமது ஆலோசனையினைத் முன்கூட்டியே தெரிவித்திருந்தும் அது செல்லாக்காசானது.
    Romeஇன் இலங்கைத்தூதராலய பின்னடைவு
    கடந்த 20-07-2008ல் இலங்கை அரசுடனான சேவையினை நாம் மேற்கொண்டொம். அது நல்லவிதமாக அமைய எமது பலத்த செயவையும், வியர்வையினைச் சிந்தினோம். எனினும்  இன்றுவரை ஆவணங்கள் பூர்த்தியாக்கப்படாமல் 4மாதங்கள் ஆகின்றன எம்மிடம் வந்து சேர்ந்த 300க்குட்பட்ட ஆவணங்களில் 4 மட்டுமே பதில் தரப்பட்டன அதுகூட வெறும் கொன்சுலர் கடிதமும், மொழிபெயர்ப்பும் இன்னும் ஏராளம் ஆவணங்கள் நிலுவையில் நிற்கின்றன இதற்கு முடிவுதான் என்ன?
    தமிழ் அதிகாரிகள் கைபொம்மைகள்…
    இவ்வாறு தமிழர்களுக்கு வழங்கும் சேவையினை முறைப்படி வழங்காது காலதாமதம் செய்வதும் தமிழர்களைத் தகாத முறையில் நடாத்துவதையும் எந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் தீர்த்துவைக்கப்போகின்றனர். றோமில் தமிழ் ஊழியராகக்கடமையாற்றும் அதிகாரிகூட பொம்மையாகிவிட்டார் காரணம் ஏன்???   
    எப்படித் தொடர்புகொள்வது?
    அரச அமைப்புக்களுடன் அல்லது அதிகாரிகளுடன் எப்படித் தொடர்பு கொள்வது? அனுப்பப்படும் ஆவணங்கள் கிடைக்கின்றனவா இல்லையா என்று கூடத்தெரியவில்லை. கட்டணங்கள் கட்டியதற்கான பற்றுச் சுpட்டு இருக்கிறது ஆவணங்கள் பூர்த்தியாகவில்லையே!!!
    November 15

    இத்தாலி தமிழர்களே பொருட்களை வாங்கும் போது...

     
    இத்தாலி தமிழர்களே பொருட்களை வாங்கும் போது...
    கடைகளில் பொருட்களை வாங்கும் போது நன்கு கவனித்து வாங்குங்கள். கடந்த காலங்களில் பல கடைகளுக்குச் சென்று இது பற்றி அலசினோம் அதில் பல்வேறு தவறுகள் கவனக்குறச்சல்கள் இடம்பெறுவதை அவதானித்தோம். அதில் எஜ்சலுரங்க என்னும் கடையில் இறுதியாக நடந்த சம்பவம். எம்மை இதுபற்றித் தெரிவிக்கத்தூண்டியது.
    பொருட்களின் அண்மையில் குறிக்கப்பட்டிருக்கும் விலைக்கும் காசாளர் கணனியினால் பதிக்கப்படும் விலைக்கும் பாரிய மாறுபாடுகள் ஏற்பட்டிருப்பதைக் கண்டு கொண்டோம் மட்டுமல்லாது வெளிநாட்டவர்கள்தானே இத்தnலி மொழிதெரியாது என்ற கணிப்பிலே உங்கள் கருத்தினை சரியாக இருந்தாலும் ஏற்க மறுப்பார்கள் எனவே கவனித்துக் கொள்ளுங்கள்.
    பற்றுச்சீட்டில் ஒருவிலையும் பட்டியலில் பிறிதொரு விலையும் இருக்கக்கண்டோம். பல பொருட்கள் வாங்கும் போது இத்தவறுகள் ஏற்பட வாய்ப்பதிகம் அவ்வாறான தவற்றினால் 5 யூறோக்களுக்கு மேல் இழக்க னேரிட்டது எமது கவனிப்பால் அது மீழப் பெறப்பட்டது.   
    img023img024
    November 05

    இலங்கைத் தமிழ் அதிகாரிகளே பதவியில் இருக்கும் போதே உதவுங்கள்

    போலி அதிகார அதிகாரிகள்...                                                                                                                                 untitled

    தற்கால இலங்கை அரச அதிகாரிகளான திரு. பிள்ளையான்  மற்றும் திரு கருணா அவர்கள் ஆடும் அரசியல் சதுரங்கள்கள் பாராட்டக்கூடியன. இதில் அவரவர் தம்மைப் பிரபல்யப்படுத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு தமது பதவியால் சாதிக்க வேண்டிய சிறு நேரத்தையும் விரையம் செய்கின்றனர். கண்களை மூடித்திறப்பாதற்குள் அதிகாரங்கள் கைநழுவிவிடும் என்பதனை அவர்களுக்கு நினைவு படுத்துகின்றேன். விடுதலைப்புலிகளில் குற்றத்தைக்கண்டு பிடித்தவர்கள் தமக்குள்ளே பிளவினைக்காட்டும் செயலால் அவர்கள் சாட்டிய குற்றங்கள் தகாததென்பதனை அவர்களே அடியெடுத்துக் காட்டுகின்றனர். கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி  எஞ்சியுள்ள தமிழர்களையாவது நிம்மதியாக சம உரிமையுடன் வாழ்வதற்கான பாதைகளைத் திறப்பதற்கு வழிசமைப்பதை விடுத்து இத்தகைய கேடுகெட்ட அரசியல் படுகொலைகள் குற்றச்சாட்டுக்கள் தேவைதானா? பதவிக்காலம் முடிவதற்குள் தங்களால் ஆன சாதனைகளை சாதியுங்கள் எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் தமிழர்கள் பெருமையுடன் வாழ வழிசெய்யுங்கள் –
     
    ஏங்கும்  தமிழர்கள் சார்பில் அருகன்

    BARACK OBAMA 44° PRESIDENTE DEGLI STATI UNITI

     

    in104xhvX_20081105

    வெள்ளை இனத்தவர்களுக்குமத்தியில் ஒரு கறுப்பின வெற்றி

    அமேரிக்காவின் 44வது அதிபராக கறுப்பினத்தவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் பல மாறுதல்களைச் செய்வார் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இது அமேரிக்காவுக்கு மட்டுமல்ல பல ஐரோப்பிய நாட்டிற்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாகும். வெளிநாட்டவர் வெளிநாட்டவர் என்று ஒதுக்கும் இடத்தில் இது மாறுதல் இல்லையா?... எமது தமிழர்கள் கூட ஒற்றுமையினைக்கடைப்பிடித்தால் திழீழம் ஒருபுறம், பிறநாட்டிலும் அதிகாரியாகலாம். என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    October 22

    குறைகள் கூறினாலும் அவைகள் எமக்குப் பாராட்டுக்களே!

    இத்தளம் மேலும் உங்கள் கருத்தினை வரவேற்கிறது. இன்றுவரை பலர் இதன்மூலம் பலனடைந்துள்ளார்கள். எனினும் இதனைப் பிறருக்கும் அறிமுகப்படுத்துவதன்மூலமே எம்மை மென்மேலும் ஊக்கமடையச் செய்கிறீர்கள் என்பதனை கவனத்திற் கொள்க. அனுப்பப்படும் உங்கள் கருத்துக்கள் வீண்போகாது வரலாற்றில் அவைகளும் இடம்பிடிக்க வாய்ப்புண்டு... குறை நிறை அனைத்தும் தயக்கமின்றி வரவேற்கப்படுகின்றன...

    ஆதரவுகளுக்கு நன்றிகள். அன்பன் அருகன்.

    October 08

    இத்தளத்தினை மற்றையதமிழர்களுக்கும் அறிமுகஞ்செய்யவும்.

    இத்தளத்தினை மற்றையதமிழர்களுக்கும் அறிமுகஞ்செய்யவும். இத்தளம் இத்தாலித் தமிழர்களுக்க மட்டுமன்றி ஈழத்தில் வாழ்கின்ற மற்றும் உலகத்தின் அனைத்துப்பகுதியினருக்கும் கைகொடுக்கும். எனவே இதனை பாரபட்சமின்றி அறிமுகப்படுத்தவும் தங்கள் கருத்தினையும் தெரிவிக்கவும். தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் arugan@libero.it

     

     

    October 01

    Discussione su Arugan (Ithil ulla vluththukkal "Rashigapiriya, Rasiharia..." vdivil eluthappatdullathu )

       

    Arugan (Ithil ulla vluththukkal "Rashigapiriya, Rasiharia..." vdivil eluthappatdullathu )

    mUfd; E}y;fs;

    fle;j fhyq;fspy; vd;dhy; ntspaplg;gl;l Mf;q;fSk;

    E}y;fSk;.

    DSCN0651 DSCN0676 HPNX0054 

    xd;wpaj;jpd; Clhf mUfdpd; ntspaPLfs;>

    · ePq;fSk; fzdpapy; 1 (2003)  

    · mEG+jp (2003)

    · ePq;fSk; fzdpapy; 2 (2005)

    · ,Jjhdh kpy;nydpa khw;wk;? (2005) gjpg;G-1

    · ,Jjhdh kpy;nydpa khw;wk;? (2006) gjpg;G-2

    · mHr;rid ,jo;fs; (2007)

    · kfsPH kq;fyk;( rpwg;gpfs;) -2008

    · cjakhF(kh) jkpoPok;!? - 2008

     

    Arugan 2008 Akkam

    Italy il Arugan

    ehSf;F ehs; ,j;jhypapd; rl;lkhw;wq;fSld; ntsptu vj;jzpf;Fk; xNunahU ntg; jsk; ,JthFk;.

    ,jw;F cq;fs; fUj;Jf;fs; vjpHghHf;fg;gLfpd;wd.

    njhlHGfSf;F gpd;Ds;s tpilaq;fis Nehf;fTk;.

     

    Mr. Arugan (Francis Maximin)

    Via N.Iotti n°-3

    Canossa- 42026 (RE) Italy

    ' +39 320 40 31 696

    Regg.N°02280770351

     

    arugan@libero.it

    arugan@hotmail.it

    September 30

    வரலாற்றுத்தகவல்கள்

     

        யூலியஸ் சீசர் பி.தி:-12யுலை
        சீசர் என்றால் சர்வாதிகாரம் படைத்தவன் என்று பொருள்.

        யூலியஸ் சீசரின் மருமகன் -அகஸ்டஸ்

        அகஸ்டஸின் மகன் டைபீரியஸ்

        டைபீரியசின் மகன் ஆசளத்தகுதியற்ற ஒரு கிறுக்கனாக இருந்ததால் தன் உறவுக்காரனானகாலிகூலாவை ஆட்சியில் அமர்த்தினர். இவனும் கிறுக்குத்தனமான செய்கைகளால் ஒருசர்வாதிகாரத்தைச்செய்தவன்

        ஏப்பிறல் 30. 1945.இரவு9.00மணியளவில் இத்தாலியில் முசொலினியும் அவரது மனைவியும் எதிரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

        கிட்லர்.1889இல் ஏப்பிரல் 20தில் ஓஸ்ரியாவில் உள்ள பிறானவ் என்ற இடத்தில் பிறந்தான் 1903ல் தந்தை இறந்தார்.1907இல் தாய் இறந்தாள் (கிளாரா போல்ஸ்).
    1923இல் கிட்லரின் கிளர்ச்சிப் படை பவேரியாவைக் கைப்பற்றியது.பேளினைப்பிடிக்க முனையும் போது பிடிபட்டு லேன்ஸ் பெர்க்சிறையில் ஐந்து வருடம் அடைக்கப்பட்டான் சிறை வாழ்க்கையின்போதுதான் உலகப்புகழ் பெற்ற மைன கெம்ட் என்ற நூலை எழுதினான். 1804இல்நெப்போலியன் உபயோகித்த நாற்காலியில் தான் அமர்ந்து பணியாற்றிவந்தான் ஏப்பிறல் 27ல் கிட்லர் ஈவாப்பிரான் திருமணம் நடைபெற்றது.  1945.ஏப்பிறல் .30இல் தன்னைத்தானே சுட்டுக்கொண்டான் .(மே.05இல் நெப்பொலியன் மரணித்த நாள் அன்று சாவதாயின் பெருமையடைவதாகச்சொன்னான் கிட்லர்.)

        தகவல் வீரகேசரி 04.03.2001 ஞாயிறுஇ
    நெப்போலியன்.;-
    இத்தாலி நாட்டைச் சேர்ந்தவன்
    பிரான்ஸ் சக்கரவர்திதியானவன்.
    1797ல் ஜோசப்பின் என்பவளைத் திருமணம் செய்தான் அப்போது அவனுக்கு வயது 27 அவளுக்கு 32 எனினும் பதிவில் 28 எனஉள்ளது. 
    இவள் முதல் திருமணம் 15 வயதில் நடைபெற்றது.                                                  
    திருமணத்தின் மூன்றாம் நாள் போர்முனைக்குப் புறப்பட்டான்.
    1804 மே 17ல் |இராஜப் பிரமுகர் | என்ற பட்டத்தைப் பெற்றான்.
    1804டிசம்பர் 02 ல் பிரன்சின் சக்கரவர்த்தியாகப் பதவியடைந்தான்.
    1810ல்  ஜோசப்பின் விவாகரத்து                                                                                                                     
    1815ல் பிரித்தானியாவிடம் பிடிபட்டு ||எல்பா|| தீவுக்கு நாடு கடத்தல்.
    1819.மே.05இல் நெப்பொலியன்  ( தற்கொலை செய்து கொண்டான் என்றுநினைக்கிறேன். )மரணித்த நாள்
        1564ல் இத்தாலியில் பிறந்த கலிலியோ கலிலி கணிதம் பௌதீகம் வானியல் ஆகியவந்றில் சிறப்புற்று விளங்கியவர்.
    இவர் 1610 ல் சந்திரனில் கரும்புள்ளிகள் தெரிவதனைஅவதானித்தார்.
    (அவை மலைகளும் பள்ளத்தாக்குகளும்.)
    1642ல் மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

        2000.ஜனவரி26ல் குஜராத் நிலநடுக்கம்
        பெர்நாட் சா பிறந்தது:-26.
        யாழ்ப்பாணம் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது:-23.06.1859.
        முன்னாள் ஜனாதிபதி பிறேமதாசா பிறந்த தினம்:-23.06.1924.
        முன்னாள் தமிழக அரசவைக் கவிஞர் கண்ணதாசன் 24.06.1927பிறப்பு-17.10.1981இறப்பு.
        மோசம்பிக் நாட்டின் தேசிய தினம் 25.யூன்
        ஐக்கிய நாடுகள் சாசனம் கைச்சாத்திடப்பட்டது.26.06.1945.
        கிரேக்க நாட்டில் இருந்து பாரதம் வரை சாம்ராஜ்சியம் அமைத்த மகா அலெக்சாந்தர்:-தோற்றம் கி.மு:-354-கிமு.323.யூன்12.
        நவாலியூர் சோமசுந்தரப்புலவர்:- 29.06.1876-07.07.1953.
        அ.அமிர்தலிங்கம் முன்னாள் தமிழர்விடுதலைக்கூட்டணி செயலாளர்,எதிர்க்கட்சித்தலைவர்,மட்டக்களப்பு எம்.பி. தோற்றம்26.08.1927- மறைவு:-13.07.1989
        விவேகானந்தர்:-12.01.1863-04.07.1902.
        ஆமேரிக்கா சுதந்திர தினம்.1774.0யூலை
        யாழ் நூல் யாத்த முத்தமிழ் வித்தகனார்.விèபுலானந்த அடிகளார்:-27.03.1892-19.07.1947.
        சந்திரனில் அடிவைத்த நீல் ஆம்ஸ:ரோங்20.07.1969
        உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா
        உலகின் முதல் பெண் ஜநாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க
        நேபிள் பரிசு பெற்ற பாரதத்தின் தேசியக்கவி இரவீந்திரநாத் தாகூர் 6.05.1861-7.06.1941
        கம்பர்:-கி.பி –1120-1197
        நெப்போலியன் பனாபட் 15.08.1769-05.06.1821 கடைவியாகத் தோற்ற இடம் வோட்டர்லூ என்னும் இடத்தில். 
        சோக்கிறிட்டிஸ்-ப்ளேற்றோ-அரிஸ்ராட்டில்
        ப்ளேற்றோ தத்துவஞானி சோக்கிறிட்டீசின் மாணவன்
        ப்ளேற்றோவின் மாணவனான அரிஸ்ராட்டில் தத்துவ ஞானி
        கிரேக்க தத்துவ ஞானிகளில் முன்னோடி சோக்கிரட்டீஸ் கிமு.469.-கிமு.399
        அகில உலக புகழ் சிந்தனையாளர் ஏப்ரகாம் கோவூர் 10.04.1898-18.09.1978
        முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன 17.09.1906-01.11.1996
        (புhர்த்தீபன் ) திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தார்.29.11.1963-26.09.1987
        டயானா இங்கிலாந்து இளவரசி கார் விபத்துமரணம்.01.07.1961-31.08.1997
        சுபாஷ் சந்திர போஷ் (நேதாஜி) 23.01.1897-18.08.1940 இது வரலாற்றுப்பதிவாக இருந்தாலும் சுபாஷ் இறந்ததற்கான அத்தாட்சி 2001ஆண்டு லண்டனிலிருந்து வெளியானது.1945.ஆகஸ்;ட் 18ல் ரஷ்சியாவில் பாமோஸ் தீவில் இறந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் லண்டனில் வெளியிட்டார். ஆப்போது அவருக்கு 45வயது என்னதனையும் தெரிவித்தார்.

        ராஜீவ் காந்தி அகாலமரணம்:-20.08.1944-21.05.1991
        தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக 21 அறிவிக்கப்பட்டது.வீரகேசரியில் இடம்பெற்றவை 02.03.2001ல் ஆவை-
    1.அல்கெய்டா(ஒசாமா பின்லேடன் தலைமையிலான குழு சவுதிஅரேபியா.
    2.இஸ்லாமிக் கிகாத் (எகிப்து).
    3.அல் காமஸ் அல் இஸ்லாமியா (எகிப்து)
    4.ஆமட் இஸ்லாமிக் குழு (அல்ஜீரியா)
    5.சாலா பெஸ்ட் குறுப் போ கோல் கொம்பற்.(அல்ஜீரியா)
    6.பாப்பார் கல்சா (இந்தியா)
    7.கராகட் முஜாகிடீன் ( பாகிஸ்தான்)
    8.இன்ரனசனல் சிக் யுத் பெரடேசன். (இந்தியா)
    9.ஜய்ஸ் ஈ மொறட் (பாகி10;தான்.)
    10 லஸ்கார் ரெய்யா (பாகிஸ்தான்)
    11.தமிழீழ வி.புலிகள் (இலங்கை)
    12. கிஸ்புலா
    13. காமாஸ் (பாலஸ்தீனியன்)
    14. பாலஸ்தீனியன் இஸ்லாமிக் நிசாத் (பாலஸ்தீனியன்)
    15.அவு நிமாய் அமைப்பு (பாலஸ்தீனியன்)
    16.இஸ்லாமிக் ஆமி ஒப் எடியன் (ஜேர்மனி)
    17.பீப்பிள் முஜர்டீன்.(ணரான். )
    18.குருடிஸ்தான் வேக்கேர் பாட்டி (துரக்கி)
    19.ருவலுரனறி பீப்பில் லிபரேசன்
    20.இபுஸ்காடி
    21. 17 நவம்பர் ரிவலூரினறி ஆமி. (கிறிஸ்)

    •    வணபிதா தனிநாயகம் அடிகள் (உலக தமிழ் ஆராய்ச்சிக் கழக ஆரம்ப கர்த்தாவும் தமிழ்ப் பேரறிஞ்சரும். 02.08.1913-01.09.1980
    •    மனிதனின் வானவெளி சகாப்தம் ஆரம்பம். 04.10.1957(ரஷ்சியா)
    •    அன்னை தெரேசா  கல்கத்தாவில் மரணித்தார் (அல்போனியா பிறப்பு) 27.08.1910-05.09.1997
    •    சீனக்குடியரசுத்தலைவர் மா.ஓ.சேதுங்  26.12.1893-08.09.1976
    •    கலாயோகி ஆனந்தக் குமாரசாமி (சிறந்த சமூகப்பணியாளன் ) 22.08.1877-09.09.1947
    •    சுப்பிர மணிய பாரதியார் (புரட்சிக் கவிஞர்.) 11.12.1882-11.09.1921
    •    போன் சிவபாலன் (யாழ் மேயர் ) அகாலமரணம் 11.09.1998
    •    புhலஸ்தீனாவும் அஸ்ரேலும் சமாதான உடன்படிக்கை (அமேரிக்காவில் இடம் பெற்றது) 13.09.1993
    •    சுp.சிற்றம்பலம் முன்னாள் தபால் தந்தி அமைச்சர் 13.09.1898-03.02.1964
    •    சேர் பொன் அருனாசலம்  14.09ல் பிறந்தார்.
    •    குமான் இரத்தினம் முன்னாள் நகராதினதியும் சமூக சேவையாளரும் 01.07.1911-16.09.1956
    •    உலகச் சிறுவர் தினம் 01.10.
    •    கொலாம்பஸ் 1492ல் அமேரிக்காவைக் கண்டுபிடித்தார் இத்தாலியர்
    •    லியோனார்டோ டாவின்சி இத்தாலி ஓவியர்
    •    கலிலியோ கலி இததுதாலிய வானசாஸ்திரி
    •    கோலியாத் ஓர் அரக்க இனத்தவன் தாவீது இவனைக் கொன்றான்
    •    மெத்துசெல்லா- 969ஆண்டுகள் வாழ்ந்த ஒருவர்
    •    யூறோ நாணயம் நடைமுறைக்கு வந்தது 2002-01-01
    •   

    September 24

    சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

    சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்

    தளத்திலிருந்து

    ஆக்கர்:சுவாமி விவேகானந்தரின்

    1. வரவேற்புக்கு மறுமொழி - செப்டம்பர் 11, 1893

    அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!


    இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

    இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:


        எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
             இறுதியிலே கடலில் சென்று
        சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
             பின்பற்றும் தன்மை யாலே
        துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
             வளைவாயும் தோன்றி னாலும்
        அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
        அடைகின்ற ஆறே யன்றோ!
    


    இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'


    பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!


    அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.


    2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை? - செப்டம்பர் 15, 1893


    ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.


    ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.


    ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

    'நீ எங்கிருந்து வருகிறாய்?'

    'கடலிலிருந்து'

    'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

    'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.

    கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.

    'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'

    'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.


    காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.


    3. இந்து மதம் - செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டது

    வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.


    யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.


    இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.


    அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.


    தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.


    இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


    இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.


    இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: 'பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.' இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.


    இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, 'நான், நான், நான்' என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? 'இல்லை' என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.


    சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.


    அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?


    ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?


    வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன - ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.


    பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.


    இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.


    இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: 'நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!'


    தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது.


    சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்?


    இந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: 'எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.' உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. 'எனக்குத் தெரியாது' என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.


    ஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.

    September 22

    17-18/09/2008 தொழிலாளர் சங்கத்தின் சார்பில்

    கடந்த நாட்களில் "ஐரோப்பிய ஒன்றியத்தின்" வெளிநாட்டுப்பிரதி நிதிகளுடனான ஒன்று கூடலில் இத்தாலிய "தொழிலாளர் சங்கத்தின் சார்பில் " தலைமைத்துவம் சந்தித்து தமது நிலவரங்களையும் வெளிநாட்டுமக்களின் நிலவரங்களையும் இத்தாலிய அரசின் சட்டதிட்டங்களையும் எடுத்துரைத்தனர். இதில் தமிழர்கள் பிரதிநிதிகளாக  Mr.Maximin  மற்றும்   Mrs.Shana    அவர்களும் பங்குபற்றி சிறப்பித்ததோடு,    Mrs.Shana  அவர்கள் அதற்கான விளக்கங்களை பன்மொழியில் எடுத்துரைத்ததையும் பின்வரும் படங்களில் காணலாம்.

    Immag020 Immag004 Immag006 Immag009 Immag010 Immag012 Immag014 Immag015 Immag017 Immag019 வருகை தந்தவர்களைச் சிறப்பாக விருந்துபசாரத்துடன் திருப்திப்படுத்தியதோடு அவர்களின் சந்தேகங்களுக்கு தக்க தெளிவான விளக்கங்களையும்  Mrs.Elite Shanaஅவர்கள் வழங்கியதையும் இங்கு காணலாம்.

    September 20

    அருகனின் புதிய வெளியீடு

     

    அருகனின் புதிய வெளியீடு - "மலரும் மா தமிழீழம்!?."

    தமிழர்களுடைய பண்டைய ஈழ வரலாறு, யாழ்ப்பாண அரசர்கள், இன்றையதமிழர்களின் நிலை, எதிர்காலமாற்றங்கள் போன்ற தகவல்கள் உள்ளடங்கியது.

    இதன் வெளியீட்டுக்கு ஐரோப்பிய தொடர்புகள் வேண்டப்படுகிறது.

    வெளியீட்டுப்பிரிவு
    UNGA